search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிமலை அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
    X

    புதிய வகுப்பறை கட்டிடங்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    சுவாமிமலை அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

    • மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 3 புதிய வகுப்பறை கட்டிடங்கள்.
    • ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு 50 மேஜை- பெஞ்சுகளை வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டிடங்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, கும்பகோணம் பரஸ்பர நிதி லிமிடெட் சார்பில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு 50 மேஜை- பெஞ்சுகளை மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. வழங்கினார்.

    தொடர்ந்து பொதுமக்கள் நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, அரசு வக்கீல் விஜயகுமார், தலைமையாசிரியர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×