என் மலர்
நீங்கள் தேடியது "Android"
- கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
- ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யுஐ 6.1 கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு தலைமுறை ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டது.
சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் பென்ச்மார்க்கிங் வலைதளத்தில் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் ஒன் யுஐ 8 பீட்டா அப்டேட் பெறலாம் என்பதை பரிந்துரைக்கிறது. கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், கேலக்ஸி A55 5ஜி சமீபத்தில் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 அப்டேட்டை சமீபத்தில் பெற்றது. இந்த மாத தொடக்கத்தில், சாம்சங் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் கேலக்ஸி S25 சீரிசுக்கான ஒன் யுஐ 8 பீட்டா 2 வெர்ஷனை வெளியிட்டது.
கேமராவை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 8MP சென்சார் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz வரை ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.6-இன்ச் Full-HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.32,999, ரூ.42,999 மற்றும் ரூ.45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
- புதிய டெஸ்க்டாப் அனுபவம் ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று கூறப்பட்டது.
- ஆன்ட்ராய்டு டாஸ்க்மார், 3 பட்டன்கள் கொண்ட நேவிகேஷன் அக்சஸ் வசதிகளை வழங்கியது.
கூகுள் பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்காக ஒரு புதிய பிரத்யேக முதல்-தரப்பு டெஸ்க்டாப் மோட் உருவாக்கி வருவதாகவும் விரைவில் இது அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் என அழைக்கப்படும் இந்த அம்சம், இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஆண்ட்ராய்டு 17 உடன் வெளியிடப்படலாம். இது சாம்சங் டெக்ஸ் மற்றும் மோட்டோரோலா கனெக்ட் போன்ற திறன்களை வழங்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பயனர்கள் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இடைமுகத்திற்கு இடையில் விரைவாக மாறலாம்.
ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் துவக்கம்
சமீபத்தில் ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டது. அதில், புதிய டெஸ்க்டாப் அனுபவம் பயனர்கள் தங்கள் தொலைபேசி வழியாக பெரிய திரைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும். ஸ்மார்ட்போன், குறிப்பாக பிக்சல் மாடல், யுஎஸ்பி டைப்-சி மூலம் லேப்டாப் போன்ற வெளிப்புற டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, அது டெஸ்க்டாப்-போன்ற இன்டர்ஃபேஸ்-ஐ வழங்கக்கூடும்.
ஆண்ட்ராய்டு டெஸ்க்டாப் மோட், விண்டோஸ்-ஐ ரீ-சைஸ் செய்து, அவற்றை நகர்த்துதல் போன்ற மல்டி டாஸ்கிங் திறன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஆப் மேனேஜ்மென்ட் சிஸ்டம், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் இன்டர்ஃபேஸ்-க்கு இடையில் மாறுவதற்கான திறன், டெஸ்க்டாப் இன்டர்ஃபேஸ் மற்றும் இதர நேவிகேஷன் வழங்கும் என்று தெரிகிறது.
முன்னதாக, இந்த புதிய டெஸ்க்டாப் அனுபவம் ஆண்ட்ராய்டு 16 உடன் வரும் என்று கூறப்பட்டது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 16 பீட்டா அப்டேட்டில் "எனேபில் டெஸ்க்டாப் எக்ஸ்பீரியன்ஸ் ஃபீச்சர்ஸ்" என்று அழைக்கப்படும் புதிய டெவலப்பர் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டது. இதனை இயக்கும் போது, இந்த அம்சம் ஆன்ட்ராய்டு டாஸ்க்மார், 3 பட்டன்கள் கொண்ட நேவிகேஷன் அக்சஸ் வசதிகளை வழங்கியது.
இருப்பினும், அதன் வெளியீடு தாமதமாகலாம். கூகுள் இந்த அம்சத்தின் யூசர் இன்டர்ஃபேஸ்-ஐ அப்டேட் செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது. எனவே, இது ஆண்ட்ராய்டு 16 உடன் வராமல் போகலாம். அதற்கு பதிலாக, இந்த அம்சம் இப்போது அடுத்த தலைமுறை பிக்சல் போன்களில் ஆண்ட்ராய்டு 17 உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
- வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் வழங்கப்பட்ட அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
- இதே அம்சம் விரைவில் ஐஒஎஸ் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
வாட்ஸ்அப் செயலியில் பயனர் குறுந்தகவல்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு "View Once" எனும் வசதியை வழங்கி இருக்கிறது. இந்த வசதி கொண்டு அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒரு முறை பார்க்கப்பட்டதும் அவை அழிந்து விடும். வாட்ஸ்அப்-இன் "View Once" அம்சம் தற்போது குறுந்தகவல்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த அம்சம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதால், இதனை மற்றவர்கள் பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக குறுந்தகவல்களுக்கான "View Once" அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.25.20 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் பயனர்கள் மெசேஜ்களுக்கு "View Once" வசதியை பயன்படுத்தலாம்.

புது வசதியை வழங்குவதற்காக வாட்ஸ்அப் சாட் பார் அருகில் விசேஷ பட்டனை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவவதாக கூறப்படுகிறது. பயனர்கள் "View Once" மெசேஜ் அனுப்பும் முன் இந்த பட்டனை க்ளிக் செய்து அதன் பின் அனுப்ப வேண்டி இருக்கும். மெசேஜை அனுப்புவதற்கான ஐகான் மீது லாக் இடம்பெற்று இருக்கிறது.
வாட்ஸ்அப் தற்போது "View Once" முறையில் அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தடுக்கும் வசதியை வழங்கி வருகிறது. இதே போன்று "View Once" போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர், ஃபார்வேர்டு, காப்பி அல்லது சேவ் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை. இதே போன்ற வசதிகள் மெசேஜ்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: WABetaInfo
- டுவிட்டர் சமூக வலைதளத்தில் டுவிட்டர் புளூ சந்தா ஏராள மாற்றங்களை பெற்று இருக்கிறது.
- தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கு டுவிட்டர் புளூ கட்டணம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டுவிட்டர் புளூ சந்தா ஒருவழியாக ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டு வருகிறது. வருடாந்திர சந்தா கட்டண முறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆண்ட்ராய்டு தளத்திற்கும் டுவிட்டர் புளூ சந்தா வழங்கப்படுகிறது. ஐஒஎஸ் போன்றே டுவிட்டர் புளூ சந்தாவுக்கான கட்டணம் மாதம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ வெப் தளத்திற்கான கட்டணத்தை விட செயலியின் கட்டணம் அதிகம் ஆகும்.
இரு தளங்களின் விலை வேறுபாட்டிற்கான காரணம் பற்றி டுவிட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இன்-ஆப் பர்சேஸ்களுக்கான பிளே ஸ்டோர் கட்டணத்தை ஈடு செய்யும் வகையில் டுவிட்டர் புளூ கட்டணத்தில் வேறுபாடு இருக்கலாம் என கூறப்படுகிறது.

பலன்களை பொருத்தவரை டுவிட்டர் புளூ பயனர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்துடன் டுவிட்களை எடிட் செய்யும் வசதி, 60 நிமிடங்களுக்கான வீடியோ அப்லோட் ( வெப்-இல் மட்டும்) செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் கஸ்டம் ஆப் ஐகான், புக்மார்க் செய்யப்பட்ட டுவிட்களுக்கு எளிய நேவிகேஷன், செயலியில் வித்தியாசமான தீம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
செயலியில் நேவிகேஷன் பார் கஸ்டமைஸ் செய்யும் வசதி, ரீடர் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை டுவிட்டர் ஒட்டுமொத்த அனுபவத்தை வித்தியாசமாக மாற்றுகிறது. டுவிட்டர் புளூ சந்தா தற்போது ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
- ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பயனர்கள் தப்பித்தவறியும் இவ்வாறு செய்தால், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதுகாப்பு கருதி ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் "irctcconnect.apk," என்ற பெயர் கொண்ட தரவுகளை தங்களது சாதனங்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தரவுகளை டவுன்லோட் செய்யும் பட்சத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களின் மூலம் இந்த தரவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதில் போலி வலைதளமான https://irctc.creditmobile.site முகவரியும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
ஐஆர்சிடிசி வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த தரவை டவுன்லோட் செய்தால், உங்களது ஸ்மார்ட்போனில் அது மால்வேரை இன்ஸ்டால் செய்துவிடும். https://irctc.creditmobile.site வலைதளம் தோற்றத்தில் ஐஆர்சிடிசி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. இதில் உங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டால், ஹேக்கர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

இந்த தளத்தை உருவாக்கிய ஹேக்கர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு பயனர்களிடம் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை டவுன்லோட் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களான நெட் பேங்கிங் பெயர், கடவுச்சொல், யுபிஐ முகவரி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.
இந்த ஐஆர்சிடிசி முறைகேடில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
போலி செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதுபோன்ற முறைகேடில் சிக்காமல் இருக்க பயனர்கள் ஐஆர்சிடிசி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.
மேலும் ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான (கடவுச்சொல்), கிரெடிட் கார்டு எண், ஒடிபி, வங்கி கணக்கு எண் அல்லது யுபிஐ உள்ளிட்டவைகளை மொபைல் போன் மூலம் கேட்கப்படாது.
- புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்கிறது.
- உரையாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு டேப்லெட் வெர்ஷனில் சைட்-பை-சைட் பெயரில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே உள்ள சாட்களை திரையின் ஒருபகுதியில் வைத்துக் கொண்டு மேலும் அதிக சாட்களுக்கு பதில் அனுப்பவும், சாட் செய்யவும் உதவுகிறது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஸ்கிரீனில் பல்வேறு சாட்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம்.
புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்கிறது. ஒரே சமயம் பலருக்கு குறுந்தகவல் அனுப்பும் வழக்கம் கொண்டிருப்போருக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். எனினும், இவ்வாறு செய்யும் போது உரையாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்.

இந்த அம்சம் வேண்டாம் என்பவர்கள் அதனை டிசேபில் (செயலிழக்க) செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்ய வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- சாட்ஸ் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். புதிய அம்சத்திற்கான அப்டேட் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுதவிர வாட்ஸ்அப்-இல் மல்டி-டிவைஸ் லாக்-இன் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் பல்வேறு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்த முடியும். இந்த அம்சம் உலகளவில் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
Photo Courtesy: WABetaInfo
- ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.
- ஐபோன் 15 ப்ரோ மாடல்களுடன் யு.எஸ்.பி. டைப் 2 கேபிள் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 15 சீரிசில் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கி இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டு யு.எஸ்.பி. டைப் சி கேபிள் மூலம் ஐபோன் 15 சீரிசை சார்ஜ் செய்யும் போது, சிக்கல் ஏற்படும் என்று ஆப்பிள் விற்பனையாளர் தெரிவித்து இருக்கிறார்.
ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. இவை அனைத்திலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை ஆண்ட்ராய்டு யு.எஸ்.பி. டைப் சி கேபிள் மூலம் சார்ஜ் செய்தால், ஐபோன் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக சீனாவை சேர்ந்த விற்பனையாளர் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலில் உண்மையில்லை என்றும், இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு ஆப்பிள் நிறுவனம் தனது யு.எஸ்.பி. டைப் சி கேபிள்களின் விற்பனையை அதிகப்படுத்த நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் புதிய ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி ஸ்டாண்டர்டு கேபிள் மூலம் சார்ஜ் செய்யலாம் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 15 சீரிசில் உள்ள யு.எஸ்.பி. டைப் சி போர்ட், லைட்னிங் போர்ட்-ஐ விட 15 மடங்கு அதிவேக திறன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களை வாங்குவோருக்கு யு.எஸ்.பி. டைப் 2 கேபிள் வழங்கப்படுகிறது. இதைவிட அதிவேக அனுபவம் பெற நினைப்பவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் யு.எஸ்.பி. டைப் 3 கேபிளை வாங்கிட முடியும்.
- பயனர்கள் வெவ்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை ஒரே சாதனத்தில் பயன்படுத்தலாம்.
- தனித்தனி சாதனங்களை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை போக்கிவிடும்.
வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில், ஒரே சாதனத்தில் இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்த முடியும் என்று மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் வழங்கப்படும் போது, பயனர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை பயன்படுத்துவதற்கு தனித்தனி சாதனங்களை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை போக்கிவிடும்.
முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்ட அக்கவுண்ட் ஸ்விட்சிங் அம்சம் கொண்டு பயனர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை நிர்வகிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வெவ்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை ஒரே சாதனத்தில் பயன்படுத்த வழி செய்கிறது.

தற்போதைய அறிவிப்பின் படி டூயல் சிம் கொண்ட போன்களில் பயனர்கள் இந்த அம்சத்தினை பயன்படுத்த முடியும். இரண்டாவது அக்கவுண்டை பயன்படுத்துவதற்காக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை வாட்ஸ்அப் மற்றொரு சாதனம் அல்லது மாற்று சிம் கார்டில் அனுப்புகிறது.
இதனை பயன்படுத்தி அக்கவுண்ட்-ஐ செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகு, செயலி இரண்டு அக்கவுண்ட்களிலும் இயங்கும். முன்னதாக வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே மொபைலில் இரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- ஆட் அக்கவுண்ட் (Add Account) ஆப்ஷனை தொடர்ந்து பிரைவசி மற்றும் நோட்டிஃபிகேஷன் செட்டிங்களை இரண்டு அக்கவுண்ட்களுக்கும் தனித்தனியே செட்டப் செய்து கொள்ள வேண்டும்.
- லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.
- பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்க முடியும்.
வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் தான் "சாட் லாக்" (Chat Lock) என்ற பெயரில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனரின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பயனர் தனியுரிமையை பாதுகாக்கும் கூடுதல் அம்சத்தினை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து இருக்கிறது.
"சீக்ரெட் கோட்" (Secret Code) என்று அழைக்கப்படும் புதிய அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சீக்ரெட் கோட் அம்சம் கொண்டு பயனர்கள் லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.20 வெர்ஷனை அப்டேட் செய்த பிறகு, பயனர்கள் லாக்டு சாட்களில் புதிதாக செட்டிங்ஸ் ஆப்ஷனை பார்க்க முடியும். இந்த பகுதியில் லாக்டு சாட்களை இயக்க அனுமதிக்கும் என்ட்ரி பாயின்ட்-ஐ மறைத்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. சீக்ரெட் கோட் செட்டப் செய்து முடித்ததும், லாக்டு சாட்-இல் என்ட்ரி பாயின்ட் சாட் லிஸ்ட்-இல் இடம்பெற்று இருக்காது.
மாறாக பயனர்கள் சாட் டேப்-இல் உள்ள சர்ச் பாரில் சீக்ரெட் கோடை பதிவிட்டு, லாக்டு சாட்-ஐ இயக்க முடியும். ஒருவளை சீக்ரெட் கோட்-ஐ பயனர்கள் மறந்து போகும் பட்சத்தில், சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.
Photo Courtesy: WABetaInfo
- கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
- விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் பேக்கப் செய்வது குறித்து கூகுள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரி பேக்கப் தகவல்கள் அனைத்தும் கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் கட்டுப்பாடு விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவல் கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய கட்டுப்பாட்டு விதிகளில் இருந்து தப்பிக்க, பயனர்கள் தங்களின் ஃபைல் சைஸ் அளவை குறைக்கவோ அல்லது கூடுதல் ஸ்டோரேஜை வாங்கிக் கொள்ளலாம் என்று கூகுள் தெரிவித்து உள்ளது. தற்போது வரை கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 15 ஜி.பி. வரையிலான தரவுகளை இலவசமாக வைத்துக் கொள்ள முடியும்.
பேக்கப்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் ஸ்டோரேஜை நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு கூகுள் வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் இந்த வழிமுறையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
"ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பேக்கப்களை செயல்படுத்த விரும்பினால், தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்களுடன் 15 ஜி.பி. வரையிலான ஸ்டோரேஜ் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. இது கூகுள் டிரைவ், ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் போன்ற மொபைல் தளங்களில் பகிரப்படுவதை விட மும்மடங்கு அதிகம் ஆகும்."
"பயனரின் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்-இல் ஸ்டோரேஜ் இருக்கும் வரை ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பேக்கப்கள் தொடர்ந்து வேலை செய்யும். ஸ்டோரேஜ் அளவை நெருங்கும் பட்சத்தில், தொடர்ந்து பேக்கப் சேவையை பெற ஸ்டோரேஜை அதிகப்படுத்த வேண்டும்," என்று கூகுள் வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய மாற்றத்தின் படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அமலுக்கு கொண்டுவரப்படுகிறது. பிறகு அடுத்தாண்டு துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் அனைவருக்கும் இந்த அம்சம் அமலுக்கு வரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
- சாட்களை சீக்ரெட் கோட் மூலம் மறைத்து கொள்ளலாம்.
- அஞ்சி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
வாட்ஸ்அப் செயலியில் உள்ள லாக்டு சாட் (Locked Chat) அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் (Secret Code) எனும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக அறிவிக்கப்பட்ட சாட் லாக் அம்சம் தற்போது நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் சாட்களை சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்யும் போது, நீங்கள் உங்களது போனினை மற்றவர்களிடம் கொடுக்கும் போது, அவர்கள் உங்களது மிகமுக்கிய உரையாடல்களை பார்த்து விடுவார்களா என்ன அஞ்சி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நீங்கள் உங்களது சாட்களுக்கென தனி பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளலாம். பாஸ்வேர்டுக்கு மாற்றாக கைரேகை அல்லது ஃபேஸ் ஐடி உள்ளிட்டவைகளையும் பயன்படுத்தலாம்.

அந்த வரிசையில், மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் செயலியில் புதிய சாட் லாக் அம்சத்தில் சீக்ரெட் கோட் வசதி வழங்கப்படுவதாக அறிவித்து இருக்கிறார். இதை கொண்டு சாட்களை பிரத்யேக பாஸ்வேர்டு மூலம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைக்கப்படும் சாட்கள் அனைத்தும் மெயின் சாட் லிஸ்ட்-இல் காண்பிக்கப்படாது.
மேலும் செயலியில் பயனர் செட் செய்த சீக்ரெட் கோட்-ஐ பதிவிட்டால் மட்டுமே இயக்க முடியும். இந்த அம்சத்தினை இயக்க செயலியின் சாட் -- லாக் செட்டிங்ஸ் -- ஹைடு லாக்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி சீக்ரெட் கோட்-ஐ செட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, நீங்கள் தேர்வு செய்த சாட் மெயின் சாட் லிஸ்ட்-இல் இடம்பெறாது.

தற்போது லாக்டு சாட் அம்சத்தை இயக்குவதற்கான ஷாட்கட்- சாட் ஸ்கிரீனில் இருந்து கீழ்புறம் நோக்கி ஸ்வைப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, கைரேகை சென்சார் அல்லது ஃபேஸ் ஐடி மூலம் சாட்களை இயக்கலாம். சாட்களில் சீக்ரெட் கோட் செட் செய்த பிறகு, செயலியில் உள்ள லாக்டு சாட்ஸ்-ஐ இயக்க வாட்ஸ்அப் சர்ச் பாரில் சீக்ரெட் கோட்-ஐ பதிவிட வேண்டியது அவசியம் ஆகும்.
- சாட்பாட்கள் மனிதர்களை போன்ற உரையாடல்களை மேற்கொண்டு அசத்துகின்றன.
- கூகுள் அசிஸ்டன்ட்-க்கு மாற்றாக சாட்-ஜி.பி.டி. வழங்கப்படலாம்.
ஒபன்-ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி.பி.டி. மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கோபைலட் உள்ளிட்டவை அதிக பிரபலமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே உள்ள செயற்கை நுண்ணறிவு சேவைகளான சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்டவை பழையதாகிவிட்டன. சமீபத்திய சாட்பாட்கள் மனிதர்களை போன்ற உரையாடல்களை மேற்கொண்டு அசத்துகின்றன.
மேலும் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன. ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் உள்ள டீஃபால்ட் அசிஸ்டன்ட்களுக்கு மாற்றாக சாட்-ஜி.பி.டி. செயலி மாறி வருகிறது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் சேவைக்கு மாற்றாக சாட்-ஜி.பி.டி. சேவை விரைவில் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சாட்-ஜி.பி.டி. ஆண்ட்ராய்டு செயலியின் சமீபத்திய வெர்ஷனில் உள்ள கோட்-களில் இருந்து, இந்த செயலி ஆண்ட்ராய்டு சாதனத்தில் டீஃபால்ட் அசிஸ்டன்ட் ஆக செட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட சாட்-ஜி.பி.டி. வெர்ஷன் 1.2023.352-இல் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய ஆக்டிவிட்டியில் 'com.openai.voice.assistant.AssistantActivity' இடம்பெற்றுள்ளது.
இந்த ஆக்டிவிட்டி தானாக டிசேபில் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை எனேபில் செய்ய முடியும். இதனை எனேபில் செய்ததும், திரையில் தற்போதைய சாட்-ஜி.பி.டி. அனிமேஷன் போன்றே காட்சியளிக்கும். இது மற்ற செயலிகளின் மேல் தோன்றும். அந்த வகையில், பயனர்கள் எந்த ஸ்கிரீனில் இருந்து கொண்டும் சாட்-ஜி.பி.டி.-யுடன் பேச முடியும்.
தற்போது சாட்-ஜி.பி.டி. சேவையை பயன்படுத்த பிரத்யேகமாக செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த சேவை டீஃபால்ட்-ஆக வரும் பட்சத்தில் பயனர்கள் தனியே செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.






