என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accessories"

    • இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.
    • ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பாக்கெட் என்கிற மொபைல் ஆக்சரி ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபை ஆக்ஸசரி வேறு ஒன்றும் இல்லை.. துணியால் பின்னப்பட்ட மொபைல் வைப்பதற்கான ஒரு தோள் பை.

    இது, ஆப்பிள் நிறுவனம், ஜப்பானிய ஆடை வடிவமைப்பாளரான இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.

    3D பின்னப்பட்ட துணியால் (3D-knit fabric) தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய பாக்கெட் வடிவிலான தோள் பை, ஐபோன், ஏர்பாட்ஸ் மற்றும் பிற சிறிய அத்தியாவசிய பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல உதவுகிறது.

    இந்த மொபைல் பாக்கெட் இன்று முதல், ஆப்பிள் ஸ்டோர்களிலும், பிரான்ஸ், கிரேட்டர் சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் இணையதளத்திலும் கிடைக்கிறது.

    இதன் வடிவமைப்பு திறந்தவெளி அமைப்புடன் (open structure) கூடிய பாக்கெட், ஸ்டைலிஷாக கையில் அல்லது தோளில் அணிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

    மொபைல் பாக்கெட் வகைகள் மற்றும் விலை: கையில் மட்டும் மாட்டக்கூடிய ஷார்ட் ஸ்ட்ராப் வெர்ஷன் ரூ.13,300,லாங் ஸ்ட்ராப் வெர்ஷன் (தோளில் அணியும்): ரூ.20,379 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     

    ஆப்பிள் நிறுவனத்தால் ஹை-பேஷன் ஆக்ஸசரி என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    கடந்த 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன் பாக்கெட் ஸ்டைலாக அணிந்து செல்ல உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறினாலும், வர்த் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுகிறது.

    இது ஒரு சாதாரண துணி பை போன்று இருப்பதாகவும், இதற்காக விலை ரூ.20,000 ? எனவும் நெட்டிசன்கள் வாயை பிளக்கின்றனர்.

    • பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்கின்றனர்.
    • விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை பகுதி கிராமங்களில் மாட்டுப் பொங்கலன்று, விவசாயிகள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டுக் காளைகள், எருதுகள் மட்டுமின்றி, கறவை பசுக்கள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் குளிப்பாட்டி, வண்ணப் பொடித் துாவியும், வண்ண அச்சுகளை வைத்தும் விவசாயிகள் அழகுபடுத்துவதும், கொம்புகளை சீவி வண்ணம் தீட்டுவதோடு, கால்நடைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, கழுத்துமணி , கொம்பு கொப்புச் சலங்கை, கால் சலங்கை, தலைக்கயிறு, கழுத்துச் சங்கிலி, நெற்றிப்பட்டை ஆகிய அணிகலன்கள் மற்றும் பலுான், ரிப்பன் ஆகியவற்றை வாங்கி அணிவித்து அலங்கரிப்பதை ஊர்வலமாக அழைத்து செல்வதை பெருமையாக கருதுகின்றனர்.

    இதனால், வாழப்பாடி அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை, தும்பல் வாரச்சந்தை களிலும், கிராமங்கள் வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளிலும் கால்நடை அணிகலன்கள் விற்பனை அமோகமாக நடந்தது. பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்வதோடு மட்டுமின்றி, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.

    ×