என் மலர்
நீங்கள் தேடியது "mobile phone"
- சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும்
- சஞ்சார் சாத்தி செயலியால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளது
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த செயலி அனைத்து புதிய தொலைபேசிகளிலும் இருக்க வேண்டும் எனவும் பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் எனவும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டது.
தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.
அதே சமயம் சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும். இதில் அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கான அணுகல் ஆகியவை அடங்கும் என்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்கும் முடிவிற்கு வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலி மொபைல் போன்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "இந்த செயலி அனைவரையும் சென்றடையச் செய்வது நமது பொறுப்பு. நீங்கள் அதை நீக்க விரும்பினால், அதை நீக்குங்கள். நீங்கள் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதை பதிவு செய்யாதீர்கள். நீங்கள் செயலியில் பதிவு செய்தால், அது செயலில் இருக்கும். நீங்கள் அதைப் பதிவு செய்யாவிட்டால், அது செயலற்றதாகவே இருக்கும்" என்று தெரிவித்தார்.
- சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும்
- சஞ்சார் சாத்தி செயலியால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த செயலி அனைத்து புதிய தொலைபேசிகளிலும் இருக்க வேண்டும் எனவும் பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் எனவும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டது.
தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.
அதே சமயம் சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும். இதில் அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கான அணுகல் ஆகியவை அடங்கும் என்பதால் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்கும் முடிவிற்கு வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அனைத்து போன்களிலும் சஞ்சார் சாத்தி ஆப்பை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமைக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தல். ஒட்டுமொத்தமாக, நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக இந்த அரசு மாற்றி வருகிறது. சைபர் மோசடிகளை தடுக்கும் வசதி அவசியம்தான், ஆனால் இது அந்த வரம்பையும் தாண்டி தனியுரிமையை கடுமையாக மீறுகிறது" என்று தெரிவித்தார்.
- சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும்
- சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும்
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த செயலி அனைத்து புதிய தொலைபேசிகளிலும் இருக்க வேண்டும் எனவும் பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் எனவும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டது.
தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.
அதே சமயம் சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும். இதில் அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கான அணுகல் ஆகியவை அடங்கும் என்பது பொதுமக்களுக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
- ஸ்பீக்கர்களைத் தவிர, பிக்சல் 10 சீரிஸ் முழுமையாக மேம்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் கூகுள் பிக்சல் 10 சீரிசை கூகுள் நிறுவனம் வெளியிட வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு, கூகுள் நிறுவனம் பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ XL மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு ஆகியவற்றை வழக்கமான பிக்சல் 10 மாடலுடன் சேர்த்து அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
எனினும், வரவிருக்கும் பிக்சல் 10 ஸ்மார்ட்போன்கள் மேம்பட்ட ஒலிபெருக்கி செயல்திறனை வழங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. வரவிருக்கும் சீரிஸ் புதிய டென்சார் ஜி5 சிப்செட்டில் இயங்கும் என்று தெரிகிறது. பிக்சல் 10 சீரிஸ் மாடல்கள் மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களுடன் வரும் என்று ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய சீரிஸ் "ஒரு பிக்சலில் இதுவரை இல்லாத சிறந்த ஆடியோ தரத்தைக் கொண்டுள்ளது" என்று கூறப்படுகிறது. பிக்சல் போன்களில் எப்போதும் நல்ல ஸ்பீக்கர்கள் உள்ளன, ஆனால் சிறந்தவை அல்ல.
இருப்பினும், பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் அதிலிருந்து விலகிச் செல்வதால், புதிய பிக்சல் 10 போன்களில் கூகுள் டால்பி அட்மோஸ் ஆதரவைச் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, கேலக்ஸி எஸ்25 சீரிஸ் டால்பி அட்மோஸ் வழங்கும் சில போன்களில் ஒன்றாகும்.
ஸ்பீக்கர்களைத் தவிர, பிக்சல் 10 சீரிஸ் முழுமையாக மேம்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரிஸ் கிம்பல்-லெவல் OIS (இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் மேக்னடிக் பவர் ப்ரொஃபைல் (MPP) தரத்துடன் கூடிய Qi 2.2 வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குவதாகக் கூறப்படுகிறது. புதிய போன்களுடன் 'பிக்சல்-ஸ்னாப்' சீரிஸ் ஆக்சஸரீயும் கூகுள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய போன்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் அதே நாளில் தொடங்கலாம், மேலும் அவை ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி கடைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஐரிஸ், லிமோன்செல்லோ, மிட்நைட் மற்றும் அல்ட்ரா ப்ளூ நிறங்களில் வெளியிடப்படலாம். பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ XL மாடல்கள் லைட் போர்சிலைன், மிட்நைட், ஸ்மோக்கி கிரீன் மற்றும் ஸ்டெர்லிங் கிரே நிறங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஸ்மோக்கி கிரீன் மற்றும் ஸ்டெர்லிங் கிரே வண்ணங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புதிய ஸ்மார்ட்போனிற்கு 2 ஆண்டுகள் OS அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
- ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 12-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் .
இன்ஃபினிக்ஸ் நிறுவனம், தனது GT சீரிசின் புதிய ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் GT 20 Pro-வை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K 144Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் 12GB வரை ரேம் மற்றும் 12GB வரை விர்ச்சுவல் ரேம், மீடியாடெக் டிமென்சிட்டி 8350 அல்டிமேட் 5G பிராசஸர் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6-அடுக்கு VC கூலிங் வசதியைக் கொண்டுள்ளது. இது அதன் முந்தைய மாடலை விட 13% பெரிய VC பகுதியைக் கொண்டுள்ளது. இது கிராஃப்டனால் சான்றளிக்கப்பட்ட 120FPS BGMI கேமிங் வசதி கொண்டிருக்கிறது. இது கேமிங் கண்ட்ரோல், எளிதான கேமரா செயல்பாடு மற்றும் விரைவான மீடியா பிளேபேக் வசதியை வழங்குகிறது.
புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த XOS 15 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இதில் ஃப்ளோட்டிங் வின்டோ, டைனமிக் பார், கேம் மோட், கிட்ஸ் மோட், பீக் ப்ரூஃப் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. இதில் உள்ள ஃபோலாக்ஸ் ஸ்மார்ட் அசிஸ்டண்ட் வானிலை அப்டேட், கேமரா கண்ட்ரோல் மற்றும் சாட் வசதிகளை வழங்குகிறது.
இந்த நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனிற்கு 2 ஆண்டுகள் OS அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சைபர் மெக்கா 2.0 டிசைன், பத்து விதங்களில் எல்இடி லைட்டிங் வசதி கொண்ட டார்க் ஃப்ளேர் நிற ஆப்ஷன் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை எல்இடி-க்களைக் கொண்ட பிளேட் ஒயிட் நிறத்திலும் வருகிறது.
புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைடு கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 45W வேகமான சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி உள்ளது.
இன்ஃபினிக்ஸ் GT 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 GB + 256 GB மாடலின் விலை ரூ. 24,999 மற்றும் 12 GB + 256 GB மாடலின் விலை ரூ. 26,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 12-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் .
ஸ்மார்ட்போனுடன் கிட் வாங்குபவர்களுக்கு, ப்ரோ மேக்னடிக் கூலிங் ஃபேன் மற்றும் GT கேஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரத்யேக GT கேமிங் கிட் ரூ.1,199 சலுகை விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்துடன் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2000 தள்ளுபடி அல்லது எக்ஸ்சேஞ்சில் கூடுதலாக ரூ. 2000 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
- மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உடுமலை :
மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.இங்கு சின்னப்பன் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல் கிடங்கின் முன் முத்துச்சாமி கட்டிலை போட்டு தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக அந்த பகுதியை நோட்டம் விட்டு விட்டு,அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறார். பின்னர் முத்துசாமியின் அருகில் சென்று அவர் தலையணைக்கடியில் வைத்திருந்த செல்போனை நைசாக திருடுகிறார்.அப்போது விழித்துக் கொண்ட முத்துச்சாமி அந்த நபரை துரத்துகிறார்.ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் செல்போனுடன் அந்த நபர் தப்பிச்செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நோக்கியா பிரான்டிங்கில் இரண்டு புதிய மொபைல் போன்கள் அறிமுகம்.
- நோக்கியா ஃபீச்சர் போன்களில் யுபிஐ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய நோக்கியா மொபைல் போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 110 2ஜி மாடல்கள் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இரு மாடல்களும் மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கின்றன.
இத்துடன் நானோ-டெக்ஸ்ச்சர் பாடி மற்றும் பில்ட்-இன் யுபிஐ சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியாவின் பாரம்பரியம் மிக்க உற்பத்தி தரம் மற்றும் வித்தியாசமான ஸ்டைல் உள்ளிட்டவை புதிய மாடல்களிலும் தொடர்கிறது. புதிய நோக்கியா மாடல்களில் பில்ட்-இன் கேமரா, எஸ்டி கார்டு ஸ்லாட், மியூசிக் பிளேயர் மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா 110 4ஜி (2023) அம்சங்கள்:
1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
QCGA பிரைமரி கேமரா
1450 எம்ஏஹெச் பேட்டரி
ப்ளூடூத் 5.0
3.5mm ஹெட்போன் ஜாக்
மைக்ரோ யுஎஸ்பி 2.0
மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்
எஸ் 30 பிளஸ் ஒஎஸ்
வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ
2ஜி, 3ஜி, 4ஜி (நானோ சிம், டூயல் சிம் சப்போர்ட்)
IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்

நோக்கியா 110 2ஜி (2023) அம்சங்கள்:
1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
QCGA பிரைமரி கேமரா
1000 எம்ஏஹெச் பேட்டரி
யுஎஸ்பி கனெக்ஷன், மைக்ரோ யுஎஸ்பி
மைக்ரோ எஸ்டி சப்போர்ட்
எஸ் 30 பிளஸ் ஒஎஸ்
வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ
2ஜி, டூயல் சிம்
IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா 110 4ஜி (2023) மாடல் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 110 2ஜி (2023) மாடல் சார்கோல் மற்றும் கிளவுடி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை விரைவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.
- செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது.
- மத்திய நிதி அமைச்சகம் இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மத்திய நிதிஅமைச்சகம் நேற்று இரவு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை (சுங்ககட்டணம்) 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.
செல்போன் உதிரிபாகங்களான பின் கவர்கள், பேட்டரி கவர்கள், ஜிஎஸ்எம் ஆன்டெனா, மெயின் கேமரா லென்ஸ் மற்றும் இதர பிளாஸ்டிக் மற்றும் உலோக மெக்கானிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மத்திய அரசின் வருவாய்த்துறை குறைத்துள்ளது.
உதிரிபாகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த இறக்குமதி வரி குறைப்பு உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான மொபைல் அசெம்பிளி லைன்களை அமைக்க உதவும், மேலும் செல்போன்களின் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும்.
இந்த நடவடிக்கை இந்தியாவின் செல்போன் உற்பத்தியை மேலும் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் என இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
இறக்குமதி வரிகுறைப்பு மூலம் செல்போன் துறையில் ஒரு நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம் செல்போன் விரிவாக்கம் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் உலகளாவிய சந்தையில் போட்டித்தன்மையை மேம்படுத்த இது உதவுகிறது
- புகைப்படங்களை எடுக்க 0.3MP கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- கனெக்டிவிட்டிக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.
நோக்கியாவின் தாய் நிறுவனம் ஹெச்.எம்.டி. குளோபல், ஹெயின்கென் மற்றும் பொடெகாவுடன் இணைந்து முற்றிலும் புதிய லிமிடெட் எடிஷன் போரிங் போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மொபைல் போன் நோக்கியா 2660 ப்ளிப் போன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் 4ஜி காலிங் வசதி, இரண்டு ஸ்கிரீன்கள், டிரான்ஸ்லுசென்ட் டிசைன் உள்ளது. போரிங் போன் மாடலில் 2.8 இன்ச் QVGA ஸ்கிரீன், வெளிப்புறத்தில் 1.77 இன்ச் ஸ்கிரீன் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 0.3MP கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 128MB ரோம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மாடல் என்பதால் போரிங் போன் மொத்தத்தில் 5 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.
- இந்த மொபைல் போன் டூயல் 4ஜி, 2ஜி, 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
ஐடெல் நிறுவனத்தின் சூப்பர் குரு 4ஜி பீச்சர் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலை முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த மொபைல் போன் 2 இன்ச் டிஸ்ப்ளே, டிஜிட்டல் கேமரா, கிளவுட் மூலம் யூடியூப் சேவையை பயன்படுத்தும் வசதி, 123பே (123Pay) அம்சம் கொண்டிருக்கிறது. 123பே அம்சம் மூலம் பயனர்கள் டிஜிட்டல் பேமெண்ட் செய்ய முடியும். இத்துடன் 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலில் டூயல் 4ஜி, 2ஜி மற்றும் 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. கீபேட் மொபைல் போன்களில் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் வசதியை வழங்கும் கிங் வாய்ஸ் அம்சம் இந்த மொபைலில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டெட்ரிஸ், 2048 மற்றும் சுடோக்கு போன்ற கேம்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விலையை பொருத்தவரை ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடல் ரூ. 1799-க்கு கிடைக்கிறது. இந்த மொபைல் போன்- பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐடெல் இந்தியா வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.
- Nokia 3210 மொபைல் போன் 25 ஆண்டுகளுக்கு பிறகு நவீன வசதிகளுடன் விற்பனைக்கு வர உள்ளது
- உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நோக்கியா தயாராகி உள்ளது.
கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது. இது இந்திய சந்தையில் ரூ.2,999க்கு விற்பனையானது.
உலகம் முழுவதும் இந்த செல்போன் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து ஸ்மார்ட் போன்கள் வருகையால் இதன் தயாரிப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தாலும் நம் நினைவுகளில் நோக்கியா 3210 ஆழமாக பதிந்துள்ளது. இதன் ஆயுள், எளிமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் சின்னமாக, 3210 பலரின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது.
இப்போது, உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நோக்கியா தயாராகி உள்ளது.
இந்நிலையில் Nokia 3210 மொபைல் போன் 25 ஆண்டுகளுக்கு பிறகு நவீன வசதிகளுடன் மீண்டும் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.இந்த நோக்கியா போன் - 2024 க்கான புதிய பட்ஜெட் போன் ஆகும் இதில் 4G, Bluetooth, Snake game 2 வசதிகள் உள்ளன.
- இந்த மொபைல் எஸ்30 பிளஸ் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.
- இந்த மொபைல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் முற்றிலும் புதிய நோக்கியா 3210 மொபைல் போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் அந்நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்த மொபைலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2.4 இன்ச் TFT LCD ஸ்கிரீன், QVGA ரெசல்யூஷன், 2MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் எஸ்30 பிளஸ் ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இது கிளவுட் சார்ந்த செயலிகளை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. இதன் மூலம் செய்திகள், வானிலை அப்டேட்கள் மற்றும் யூடியூப் ஷாட்ஸ் உள்ளிட்டவைகளை இயக்க முடியும். 2024 நோக்கியா 3210 மாடல் யுனிசாக் டி107 பிராசஸர், 64எம்.பி. ரேம், 128 எம்.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5, 3.5mm ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, MP3 பிளேயர் மற்றும் நோக்கியா போன்களில் பிரபலமான ஸ்னேக் கேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் 1450 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டுள்ளது.
புதிய நோக்கியா 3210 (2024) மாடலின் விலை 89 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போன் க்ரஞ்ச் பிளாக், Y2K கோல்டு மற்றும் சப்பா புளூ நிறங்களில் கிடைக்கிறது.






