என் மலர்

    நீங்கள் தேடியது "Apple"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய ஐபோனை வாங்க பல வாடிக்கையாளர்கள் மும்பை விரைந்தனர்.
    • சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு.

    உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. எனினும், இதனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஐபோன் 15 வினியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 15-ஐ வாங்க காத்திருந்தனர். ஐபோன் 15 கிடைக்க அவர்கள் எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் ஆகும் போது, இரு வாடிக்கையாளர்கள் கோபமுற்றனர். இது தொடர்பாக விற்பனையாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை, மோதலில் நிறைவுற்றது. சம்பவத்தின் போது, ஐபோன் 15 கிடைக்க தாமதமானதால் கடையில் பணியாற்றிய விற்பனையாளரை தாக்கினர்.

    வடக்கு டெல்லியில் உள்ள கம்லா நகர் சந்தையில் உள்ள ஐபோன் விற்பனை மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக ஆமதாபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மும்பைக்கு சென்று புதிய ஐபோனை வாங்க விரைந்தனர் என்று தகவல்கள் வெளியாகின. மேலும் புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்டவைகளை ஆப்பிள் ஸ்டோரில் (பி.கே.சி.) வாங்க வரிசையில் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிள் ‘ஐ போன்’ விற்பனை நிலையத்தில் மணிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் திரண்டதால் முதல் போனை வாங்க நீண்ட வரிசையில் காத்து நிற்க தொடங்கினர்.
    • அகமதாபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மும்பையில் 17 மணி நேரம் வரிசையில் காத்து நின்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் ‘ஐ போன்-15’- ஐ வாங்கி உள்ளார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வரிசையில் 'ஐ போன்-15' நேற்று இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. மும்பை, டெல்லியில் உள்ள ஆப்பிள் 'ஐ போன்' விற்பனை நிலையங்களில் இந்த விற்பனை தொடங்கிய நிலையில், புதிய 'ஐ போன்'-ஐ வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் முதலே குவியத்தொடங்கினர்.

    குறிப்பாக மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஆப்பிள் 'ஐ போன்' விற்பனை நிலையத்தில் மணிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் திரண்டதால் முதல் போனை வாங்க நீண்ட வரிசையில் காத்து நிற்க தொடங்கினர்.

    அந்த வகையில், அகமதாபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மும்பையில் 17 மணி நேரம் வரிசையில் காத்து நின்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் 'ஐ போன்-15'- ஐ வாங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நேற்று மாலை 3 மணி முதல் இங்கு இருக்கிறேன். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரில் முதல் 'ஐ போன்'-ஐ பெறுவதற்காக 17 மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். நான் அகமதாபாத்தில் இருந்து இதற்காக வந்துள்ளேன். முதல் நாளிலேயே இந்த போனை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
    • ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஐபோன் 15 சீரிஸ் முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு துவங்கிய நிலையில், ஐபோன் 15 ப்ரோ மாடல்களை முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களுக்குள் முன்பதிவு செய்யாதவர்கள், அதன் டெலிவரிக்கு பல நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஐபோன்களில் டாப் எண்ட் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் நேச்சுரல் டைட்டானியம் மற்றும் வைட் டைட்டானியம் நிற வேரியண்ட்களுக்கான டெலிவரி நவம்ர் 2-ம் தேதி என்று காண்பிப்பதாக தெரிகிறது.

     

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் டைட்டானியம் புளூ மற்றும் டைட்டானியம் பிளாக் நிற வேரியண்ட்கள் அக்டோபர் மாத மத்தியில் டெலிவரி செய்யப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடலின் வினியோகம் அடுத்த வாரம் துவங்குகிறது. சில நிற வேரியண்ட்கள் மட்டும் அக்டோபர் மாதம் வினியோகம் செய்யப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 900 என்று துவங்குகின்றன. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இந்த விலை இவற்றின் 128 ஜி.பி. மாடலுக்கானது ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.
    • ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைப்பு.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 13 போன்ற மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக குறைத்து இருக்கிறது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பு ஐபோன்களின் 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்களுக்கு பொருந்தும்.

     

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 59 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 99 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 10 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விலை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் ஆன்லைன் வலைதளத்துக்கானது ஆகும். எனினும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன் மாடல்களை இதைவிட குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர ஆன்லைன் வலைத்தளங்களில் சிறப்பு விற்பனையின் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • பழைய ஐபோன் மாடல்கள் விலை குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மெல்ல மாற்றும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் உற்பத்தி இந்தியாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் உற்பத்தியை அடுத்த காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர்) வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் உற்பத்தி தமிழ் நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் நடைபெற இருக்கிறது. ஐபோன் 15-ஐ தொடர்ந்து ஐபோன் 15 பிளஸ் உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

     

    அடுத்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், புதிய ஐபோன்கள் அறிமுகத்தை தொடர்ந்து பழைய மாடல்கள் விலை குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுவிர அடுத்த காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

    பண்டிகை காலத்தில் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களையும் இங்கு விற்பனைக்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி மிகவும் குறைவாக இருப்பதும் இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தி குறைவாக இருக்கும் போதிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கணிசமான அளவு அதிகம் ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபோன் 12-இல் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்சினையை சரி செய்ய வலியுறுத்தல்.
    • ஐபோன் 12 உள்பட மொத்தம் 141 செல்போன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    ஐபோன் 12 மாடலில் இருந்து அளவுக்கு அதிகமான மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுவதால், ஆப்பிள் நிறுவனம் இதன் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ரேடியோ-எலெக்ட்ரிக் அதிர்வெண்கள் மற்றும் பொது வெளியில் பரவும் மின்காந்த கதிர்வீச்சை கவனித்து வரும் தேசிய ஃபிரீக்வன்சி நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பிய அறிக்கையில், ஐபோன் 12-இல் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்சினையை சரி செய்ய வலியுறுத்தி இருக்கிறது.

     

    இது தொடர்பாக ஆப்பிள் வெளியிடும் அப்டேட்களை அரசு நிறுவனம் கவனிக்கும் என்றும், ஒருவேளை இந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்த ஐபோன்களையும் திரும்ப பெற வேண்டியிருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ANFR என்று அறியப்படும் இந்த நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 உள்பட மொத்தம் 141 செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் மனித உடலால் ஈர்க்கப்படக் கூடிய மின்காந்த கதிர்வீச்சு செல்போன்களில் இருந்து எந்த அளவுக்கு வெளிப்படுகிறது என்று சோதனை செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் ஐபோன் 12 மாடலில் இருந்து ஒரு கிலோகிராமிற்கு 5.74 வாட்ஸ் வரையிலான மின்காந்த கதிர்வீச்சு வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஐரோப்பிய யூனியன் அனுமதித்து இருக்கும் ஒரு கிலோகிராமிற்கு 4.0 வாட்ஸ் என்ற அளவை விட அதிகம் ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய டைட்டானியம் டிசைன் கொண்டுள்ளது.
    • ஐபோன் 15 ப்ரோ சீரிசில் உள்ள ஏ17 சிப்செட் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களை தொடர்ந்து ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் டிசைன் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஆப்பிள் ஏ17 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய யு.எஸ்.பி. டைப் 3 போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யு.எஸ்.பி. 3 போர்ட் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டா பரிமாற்றத்தை சாத்தியப்படுத்தும். ஐபோன் 15 ப்ரோ மாடலில் 48MP பிரைமரி கேமரா சென்சார், 12MP 3x டெலிஃபோட்டோ கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 5x டெலிஃபோட்டோ கேமரா, 120mm ஃபோக்கல் லென்த் வசதி உள்ளது.

    ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஸ்பேஷியல் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோக்களை ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் பார்த்து ரசிக்க முடியும். புதிய ஐபோன் 15 ப்ரோ விலை 999 டாலர்கள், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை 1199 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. விற்பனை அமெரிக்காவில் செப்டம்பர் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.
    • ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் 48MP பிரைமரி கேமரா சென்சார் உள்ளது.

    ஆப்பிள் "வொண்டர்லஸ்ட்" (Wonderlust) நிகழ்வில் இந்த ஆண்டிற்கான ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் முறையே 6.1 மற்றும் 6.7 இன்ச் டைனமிக் ஐலேண்ட் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபோன் 15 சீரிசில் மேம்பட்ட புதிய கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 48MP பிரைமரி கேமரா, குவாட் பிக்சல் சென்சார், 12MP டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கேமரா சென்சார்கள் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போர்டிரெயிட் ரக புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. இத்துடன் ட்ரூ டெப்த் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     

    ஐபோன் 15 மாடலில் ஆப்பிள் சிலிகான் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க பிரத்யேக நியூரல் என்ஜின் உள்ளது. இத்துடன் 5-கோர் ஜி.பி.யு., 6-கோர் சி.பி.யு. வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 15 மாடல் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு அல்ட்ரா வைடு-பேண்ட் சிப்செட் உள்ளது. இத்துடன் 5ஜி, அழைப்புகளின் போது உங்களின் குரல் தெளிவாக கேட்க செய்யும் மெஷின் லெர்னிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன் 15 மாடல்களுடன் செயற்கைக்கோள் சார்ந்த கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன் 15 மாடலின் விலை 799 டாலர்கள் என்றும் ஐபோன் 15 பிளஸ் மாடலின் விலை 899 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபோன் 15 சீரிஸ் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
    • இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கலாம்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்வு ஆப்பிள் அதிகாரப்பூர்வ சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது.

    இந்திய நேரப்படி செப்டம்பர் 12-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஐபோன் 15 சீரிஸ் அறிமுக நிகழ்வு துவங்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர பல்வேறு இதர சாதாகனங்கள் மற்றும் ஆப்பிள் சேவைகள் பற்றிய அறிவிப்புகள் இந்த நிகழ்வில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    ஐபோன் 15 சீரிசில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வகையில், புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ஐபோன்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம். இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் 3டி ப்ரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் தோற்றம் கிட்டத்தட்ட அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என்று தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபோன் 14 ப்ரோ மாடலில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் 15 மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும், இதன் டாப் எண்ட் மாடல்களில் அதிநவீன பிராசஸர், மேம்பட்ட பேட்டரி பேக்கப் மற்றும் கேமரா சார்ந்த புதிய அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ஐரோப்பிய யூனியன் பிறப்பித்து இருக்கும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாகத்தான் ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி. டைப் சி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் 35 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிவேக சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஐபோன் 14 ப்ரோ மாடலில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், ஐபோன் 14 மாடலில் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 35 வாட் பவர் அடாப்டரை அறிமுகம் செய்தது.

    இதன் மூலம் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் 35 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டுமே பிரத்யேக அம்சமாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

    Photo Courtesy: 9To5Mac

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo