search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Computer"

    • வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது
    • சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் .

    அமெரிக்காவிற்கும் ,சீனாவிற்கும் இடையே தொழில்நுட்ப போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சீன அரசுத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் 'இன்டெல்' மற்றும் 'ஏஎம்டி' சிப்கள், மென்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை சீனா தற்போது செயல்படுத்தி உள்ளது.

    இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சீனா அரசு கணினிகளில் Intel அல்லது AMD செயலிகள் இருக்காது.  மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் வெளிநாட்டு தரவுத்தள மென்பொருளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி, சிப்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது.

    சீனாவின் முக்கிய மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்கனவே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது நாட்டில் சொந்த தயாரிப்பு மென்பொருள்களை பயன்படுத்தினால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தரவுத்தள மென்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.




    இதன் மூலம் சீனாவின் உள்நாட்டு மென்பொருட்கள் உபயோகம் சொந்த நாட்டில் வளர்ச்சி அடையும் என கருதுகிறது.

    மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிராஸசர்கள், ஆபரேடிங் சிஸ்டம்களையே சீன அரசு துறை நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

    இதன் மூலம் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இதன் விளைவாக, சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என  நம்பி உள்ளது.

    • பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன.
    • சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும்.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன. அது மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.

    எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வங்கி இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வங்கிக்குள் புகை வருவதை கண்ட வாட்ச்மேன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் துவாக்குடி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திரு வெறும்பூர், பெல், நவல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

    இதில் வங்கியிலிருந்து அனைத்து கம்ப்யூட்டர்களும் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் பிரசாந்த் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிய வரவும் ஒவ்வொருத்தரும் தங்களது கணக்கின் நிலை தங்கள் நகை அடகு வைத்ததுடன் நிலை கண்டு அச்சம் தெரிவித்துள்ளனர். 

    • கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.
    • இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது.

    தைவான் நாட்டை சேர்ந்த 'ஏசர்' மற்றும் 'அசுஸ்' உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்நாட்டு தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியில் இறக்குமதிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தைவானின் ஏசர் மற்றும் அசுஸ் நிறுவனங்கள் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு உள்ளன. இதுகுறித்து ஏசர் தலைவர் ஜேசன் சென் கூறும் போது, "இந்தியாவில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்."

     


    "எங்களது ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தற்போது 2-வது பெரிய சந்தையாக உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அதிகப்படியான கம்ப்யூட்டர், லேப்டாப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்திய சந்தை மிகவிரைவாக விரிவடைந்து வருகிறது. ஆனாலும் இந்தியா கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது."

    "இந்தியாவில் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிளி உற்பத்தி மட்டுமே நடக்கிறது. எனவே புதிதாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். மேலும் நேரடியாக தொழில் தொடங்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கி உள்ளது."

    "இதன் காரணமாக இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புதிய உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏசர் மற்றும் அசுஸ் டெக் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆப்பிள் M3 சீரிஸ் சிப்செட் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • 24 இன்ச் ஐமேக் மாடலில் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் மேக்புக் ப்ரோ மாடல்களை M3 சிப்செட் மூலம் அப்டேட் செய்த கையோடு 24 இன்ச் ஐமேக் மாடலை முற்றிலும் புதிய M3 சிப் உடன் அறிமுகம் செய்து இருக்கிறது. 2021 மாடலில் M1 சிப் வழங்கப்பட்ட நிலையில், ஐமேக் மாடலுக்கு மிகப் பெரிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. M3 சிப்செட் கொண்ட புதிய ஐமேக் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட இருமடங்கு வேகமானது ஆகும்.

    புதிய மாடலிலும் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே, அதிவேக வைபை 6E வயர்லெஸ் கனெக்டிவிட்டி, அதிகபட்சம் 24 ஜி.பி. யுனிஃபைடு மெமரி, அடுத்த தலைமுறை GPU வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஹார்டுவேர் அக்செல்லரேடெட் மெஷ் ஷேடிங் மற்றும் ரே டிரேசிங் போன்ற வசதிகளை வழங்குகிறது.

     

    ஆப்பிள் ஐமேக் 24 இன்ச் 2023 அம்சங்கள்:

    24 இன்ச் 4480x2520 பிக்சல் 4.5K ரெட்டினா XDR டிஸ்ப்ளே

    ஆப்பிள் M3 சிப்

    8 ஜி.பி. யுனிஃபைடு மெமரி

    256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி

    மேக் ஒ.எஸ். சொனோமா

    பேக்லிட் மேஜிக் கீபோர்டு

    மேஜிக் கீபோர்டு மற்றும் டச் ஐ.டி.

    வை-பை 6E

    ப்ளூடூத் 5.3

    1080 பிக்சல் ஃபேஸ் டைம் ஹெச்.டி. கேமரா

    ஸ்பேஷியல் ஆடியோ

    டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட் 3

    யு.எஸ்.பி. 4, யு.எஸ்.பி. 3.1 ஜென் 2

    இந்திய சந்தையில் 24 இன்ச் ஐமேக் M3 (8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. யுனிஃபைடு மெமரி) மாடல் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று துவங்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 74 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பொதுப்பிரிவில் (முன்னுரிமையற்றவர்கள்) காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    இதற்கு மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விபரங்களை நாகப்பட்டினம் மாவட்ட இணையதளத்தில் www.nagapattinam.nic.in பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பதிவஞ்சலில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், திட்ட செயலாக்க அலுவலக வளாகம், தரைத்தளம், புதிய கடற்கரை சாலை செல்லும் வழி, நாகப்பட்டினம்-611 001 என்ற முகவரிக்கு வருகிற 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • குறைந்தபட்சம் 6 மாத கால கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதற்கு கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பாடத்தில் பட்ட படிப்பு மற்றும் குறைந்தபட்சம் 6 மாத கால கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.

    28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.

    தொடர்புடைய வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும்.

    பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    வருகிற 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, இணை இயக்குனர் / திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்.223, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூர் -613010.மேற்குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையிலான காலி பணியிடங்களுக்கு மாவட்ட தேர்வு குழு வாயிலாக எழுத்துத் தேர்வு 75 மதிப்பெண்களுக்கும் மற்றும் நேர்முகத் தேர்வு 25 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும்.

    எழுத்து தேர்வில் 45 மதிப்பெண்கள் ( 75 மதிப்பெண்களுக்கு 60 விழுக்காடு ) பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலில் இடம் பெறுவார்கள். உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கமுதி அருகே கணினி திருத்த முகாம் நடந்தது.
    • இந்த முகாம் வருகிற 8-ம் தேதி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் சிறப்பு கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் விஷ்னு சந்திரன் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் சேதுராமன் அறிவுரையின் படி, கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில், கிழக்கு வருவாய் ஆய்வாளர் மணிவல்லபன் தலைமையில், கணினி திருத்த முகம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கணினி யில் விடுபட்ட புழை எண் கள், விஸ்தீரன பிழை உள் பட பல்வேறு திருத்தங்கள் செய்து கொடுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கமுதி, செங்கப்படை, தவசிகுறிச்சி சம்பகுளம், சடையனேந் தல்பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர் போன்ற கிராமப் பகுதியில் உள்ள பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் நாகநாதன், அபிராமம் வருவாய் ஆய்வாளர் கலாராணி, கோவிலாங் குளம் வருவாய் ஆய்வாளர் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் அப்பகுதிகளில் சிறப்பு கணினி திருத்த முகாம் நடைபெற்றது.

    இந்த முகாம் வருகிற 8-ம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு வருவாய் ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பள்–ளி–யில் கணினி அறை–யில் இருந்த இன்–டர்–நெட் ரிசீ–வர் கருவி உள்–ளிட்ட கணினி பொருட்–கள் கடந்த சில நாட்–க–ளுக்கு முன்பு காணா–மல் போனது.
    • அதை மர்ம நபர்–கள் திரு–டி–விட்–ட–தாக கூறப்–ப–டு–கிறது.

    சேலம்:

    சேலம் கோட்–டை–யில் மாந–க–ராட்சி மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்த பள்–ளி–யில் கணினி அறை–யில் இருந்த இன்–டர்–நெட் ரிசீ–வர் கருவி உள்–ளிட்ட கணினி பொருட்–கள் கடந்த சில நாட்–க–ளுக்கு முன்பு காணா–மல் போனது. அதை மர்ம நபர்–கள் திரு–டி–விட்–ட–தாக கூறப்–ப–டு–கிறது. இது–கு–றித்து பள்ளி தலைமை ஆசி–ரியை நளினி, டவுன் போலீஸ் நிலை–யத்–தில் புகார் செய்–தார். அதன்–பே–ரில் போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி

    வரு–கின்–ற–னர்.

    • அசுஸ் நிறுவனத்தின் புதிய AIO சீரிஸ் கம்ப்யூட்டர் 7.2 கிலோ எடை கொண்டிருக்கிறது.
    • புதிய அசுஸ் கம்ப்யூட்டரில் 23.8 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

    அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக தனது சாதனங்களை விரிவுப்படுத்தி வருகிறது. உலகளவில் அசுஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. அசுஸ் நிறுவனம் சமீபத்தில் தனது ஆல்-இன்-ஒன் கம்ப்யுட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    இந்த வரிசையில், தற்போது புதிய AIO சீரிஸ் சக்திவாய்ந்த செயல்திறன், ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இவை கம்ப்யூட்டரை அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக மாற்றுகிறது. சக்திவாய்ந்த ஆல்-இன்-ஒன் கம்ப்யூட்டரை வாங்குவதற்கு இந்த மாடல்கள் கச்சிதமான தேர்வாக இருக்கும்.

     

    இந்திய சந்தையில் இதுவரை மிக குறைந்த அளவிலேயே AIO மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த நிலை மாறி இருக்கிறது. புதிய அசுஸ் AIO A5 சீரிஸ் இன்டெல் 13th Gen பிராசஸர்களை கொண்டிருக்கின்றன. புதிய கம்ப்யூட்டர் தலைசிறந்த சவுன்ட் கொண்டிருப்பதோடு, அசத்தலான செயல்திறன் கொண்டுள்ளது.

    புதிய A5 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான DDR4 ரக ரேம் மற்றும் அதிகபட்சம் 512 ஜிபி M.2 NVMe PCIe SSD ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு உயர் ரக ஆடியோ உபகரணங்கள், பிரீமியம் சப்-வூஃபர், அதிக தரமுள்ள ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அசத்தலான மல்டிமீடியா அனுபவம் கிடைக்கிறது.

    டிஸ்ப்ளேவை பொருத்தவரை 23.8 இன்ச் FHD, 1920x1080, 16:9, IPS லெவல் பேனல், எல்இடி பேக்லிட் ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் வைபை 6E, ப்ளூடூத் 5.3, வின்டோஸ் 11 ஹோம் எடிஷன் ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய அசுஸ் AIO A5 சீரிஸ் துவக்க விலை ரூ. 94 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மேக் ப்ரோ அறிமுகம்.
    • 2023 மேக் ப்ரோ மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய M2 அல்ட்ரா பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது M சீரிஸ் பிராசஸர்களுடன் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023) தனது சக்திவாய்ந்த மேக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. புதிய மேக் ப்ரோ மாடலில் M2 அல்ட்ரா சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. M2 அல்ட்ரா பிராசஸர் கொண்ட ஆப்பிள் மேக் ப்ரோ மாடல்களின் பென்ச்மார்க் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி 2023 மேக் ப்ரோ மாடல் வீடியோ எடிட், 3டி ரென்டரிங் மற்றும் அறிவியல் கணினியியல் என்று தொழில்ரீதியாக அதிக திறன் கொண்ட சாதனங்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் M2 அல்ட்ரா பிராசஸர் கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் இதுவரை உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும்.

    M2 அல்ட்ரா பிராசஸரில் 24 சி.பி.யு. கோர்கள், அதிகபட்சம் 76 ஜி.பி.யு. கோர்கள் மற்றும் 32-கோர் நியூரல் என்ஜின் உள்ளது. இதன் மூலம் இந்த பிராசஸர் புதிய மேக் ப்ரோ மாடலை சந்தையில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த கணினியாக மாற்றியுள்ளது. இது எந்த அளவுக்கு சக்தி கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையில் பென்ச்மார்க் டெஸ்டிங் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    அதன்படி கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில், M2 அல்ட்ரா சிப்செட் கொண்ட புதிய மேக் ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டில் 2 ஆயிரத்து 794 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 21 ஆயிரத்து 453 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது. இது முந்தைய தலைமுறை மேக் ப்ரோ மாடலை விட அதிவேகமானது ஆகும்.

    முந்தைய தலைமுறை ஆப்பிள் மேக் ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1,378 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 10 ஆயிரத்து 390 புள்ளிகளையும் பெற்றது. அதன்படி புதிய 2023 மேக் ப்ரோ அதன் முந்தைய வெர்ஷனை விட சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 20 சதவதீம், மல்டி கோர் டெஸ்டிங்கில் 25 சதவீதம் அதிக திறன் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய M2 அல்ட்ரா சிப்செட்டில் இரண்டு M2 மேக்ஸ் பிராசஸர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதற்காக அல்ட்ரா-ஃபியுஷன் ஆர்கிடெக்ச்சர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய 2023 மேக் ப்ரோ மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    • அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது.
    • 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

    சேலம்:

    அரசு கணினி சான்றிதழ் தேர்வு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டின் ஆகஸ்டு பருவ தேர்வுக்கான அறிவிப்பை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

    அதன்படி, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தை பயன்படுத்தி வருகிற ஜூன் 14-ந்தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க லாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்து ெகாள்ளலாம்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா தேர்வுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் கணினி அறிவியல் பட்டதாரியாக இருந்தால் மட்டுமே கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

    ×