search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobile Phone"

    • முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.
    • இந்த மொபைல் போன் டூயல் 4ஜி, 2ஜி, 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

    ஐடெல் நிறுவனத்தின் சூப்பர் குரு 4ஜி பீச்சர் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலை முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த மொபைல் போன் 2 இன்ச் டிஸ்ப்ளே, டிஜிட்டல் கேமரா, கிளவுட் மூலம் யூடியூப் சேவையை பயன்படுத்தும் வசதி, 123பே (123Pay) அம்சம் கொண்டிருக்கிறது. 123பே அம்சம் மூலம் பயனர்கள் டிஜிட்டல் பேமெண்ட் செய்ய முடியும். இத்துடன் 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலில் டூயல் 4ஜி, 2ஜி மற்றும் 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. கீபேட் மொபைல் போன்களில் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் வசதியை வழங்கும் கிங் வாய்ஸ் அம்சம் இந்த மொபைலில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டெட்ரிஸ், 2048 மற்றும் சுடோக்கு போன்ற கேம்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விலையை பொருத்தவரை ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடல் ரூ. 1799-க்கு கிடைக்கிறது. இந்த மொபைல் போன்- பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐடெல் இந்தியா வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. 

    • புகைப்படங்களை எடுக்க 0.3MP கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • கனெக்டிவிட்டிக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.

    நோக்கியாவின் தாய் நிறுவனம் ஹெச்.எம்.டி. குளோபல், ஹெயின்கென் மற்றும் பொடெகாவுடன் இணைந்து முற்றிலும் புதிய லிமிடெட் எடிஷன் போரிங் போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மொபைல் போன் நோக்கியா 2660 ப்ளிப் போன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் 4ஜி காலிங் வசதி, இரண்டு ஸ்கிரீன்கள், டிரான்ஸ்லுசென்ட் டிசைன் உள்ளது. போரிங் போன் மாடலில் 2.8 இன்ச் QVGA ஸ்கிரீன், வெளிப்புறத்தில் 1.77 இன்ச் ஸ்கிரீன் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 0.3MP கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 128MB ரோம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மாடல் என்பதால் போரிங் போன் மொத்தத்தில் 5 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது.
    • மத்திய நிதி அமைச்சகம் இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய நிதிஅமைச்சகம் நேற்று இரவு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை (சுங்ககட்டணம்) 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.

    செல்போன் உதிரிபாகங்களான பின் கவர்கள், பேட்டரி கவர்கள், ஜிஎஸ்எம் ஆன்டெனா, மெயின் கேமரா லென்ஸ் மற்றும் இதர பிளாஸ்டிக் மற்றும் உலோக மெக்கானிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மத்திய அரசின் வருவாய்த்துறை குறைத்துள்ளது.

    உதிரிபாகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த இறக்குமதி வரி குறைப்பு உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான மொபைல் அசெம்பிளி லைன்களை அமைக்க உதவும், மேலும் செல்போன்களின் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும்.

    இந்த நடவடிக்கை இந்தியாவின் செல்போன் உற்பத்தியை மேலும் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் என இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

    இறக்குமதி வரிகுறைப்பு மூலம் செல்போன் துறையில் ஒரு நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம் செல்போன் விரிவாக்கம் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் உலகளாவிய சந்தையில் போட்டித்தன்மையை மேம்படுத்த இது உதவுகிறது

    • நோக்கியா பிரான்டிங்கில் இரண்டு புதிய மொபைல் போன்கள் அறிமுகம்.
    • நோக்கியா ஃபீச்சர் போன்களில் யுபிஐ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய நோக்கியா மொபைல் போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 110 2ஜி மாடல்கள் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இரு மாடல்களும் மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கின்றன.

    இத்துடன் நானோ-டெக்ஸ்ச்சர் பாடி மற்றும் பில்ட்-இன் யுபிஐ சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியாவின் பாரம்பரியம் மிக்க உற்பத்தி தரம் மற்றும் வித்தியாசமான ஸ்டைல் உள்ளிட்டவை புதிய மாடல்களிலும் தொடர்கிறது. புதிய நோக்கியா மாடல்களில் பில்ட்-இன் கேமரா, எஸ்டி கார்டு ஸ்லாட், மியூசிக் பிளேயர் மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    நோக்கியா 110 4ஜி (2023) அம்சங்கள்:

    1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே

    QCGA பிரைமரி கேமரா

    1450 எம்ஏஹெச் பேட்டரி

    ப்ளூடூத் 5.0

    3.5mm ஹெட்போன் ஜாக்

    மைக்ரோ யுஎஸ்பி 2.0

    மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்

    எஸ் 30 பிளஸ் ஒஎஸ்

    வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ

    2ஜி, 3ஜி, 4ஜி (நானோ சிம், டூயல் சிம் சப்போர்ட்)

    IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்

     

    நோக்கியா 110 2ஜி (2023) அம்சங்கள்:

    1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே

    QCGA பிரைமரி கேமரா

    1000 எம்ஏஹெச் பேட்டரி

    யுஎஸ்பி கனெக்ஷன், மைக்ரோ யுஎஸ்பி

    மைக்ரோ எஸ்டி சப்போர்ட்

    எஸ் 30 பிளஸ் ஒஎஸ்

    வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ

    2ஜி, டூயல் சிம்

    IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நோக்கியா 110 4ஜி (2023) மாடல் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 110 2ஜி (2023) மாடல் சார்கோல் மற்றும் கிளவுடி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை விரைவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.

    • மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

     உடுமலை :

    மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.இங்கு சின்னப்பன் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல் கிடங்கின் முன் முத்துச்சாமி கட்டிலை போட்டு தூங்கியுள்ளார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக அந்த பகுதியை நோட்டம் விட்டு விட்டு,அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறார். பின்னர் முத்துசாமியின் அருகில் சென்று அவர் தலையணைக்கடியில் வைத்திருந்த செல்போனை நைசாக திருடுகிறார்.அப்போது விழித்துக் கொண்ட முத்துச்சாமி அந்த நபரை துரத்துகிறார்.ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் செல்போனுடன் அந்த நபர் தப்பிச்செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாலிபரிடம் செல்போன், நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • தனியாக நின்று கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் 5 பேர் சேர்ந்து தாக்கி நகையை பறித்து சென்றனர்.

        தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் பச்சகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 29).

    இவர் அழகு சமுத்திரம் சினிமா தியேட்டர் முன்பு தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் கார்த்தியை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுபற்றி கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளம்பிள்ளை மற்றும் கோட்டைமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த சதீஷ்குமார் (19) உள்பட 2 பேரை கைது செய்தனர் .மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷ், குமார், ரஞ்சித் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து மொபைல் போன் சந்தையிலும் ரிலையன்ஸ் ஜியோ ஆதிக்கம் செலுத்துகிறது. #RelianceJio



    இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோனினை அறிமுகம் செய்தது. ஜியோபோன் வழக்கமான ஃபீச்சர்போன் வடிவமைப்பில் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 22 இந்திய மொழிகளில் இயக்கும் வசதி கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஜியோபோனின் மேம்பட்ட மாடல் ஜியோபோன் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இரண்டாம் தலைமுறை ஜியோபோன் 2 மாடலில் குவெர்ட்டி கீபோர்டு வழங்கப்பட்டது. இந்த மொபைல் போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த இரண்டு ஜியோபோன்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக இந்திய ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னணி நிறுவனமாகி இருக்கிறது.

    கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின்படி ரிலையன்ஸ் ஜியோபோன் 30 சதவகித பங்குகளுடன் இந்திய மொபைல் போன் சந்தையில் 2019 முதல் காலாண்டில் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 15 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.



    இருநிறுவனங்களை தொடர்ந்து லாவா நிறுவனம் 13 சதவிகித பங்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மூன்று நிறுவனங்களை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் 8 சதவிகித பங்குகளுடன் நான்காவது இடத்திலும், ஐடெல் 7 சதவிகித பங்குகளுடன் ஐந்தாவது இடமும் பிடித்திருக்கின்றன.

    இதுதவிர உலகம் முழுக்க சுமார் 40 கோடி ஃபீச்சர் போன்கள் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் சந்தையை போன்று இல்லாமல் ஃபீச்சர் போன் சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

    சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018-19 நான்காவது காலாண்டு காலத்தில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியதாக அறிவித்தது. இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 30.6 கோடியாக அதிகரித்தது.
    நாம் கைபேசியை உபயோகிக்கும் போது நம் கழுத்துப்பகுதி குனிந்த நிலையில் இருக்கும்போது கழுத்திற்கு பின்புறம் உள்ள தசைகளில் ஏற்படும் தொடர் இயக்கங்களால் கழுத்துவலி ஏற்படுகிறது.
    உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கைபேசியை உபயோகித்து வருகிறார்கள். அன்றாட வாழ்வில் நாம் எப்படி குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது போன்ற இன்றியமையாத பழக்கங்களை செய்து வருகிறோம். அதேபோல் கைபேசியை ஐந்து மணித்துளிகளுக்கு ஒருமுறை தொடர்ந்து ஆராய்ந்து பார்ப்பது, அதாவது எடுத்து பார்ப்பது நம்மை அறியாமல் நமக்கு ஏற்பட்ட முக்கிய பழக்கமாகிவிட்டது.

    இந்தியாவிலும் 10 கோடியிலிருந்து 20 கோடி மக்கள் கைபேசியை உபயோகித்து வருகிறார்கள். 2020-ல் இந்த எண்ணிக்கை சுமாராக 40 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சுமாராக நடுத்தர வயது மிக்க நபர் இரண்டு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரம் வரை கைபேசியை உபயோகித்து வருகிறார். பெரும்பாலும் நாம் கைபேசியை உபயோகிக்கும் போது நம் கழுத்துப்பகுதி குனிந்த நிலையில் சுமாராக 15 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை இருக்கும்போது கழுத்திற்கு பின்புறம் உள்ள தசைகளில் ஏற்படும் தொடர் இயக்கங்களால் கழுத்துவலி ஏற்படுகிறது.

    தமிழில் செய்திகளை கைபேசியில் தொடர்ந்து அனுப்புவதால் ஏற்படும் கழுத்து வலி என்று கூறலாம். அதாவது நம் கழுத்துப் பகுதியில் சுமாராக 40 தசைகளுக்கு மேல் உள்ளது. அதேபோல் 7 கழுத்து எலும்புகள் சிறியதாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கியது போன்ற அமைப்பு உள்ளது. இதில் முக்கியமாக நான்கு எலும்புகள் தலைப்பகுதியில் உள்ள 10 முதல் 12 பவுன்ஸ் எடையை தாங்குகிறது.


    இந்த எடையை தாங்கும் திறன் இயல்பாக கழுத்து எலும்புகளுக்கு அமைந்துள்ளது. ஆனால் நாம் கழுத்துப்பகுதியை குனிந்த நிலையில் வைத்துக்கொண்டு கைபேசியை உபயோகித்து செய்திகளை பரிமாறிக்கொள்ளும்போது செவித்திறன் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் கழுத்துப் பின்புறம் உள்ள தசைகளில் தேவையற்ற அதிக வேலை பளு கொடுக்க நேரும் போது நாளடைவில் கழுத்து தசைகளில் அயர்ச்சியையும், வலியையும் ஏற்படுத்துவதோடு தசைகளில் புரியாத ஒரு இறுக்கத்தை ஏற்படுத்துவதால் இனம்புரியாத வலியை உருவாக்குகிறது. தொடர்ந்து நாம் இதே முறையில் அதாவது கழுத்து முன்பகுதியை குனிந்தவாறு டைப் செய்யும்போது நம் அன்றாட பழக்கமாகி விடுவதால் இறுதியில் கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படும் அளவுக்கு சென்றுவிடும்.

    என் தொழில்ரீதியான அனுபவத்தில் முன்பெல்லாம் 45 வயதிற்கு மேல் கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படுவது இயல்பாக இருக்கும். ஆனால் சமீப காலமாக அதாவது நான்கு வருடமாக கழுத்து வலி, கழுத்து சதை பிடிப்பு, கழுத்துப் பகுதியில் உள்ள சவ்வு விலகுதல், கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற மாற்றங்கள் அதிகரித்து வருவதை உணர முடிகிறது.

    அதாவது கழுத்து கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தால் கழுத்துப்பகுதியில் ஏற்படும் வழி நாளடைவில் நாள்பட்ட கழுத்து வலியாக மாறும். 21-ம் நூற்றாண்டில் நமக்கு ஏற்பட்ட ஒரு குறைபாடாகவே இதனைக் கூறலாம். இதனால் சிலருக்கு தாங்க முடியாத தலைவலியும், ஒருபக்க தலைவலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது கழுத்துப் பின்புறம் உள்ள சதைகளில் ஏற்படும் இறுக்கத்தால் ஏற்படும் தலைவலி என்று கூறுவது தெளிவாகப் புரியும். குழந்தைகளும் கைபேசியை உபயோகிப்பது அதிகரித்து வருவதால் இதுபோன்ற பிரச்சினை அவர்களுக்கு தலைவலி போன்று முதலில் தெரிய ஆரம்பிக்கும். கண் பரிசோதனை மருத்துவரை அணுகி பரிசோதித்து சிலர் இதற்காக குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதும் நேரிடலாம்.

    இதனை தடுப்பதற்கு சில வழிகள்....

    கைபேசியை உபயோகிக்கும் போது முடிந்தவரை கழுத்தை கீழ்நோக்கி குனிந்த நிலையில் உபயோகிப்பதைத் தவிர்த்து உங்கள் கண்களுக்கு நேர்கோட்டில் இருக்கும்படி உபயோகியுங்கள். தொடர்ந்து கைபேசியை உபயோகித்து செய்திகளை அனுப்ப நேரிட்டால் சுமாராக பத்து நிமிடத்திற்கு ஒரு நிமிடம் தலையை நிமிர்ந்து பார்ப்பது உங்கள் கழுத்துப் பின்புறம் உள்ள தசைகளில் ஏற்படும் வேலைப்பளுவை குறைக்கும் படுத்துக்கொள்ளும் நிலையிலோ அல்லது சோபாவில் படுத்துக்கொள்ளும் நிலையிலோ கைபேசியைஅதிக நேரம் உபயோகிப்பதை தவிர்க்கவும்.

    கழுத்து மற்றும் தலை பகுதியை தரைப்பகுதியை நோக்கியவாறு தொடர்ந்து கைபேசியை உபயோகிப்பதை தவிர்க்கவும். குழந்தைகளுக்கும் மேற்கூறியதை தொடர்ந்து செயல்படுத்த முயற்சிக்கவும். காணொளிகளை தொடர்ந்து படுத்துக்கொண்டே பார்ப்பதை தவிர்க்கவும் முடிந்தவரை அதற்கு ஊடகமான தொலைக்காட்சிப் பெட்டியை உபயோகிக்கவும். வலிகளோடு வாழ்வதைத் தவிர்த்து உங்கள் கைபேசியை சரியான முறையில் உபயோகித்து வாழ்வது மற்றும் இல்லாமல் பிற்காலத்தில் ஏற்படும் கழுத்து, எலும்பு தேய்மானம், ஜவ்வு விலகல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

    செந்தில்குமார் தியாகராஜன், கல்லூரி விரிவுரையாளர், பிசியோதெரபி மருத்துவ கல்லூரி, குமாரபாளையம்.
    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 5ஜி சிப்செட் மற்றும் மோடெம்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. #Samsung



    சாம்சங் எலெக்டிராணிக்ஸ் நிறுவனம் 5ஜி மோடெம் மற்றும் சிப்செட்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இவை சமீபத்திய பிரீமியம் மொபைல் சாதனங்களில் வழங்கப்பட இருக்கின்றன.

    5ஜி சிப்செட்கள் - எக்சைனோஸ் மோடெம் 5100, எக்சைனோஸ் ஆர்.எஃப். 5500 மற்றும் எக்சைனோஸ் எஸ்.எம். 5800 என அழைக்கப்படுகின்றன. இவை மொபைல் போன் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கின்றன.



    முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 5ஜி வேரியண்ட் தென்கொரியாவில் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்தது. சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இதன் விலை 1332 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    5ஜி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை முழுமையாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனமாக இருக்கும் சாம்சங் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை மக்களிடையே கொண்டு செல்லும் முன்னணி நிறுவனமாக பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே தென் கொரியாவில் வணிக ரீதியிலான 5ஜி சேவை வழங்கப்பட்டு விட்டது. இவற்றுக்கும் சாம்சங்கின் 5ஜி நெட்வொர்க் கோர் மற்றும் ரேடியோ சாதனங்களே பயன்படுத்தப்படுகின்றன.
    கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் இளவயதினர் இடுப்பு வலிக்கு ஆளாயினர். மொபைல் போன் வந்தபிறகு இளவயதினருக்கு கழுத்துவலி வரத் தொடங்கி இருக்கிறது.
    நம் கையில் எப்போதும் ஒட்டிக் கிடக்கிறது செல்போன். நமது உடலின் ஒரு அங்கம் என்று கூட சொல்லலாம்.

    கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் இளவயதினர் இடுப்பு வலிக்கு ஆளாயினர். மொபைல் போன் வந்தபிறகு இளவயதினருக்கு கழுத்துவலி வரத் தொடங்கி இருக்கிறது.

    தலையின் சராசரி எடை சுமார் 5 கிலோ. செல்போன் திரையை பார்க்க கீழ்நோக்கி குனியும்போது கழுத்தின் மீது தலை செலுத்தும் விசையின் அளவு கூடுகிறது.

    குனியும் கோணத்துக்கு ஏற்ப தலையின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் கழுத்து தசைகள் களைப் படைந்து கழுத்து வலி, தோல் பட்டைவலி, தலைவலி உண்டாகிறது.



    அழுத்தம் காரணமாக ஜவ்வுகள் வெளியே துருத்தி வந்து கை நரம்புகளை அழுத்துவதால் கை குடைச்சல் மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. இளம் வயதிலேயே எலும்பு தேய்வதும் நடக்கிறது.

    தடுப்பதற்கான வழிகள்:

    * அதிக நேரம் செல்போன் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு ஒரு முறை பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * மிக முக்கியமாக செல்போனை முகத்துக்கு நேராக வைத்து பார்க்க வேண்டும். கீழே குனிந்து பார்ப்பது நல்லதல்ல.

    * படுத்துக்கொண்டு செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    * கழுத்து தசைகளை பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
    ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் தலைசிறந்த மொபைல் போன் பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Flipkart #smartphone



    2018 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தைக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. பல்வேறு பிராண்டுகள் தங்களது சாதனங்களில் புதுவித அம்சங்களை அறிமுகம் செய்து ஆண்டு முழுக்க பல்வேறு டிரெண்ட்களை உருவாக்கின. எனினும் இவற்றில் பயனர் விரும்பும் சாதனங்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் அம்சங்கள், அதன் வடிவமைப்பு என பல்வேறு காரணங்களை கடந்து அதனை எத்தனை பேர் வாங்கி பயன்படுத்துகின்றனர் என்பதே ஸ்மார்ட்போன் மற்றும் அதனை உருவாக்கும் பிராண்டுகளின் வெற்றியாக கருதப்படுகிறது. அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள், அதிக பிரபலமாக இருந்த பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.



    ப்ளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்

    2018 ஆம் ஆண்டு ப்ளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டாக சியோமி இருந்தது. எனினும் சியோமியை தொடர்ந்து பல்வேறு பிராண்டுகளும் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன. அந்த வரிசையில் சியோமிக்கு அடுத்த இடத்தில் ரியல்மி, ஹானர் மற்றும் அசுஸ் போன்ற பிராண்டுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன.

    தனிப்பட்ட ஸ்மார்ட்போன்களாக பார்க்கும் போது ரியல்மி 2 ஸ்மார்ட்போன் இருபது லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன. இதேபோன்று அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் பத்து லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பிரபல ஸ்மார்ட்போன்கள் என்ற அடிப்படையில் ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 5ஏ மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முன்னணி இடங்களில் உள்ளன.



    ப்ளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 2, ரெட்மி நோட் 5 ப்ரோ, அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையான பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களாக இருந்துள்ளன. மேலும் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வரிசையில் அதிகம் விற்பனையான விலை குறைந்த ஸ்மார்ட்போன் மாடலாக சியோமியின் ரெட்மி 5ஏ, ரெட்மி 6 மற்றும் ரியல்மி சி1 உள்ளிட்டவை இருக்கின்றன.



    பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்

    2018 ஆம் ஆண்டு பண்டிகை காலத்தில் சியோமி மற்றும் ரியல்மி உள்ளிட்டவை அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் பிராண்டுகளாக இருந்துள்ளன. பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 5 ப்ரோ, ரியல்மி 2, ரெட்மி 6, ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரெட்மி 5ஏ உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 106 ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் போன் அந்நிறுவனம் 2013ல் அறிமுகம் செய்திருந்த நோக்கியா 106 மாடலின் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆகும். புதிய நோக்கியா 106 (2018) மாடலில் 1.6 இன்ச் 160×128 பிக்சல் TFT டிஸ்ப்ளே, 4-வழி நேவிகேஷன் பட்டன் மற்றும் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பாலிகார்போனேட் பாடி, கான்டொர்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா மொபைலில் அந்நிறுவனத்தின் பாரம்பரிய ஸ்னேக் கேம், முற்றிலும் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் நைட்ரோ ரேசிங், டேன்ஜர் டேஷ், டெட்ரிஸ் மற்றும் பல்வேறு இதர கேம்கள் பிரீ-லோடு செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 106 (2018) அம்சங்கள்:

    - 1.8-இன்ச் QQVGA (160×128 பிக்சல் ) கலர் TFT டிஸ்ப்ளே
    - மீடியாடெக் 6261D பிராசஸர்
    - 4 எம்.பி. ரேம்
    - டூயல் பேன்ட், EGSM 900/1800
    - எஃப்.எம். ரேடியோ
    - கேம்கள்
    - ஃபிளாஷ்லைட்
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 3.5 எம்.எம். ஏ.வி. கனெக்டர்
    - 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய நோக்கியா 106 (2018) டார்க் கிரே நிறத்தில் கிடைக்கிறது. முதற்கட்டமாக ரஷ்யாவில் விற்பனைக்கு வரும் புதிய நோக்கியா போன் விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இதன் விலை 1590 ரூபில்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.1,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×