search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi jail"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, துணை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்தர் மவுரியா, உதவி கண்காணிப்பாளர் சன்னி சந்திரா, தலைமை வார்டர் லோகேஷ் தாமா மற்றும் வார்டர் ஹன்ஸ்ராஜ் மீனா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், இயக்குனர் ஜெனரல் (சிறைகள்) சஞ்சய் பானிவால், ஐ.பி.எஸ்., அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் தங்கள் தேடுதல் குழுக்களை உருவாக்கவும், அவர்களின் சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறியவும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

    சிறைகளில் அங்கீகரிக்கப்படாத பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் இதுபோன்ற பறிமுதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் சிறை அதிகாரிகள் கூறினர்.

    ×