search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "table"

    • காலையில் தாமதமாக எழும் பழக்கம் அன்றைய நாள் முழுவதையும் சீர்குலைக்கிறது.
    • தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

    அனைத்து உயிரினங்களும் அவசியமான ஒன்று தூக்கம். மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சரியான அளவில் தூங்குவது உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும்.

    * முதலில் தூங்குவதற்கு சரியான நேர அட்டவணையை உருவாக்குங்கள்

    * தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

    * இரவில் தாமதமாக தூங்குவதும், காலையில் தாமதமாக படுக்கையில் இருந்து எழுவதும் நல்ல பழக்கம் அல்ல

    * காலையில் தாமதமாக எழும் பழக்கம் அன்றைய நாள் முழுவதையும் சீர்குலைக்கிறது

    * ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்

    * தூக்கம் மனித செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது தூங்காதவர்களுக்கு வயிற்று நோய்கள் வரலாம்.

    * சரியான ஓய்வு இல்லாதது கண்களையும் பாதிக்கும். மாணவர்கள் இரவில் தாமதமாகப் படிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும் மாறாக, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வதும், அதிகாலையில் எழுந்து படிப்பதும் அதிக பலன் தரும்.

    • மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 3 புதிய வகுப்பறை கட்டிடங்கள்.
    • ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு 50 மேஜை- பெஞ்சுகளை வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டிடங்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, கும்பகோணம் பரஸ்பர நிதி லிமிடெட் சார்பில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு 50 மேஜை- பெஞ்சுகளை மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. வழங்கினார்.

    தொடர்ந்து பொதுமக்கள் நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, அரசு வக்கீல் விஜயகுமார், தலைமையாசிரியர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி மற்றும் பீரோ ஆகியவற்றை வழங்கினார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுநிதியில் இருந்து மாணவர்களுக்கான மேஜை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வடக்குமாங்குடி, சித்தர்காடு, அரசு நலப்பள்ளிகள், கொத்தங்குடி, சாலியமங்களம், அம்மாபேட்டை உள்பட 11 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான மேஜை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கலைச்செல்வன், துணைத்தலைவர் தங்கமணி, சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி மற்றும் பீரோ ஆகியவற்றை வழங்கினார்.

    அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, வடக்குமாங்குடி ஊராட்சிமன்ற தலைவர் கலைச்செல்விகனகராஜ், மாவட்ட கவுன்சிலர் ராதிகா, பள்ளி தலைமை ஆசிரியர் சுசிலா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    அதேபோல் கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் இரா.பழனி முன்னிலை வகித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா அனைவரையும் வரவேற்றார்.

    ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாணவர்களுக்கான மேஜை நாற்காலிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் பஞ்சாமி, ஆசிரியர் முருகன், ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சி.எஸ்.ஐ.ஆர் (யு.ஜி.சி) நெட் தேர்வு -ஜூன் 2022 அறிவிப்பு 11.08.2022 -ல் இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
    • நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு வருகிற 16 -ந்தேதி காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது.

    சேலம்:

    சி.எஸ்.ஐ.ஆர் (யு.ஜி.சி) நெட் தேர்வு -ஜூன் 2022 அறிவிப்பு 11.08.2022 -ல் இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும்

    விரிவுரையாளர் (LS), துணைப் பேராசிரியர் உள்ளிட்ட தகுதி பெற கணினி அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    இதையடுத்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து முதுநிலை அறிவியல் பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு வருகிற 16 -ந்தேதி காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது. 16-ந்தேதி பூமி, வளிமண்டலம், பெருங்கடல்

    மற்றும் கிரக அறிவியல்

    இயற்பியல் அறிவியல் கணித அறிவியல்

    17-ந்தேதி உயிர் அறிவியல், வாழ்க்கை அறிவியல்

    18-ந்தேதி ரசாயன அறிவியல் நடக்கிறது.

    பரீட்சை சம்பந்தமான அட்மிட் கார்டுகள்

    10 -ம் தேதியில் இருந்து என்.டி.ஏ. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணையை கலெக்டர் வெளியிட்டார்
    • தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணைகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, வெளியிட்டார்.தமிழகத்தில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள், உணவு பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேநீர் கோப்கைள் மற்றும் பிளாஸ்டிக் டம்பளர், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக்குகள் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதார கேடு விளைவிக்க காரணமாக இருப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மாற்று பொருட்களை பயன்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களான சணல்பை, துணிப்பை, காகித பைகள், பாக்கு மட்டைத்தட்டுகள், தென்னை, மரத்தலான கோப்பைகள், மரக்கரண்டிகள், பனை ஓலைகளால் ஆன பூஜை தட்டுகள் மற்றும் மண்பாண்டங்களால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் குடுவைகள், அகல்விளக்குகள், மண் சாடிகள், மண்சட்டி ஆகிய பிளாஜ்டிக் பயன்பாட்டின் மாற்றுப் பொருட்களின் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு கலெக்டர் ரமண சரஸ்வதி, வெளியிட்டார்.

    முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் பெரம்பலூர் கிளை சிறையில் இயங்கும் சட்ட உதவி மையத்திற்கு கணினி உள்ளிட்ட பொருட்களை கிளை சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.
    பெரம்பலூர்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிதியிலிருந்து பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பெரம்பலூர் கிளை சிறையில் இயங்கும் சட்ட உதவி மையத்திற்கு கணினி, மேஜை, நாற்காலி மற்றும் சட்ட புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பாலராஜமாணிக்கம் தலைமை தாங்கி பேசுகையில், “இந்த பொருட்களை சிறை வாசிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது குறைகளை உடனுக்குடன் சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கும், சிறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சட்ட புத்தகங்களை படித்து தங்களது திறமைகளை வளர்த்து கொண்டால் குற்றங்கள் குறையும். சிறைவாசிகளின் நலனுக்காகவே மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது.

    எனவே அதனை நல்லமுறையில் சிறைவாசிகள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். இதையடுத்து முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் சட்ட உதவி மையத்திற்கு கணினி உள்ளிட்ட பொருட்களை கிளை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) மஸ்ஹரிடம் வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதி யுமான வினோதா, வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தர ராஜன், அட்வகெட் அசோசியேசன் சங்க தலைவர் முகமது இலியாஸ், முன்னாள் அரசு சிறப்பு வக்கீல் பால்ராஜ், வக்கீல் ஜீவானந்தம், கிளை சிறை உதவி கண்காணிப் பாளர் ராமர், சக்திவெல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×