search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobile"

    • மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகன அங்காடி இயக்குவதற்கு, சுய உதவிக்குழு உறுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர், விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் உறுப்பினர் உள்ள சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும், சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் பூர்த்தி செய்திருக்க வேண்டும், வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும், அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் பயனாளிக்கு வழங்கப்படும், வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை, வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கே ஒப்படைக்கவேண்டும். விதிமுறைகள் மீறி செயல்படும் உறுப்பினரிடமிருந்து வாகன அங்காடி திரும்ப பெற்றுக்கொள்ளப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும். வாகன அங்காடிக்கு வாடகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் நலிவுற்ற குடும்ப உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் இவ்வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, பயனாளிகளை தேர்வு செய்யப்படவுள்ளது. எனவே, மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க தகுதியானவர் விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நிறைமதி கிராமம், நீலமங்கலம்(அஞ்சல்) கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 16-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, துணை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்தர் மவுரியா, உதவி கண்காணிப்பாளர் சன்னி சந்திரா, தலைமை வார்டர் லோகேஷ் தாமா மற்றும் வார்டர் ஹன்ஸ்ராஜ் மீனா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், இயக்குனர் ஜெனரல் (சிறைகள்) சஞ்சய் பானிவால், ஐ.பி.எஸ்., அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் தங்கள் தேடுதல் குழுக்களை உருவாக்கவும், அவர்களின் சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறியவும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

    சிறைகளில் அங்கீகரிக்கப்படாத பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் இதுபோன்ற பறிமுதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் சிறை அதிகாரிகள் கூறினர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக செல்போன்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் 2022-23-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கு பிரத்யே கமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்கள் வழங்கு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்குட்பட்ட கல்லூரி பயிலும், வேலை வாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்போன்கள் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

    கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச் சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்புச் சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய தொழில் புரிபவராயின் சுய தொழில் புரிவதற்கான சான்று), மார்பளவு புகைப்படம்-2 ஆகியவைகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

    தகுதியுடைய பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குவால்காம் நிறுவனம் புதிதாக மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ஏ.ஐ., கேமரா மற்றும் கேமிங் வசதிகள் அதிகளவு மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. #Qualcomm



    குவால்காம் நிறுவனம் புதிய வகை மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி என அழைக்கப்படுகின்றன.

    புதிய ஸ்னாப்டிராகன் மொபைல் பிராசஸர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கேமரா மற்றும் கேமிங் உள்ளிட்ட அம்சங்களில் அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்னாப்டிராகன் 665 மற்றும் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்கள் அதிகளவு பயன்பாட்டிற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. 



    ஸ்னாப்டிராகன் 730ஜி கேமிங் வசதியை வழங்கும் நோக்கில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 770 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி உள்ளிட்டவற்றில் ஏ.ஐ. வசதி குவால்காம் ஏ.ஐ. என்ஜின் வேரியன்ட் மற்றும் ஹெக்சகன் வெக்டார் எக்ஸ்டென்ஷன்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    புதிய பிராசஸர்களில் குவால்காம் நிறுவனம் மல்டி-கேமரா வசதி மற்றும் பல்வேறு இதர கேமரா ஆப்ஷன்களும் சேர்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி உள்ளிட்டவை ஏற்கனவே வணிக ரீதியில் தயாராகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய குவால்காம் பிராசஸர்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 2019 அரையாண்டு காலத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மால்வேர் மற்றும் வைரஸ் பாதிப்புக்களை எதிர்கொள்வதாக கூறும் செயலிகள் பெரும்பாலும் இப்படித் தான் இயங்குகின்றன. #Android



    மொபைல் போன்கள் மற்றும் டெஸ்க்டாப்களில் மிகவும் அவசியமான செயலிகளாக பலரும் பார்க்கும் ஆண்டிவைரஸ் செயலிகள் பற்றிய பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 

    சமீபத்தில் வெளியாகியிருக்கும் அறிக்கையில் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் பெரும்பாலான ஆண்டிவைரஸ் மற்றும் ஆண்டி-மால்வேர் செயலிகள் பயனற்றதாகவோ அல்லது நம்ப முடியாதவொன்றாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்த்ரியாவை சேர்ந்த ஆண்டிவைரஸ் சோதனை நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 

    இந்நிறுவனம் 250 செயலிகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 2000 மால்வேர் செயலிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெறும் 30 சதவிகித செயலிகளே மால்வேர்களை ஓரளவு சரியாக கண்டறிந்தன. இதிலும் பெரும்பான்மை முடிவுகள் தவறாகவே இருந்தன.



    ஆய்வாளர்கள் தேர்வு செய்த 250 செயலிகளை ஒவ்வொன்றாக ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆண்ட்ராய்டு சாதனங்களில் இவற்றை இன்ஸ்டால் செய்து, சாதனம் தானாக பிரவுசர் மூலம் மால்வேர் நிறைந்த செயலிகளை டவுன்லோடு செய்ய வைக்கப்பட்டன. இந்த வழிமுறை 2000 முறை பின்பற்றப்பட்டன, இதில் செயலிகளால் வைரஸ் அல்லது மால்வேர்களை கண்டறியமுடியவில்லை. 

    ஆண்டிவைரஸ் செயலிகளில் 2018 ஆம் ஆண்டின் பரவலான ஆண்ட்ராய்டு மால்வேர் அச்சுறுத்தல்களே சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்பதால், இந்த செயலிகள் கிட்டத்தட்ட 90 முதல் 100 சதவிகிதம் வரை மால்வேர்களை துல்லியமாக கண்டறிந்திருக்க வேண்டும். எனினும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட செயலிகளில் 170 செயலிகள் அடிப்படை சோதனைகளிலும் தேர்ச்சி பெறவில்லை.

    கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் பிளே ப்ரோடெக்ட் சேவையை வழங்கியிருக்கிறது. எனினும், பெரும்பான்மையான ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அறிமுகமில்லாத மூன்றாம் தரப்பு வலைதளங்களில் இருந்து APK வடிவில் இன்ஸ்டால் செய்கின்றனர். இவை அவர்களது ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.
    கடையின் ஓட்டை பிரித்து செல்போன்கள் திருடிய வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சமயபுரம்:

    சமயபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ரெங்கபிரபு(வயது 34). இவர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியத்தில் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை அவருடைய கடையின் ஓடுகள் பிரிந்து கிடப்பதாக அப்பகுதியினர் ரெங்கபிரவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர் கடைக்கு சென்று பார்த்தபோது புதிய செல்போன்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், சர்வீஸ் பார்ப்பதற்காக வந்த செல்போன் மற்றும் சார்ஜர்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ரெங்கபிரபு மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், யுவராணி மற்றும் போலீசார் மண்ணச்சநல்லூர் -சமயபுரம் சாலையில் உள்ள நங்கமங்கலம் சத்திரம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள், லால்குடி அருகே உள்ள கீழவாளாடி கிழக்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் தினேஷ்(25), மணி மகன் ராஜா(21), தண்டாங்கோரை கீழத்தெருவை சேர்ந்த ராமஜெயம் மகன் கிருஷ்ணன்(20), எசனக்கோரை கீழவீதியைச் சேர்ந்த கண்ணன் மகன் தினேஷ்(21), தாளக்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் என்பதும், ரெங்கபிரபுவின் செல்போன் கடையில் திருடியது அவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 
    ×