என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபைல்"

    • கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
    • ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யுஐ 6.1 கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு தலைமுறை ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் பென்ச்மார்க்கிங் வலைதளத்தில் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் ஒன் யுஐ 8 பீட்டா அப்டேட் பெறலாம் என்பதை பரிந்துரைக்கிறது. கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பிடத்தக்க வகையில், கேலக்ஸி A55 5ஜி சமீபத்தில் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 அப்டேட்டை சமீபத்தில் பெற்றது. இந்த மாத தொடக்கத்தில், சாம்சங் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் கேலக்ஸி S25 சீரிசுக்கான ஒன் யுஐ 8 பீட்டா 2 வெர்ஷனை வெளியிட்டது.

    கேமராவை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 8MP சென்சார் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz வரை ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.6-இன்ச் Full-HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.32,999, ரூ.42,999 மற்றும் ரூ.45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    • ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது.
    • ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8 மிமீ தடிமன் கொண்டிருக்கும்.

    ஹானர் மேஜிக் V5 ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஹானர் நிறுவனம் அதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை வெளிப்படுத்தும் டீசர்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறது. சமீபத்திய சமூக வலைதள பதிவில், ஹானர் பிரான்டு வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    புதிய ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் 6,100mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெய்போவில் வெளியாகி இருக்கும் புதிய டீசரில், ஹானர் மேஜிக் V5 மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரவிருக்கும் மாடல் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறியது. கடந்த ஆண்டு ஹானர் மேஜிக் V3 ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் கொண்டிருந்தது.

    பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் தவிர, ஹானர் மேஜிக் V5 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு ஆங்கிள் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது. இதில் 6,100mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்- டான் கோல்ட், சில்க் ரோடு டன்ஹுவாங், வெல்வெட் பிளாக் மற்றும் வார்ம் ஒயிட் என நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படும். இது 12GB + 256GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB மெமரி வெர்ஷன்களில் கிடைக்கும்.

    ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8 மிமீ தடிமன் கொண்டிருக்கும். இது உலகின் மிக மெல்லிய மற்றும் இலகுவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராராகன் 8 எலைட் சிப்செட் வழங்கப்படுகிறது. மேலும், இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    • IP65-தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
    • ஸ்மார்ட்போன் 100W PPS மற்றும் USB-PD சார்ஜிங் முறைகளை ஆதரிக்கிறது.

    ஐகூ நியோ 10 Pro+ சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூவின் புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது. ஐகூ நியோ 10 Pro+ மூன்று வண்ணங்களில் வருகிறது. மேலும் 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.82-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. ஐகூ நியோ 10 Pro+ 50MP இரட்டை பின்புற கேமரா சென்சார்கள் உள்ள. மேலும் 120W அதிவேக சார்ஜிங் வசதியுடன் 6800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    ஐகூ நியோ 10 Pro+ விலை

    ஐகூ நியோ 10 Pro+ 12GB RAM + 256GB மெமரி மாடல் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ. 35,500) இல் இருந்து தொடங்குகிறது. இதன் 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB, மற்றும் 16GB+1TB மெமரி மாடல்களின் விலை முறையே CNY 3,499 (இந்திய மதிப்பில் ரூ. 41,500), CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ. 39,000), CNY 3,699 (இந்திய மதிப்பில் ரூ. 43,000) மற்றும் CNY 4,199 (இந்திய மதிப்பில் ரூ. 50,000) ஆகும்.

    ஐகூ நியோ 10 Pro+ தற்போது சீனா பிளாக் ஷேடோ, சி குவாங் ஒயிட் மற்றும் சூப்பர் பிக்சல் (சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) வண்ணங்களில் கிடைக்கிறது .

    ஐகூ நியோ 10 ப்ரோ+ அம்சங்கள்

    இரட்டை சிம் (நானோ) ஐகூ நியோ 10 Pro+ ஆனது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 15 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.82-இன்ச் 2K (1440x3168 பிக்சல்) 8T LTPO AMOLED டிஸ்ப்ளே,144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 4,500nits பிரைட்னஸ் கொண்டுள்ளது.

    ஐகூ நியோ 10 Pro+ ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிபாகன் 8 எலைட் சிப்செட், அட்ரினோ 830 GPU உடன் இணைந்து, 16GB வரை LPDDR5X RAM, அதிகபட்சம் 1TB UFS4.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க, ஐகூ நியோ 10 Pro+ இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி கேமரா மற்றும்8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபி எடுக்க முன்பக்கத்தில் 16MP CMOS சென்சார் கொண்டுள்ளது.

    ஐகூ நியோ 10 Pro+ இல் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, GPS, GLONASS, GALILEO, BeiDou, NFC, GNSS, QZSS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இது IP65-தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    ஐகூ நியோ 10 Pro+ ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் தொழில்நுட்பம் 25 நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 70 சதவீதம் வரை நிரப்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 100W PPS மற்றும் USB-PD சார்ஜிங் முறைகளை ஆதரிக்கிறது. இது 163.79x76.60x8.20mm அளவையும் சுமார் 217 கிராம் எடையும் கொண்டது.

    • ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ இரண்டும் 7,200mAh பேட்டரி மூலம் செயல்படும்.
    • ஹானர் 400 சீரிசின் உலகளாவிய வேரியண்ட்கள் வெவ்வேறு பேட்டரி திறன்களைக் கொண்டுள்ளன.

    ஹானர் நிறுவனம் சீன சந்தையில் ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கான புதிய டீஸர்களை ஹானர் பிராண்டு பகிர்ந்துள்ளது. டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன் சிரீஸின் பேட்டரி மற்றும் சிப்செட் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களும் அவற்றின் முந்தைய சிரீசை விட கணிசமாக பெரிய திறன் கொண்ட பேட்டரிகளை வழங்கும் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும். ஹானர் 400 சீரிஸ் வெளியீடு வருகிற 22-ந்தேதி சீனா தவிர்த்த மற்ற சந்தைகளில் நடைபெறும்.

    ஹானர் 400 சிரீஸ் சீனாவில் வருகிற 28-ந்தேதி மாலை 7:30 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5:00 மணி) வெளியிடப்படும் . புதிய வரிசையில் மெட்டல் ஃபிரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட்கள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெண்ணிலா ஹானர் 400 ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டில் இயங்கும். ஹானர் 400 ப்ரோ "புதிய தலைமுறை ஸ்னாப்டிராகன் ஃபிளாக்ஷிப் சிப்" பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 SoC ஆக இருக்கலாம்.

    ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ இரண்டும் 7,200mAh பேட்டரி மூலம் செயல்படும். இது கடந்த ஆண்டு வெளியான ஹானர் 300 தொடரின் 5,300mAh பேட்டரியிலிருந்து குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும்.

    ஹானர் 400 தொடர் சிறப்பம்சங்கள்:

    ஹானர் 400 சீரிசின் உலகளாவிய வேரியண்ட்கள் வெவ்வேறு பேட்டரி திறன்களைக் கொண்டுள்ளன. ஹானர் பிரிட்டன் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ 6,000mAh பேட்டரிகளைக் கொண்டுள்ளன. ப்ரோ மாடல் 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் வெண்ணிலா மாடல் 80W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

    ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் லூனார் கிரே, மிட்நைட் பிளாக் மற்றும் டைடல் ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. பின்புறத்தில் 200MP பிரைமரி சென்சார், 50MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட மூன்று கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50MP செல்ஃபி கேமரா உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்சண்ட் வசதிக்காக இந்த போன் IP68 + IP69 சான்றளிக்கப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டில் இயங்கும்.

    ஹானர் 400 டெசர்ட் கோல்ட், மிட்நைட் பிளாக் மற்றும் மீடியோர் சில்வர் நிறங்களில் கிடைக்கும். இது 200MP பிரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளிட்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 50MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 SoC கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் IP66-தரச் சான்று பெற்றுள்ளது.

    ஹானர் 400 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 5,000-நிட் பீக் பிரைட்னஸ், 1,280x2,800 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட்கொண்ட டிஸ்ப்ளேக்களைக் கொண்டதாக பட்டியலிடப்பட்டுள்ளன.

    ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ ஆகியவை மே 22 ஆம் தேதி ஐரோப்பிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

    • ரியல்மி GT 7 மீடியாடெக் டிமென்சிட்டி 9400e பிராசஸரில் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • ரியல்மி GT 7 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக காத்திருக்கும் வேளையில், சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ரியல்மி GT 7 மாடலுடன் ரியல்மி GT 7 ட்ரீம் மாடலையும் வெளியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு மாடல் ஒரு தனித்துவமான வடிவமைப்புடன் வர வாய்ப்புள்ளது. இது ஸ்டாண்டர்ட் மாடலின் அம்சங்களை அப்படியே தக்க வைத்துக் கொள்ளலாம். ரியல்மி GT 7 மீடியாடெக் டிமென்சிட்டி 9400e பிராசஸரில் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ரியல்மி GT 7 ட்ரீம் எடிஷன் அதன் ஸ்டாண்டர்ட் GT 7 மற்றும் GT 7T மாடல்களுடன் வருகிற 27-ந்தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

    ரியல்மி GT 7 ட்ரீம் மாடலில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஐகான்கள் மற்றும் தீம்கள், தனித்துவ வடிவமைப்பு மற்றும் பிரத்யேக பேக்கேஜிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்-இல் இருந்து தனித்து நிற்கிறது.

    ரியல்மியின் முந்தைய சிறப்பு மாடல் ஸ்மார்ட்போன்களைப் போலவே, வரவிருக்கும் மாடலும் அசல் ரியல்மி ஜிடி 7-இலிருந்து வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டு தனித்து நிற்கக்கூடும். அதே நேரத்தில் ஸ்டாண்டர்ட் மாடலின் அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்ளும்.

    வரவிருக்கும் ரியல்மி GT 7 ஸ்மார்ட்போன் ஐஸ்-சென்ஸ் புளூ (IceSense Blue) மற்றும் ஐஸ்-சென்ஸ் பிளாக் (IceSense Black) வண்ண விருப்பங்களில் வெளியிடப்படும் என்பதை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இது 120W வயர்டு சார்ஜிங்குடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

    ரியல்மி GT 7 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 50MP பிரைமரி கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைடு கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கலாம்.

    சமீபத்திய தகவலின்படி, ரியல்மி GT 7 ஸ்மார்ட்போனின் 12GB RAM + 512GB மாடலின் விலை 799 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 77,000) வரை இருக்கும் என தெரிகிறது.

    • 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.
    • இந்த ஸ்மார்ட்போன் LPDDR5x Ultra RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐகூ நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்கள் வருகிற 20-ந்தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான நிகழ்வில் ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ், ஐகூ பேட் 5 சீரீஸ், ஐகூ வாட்ச் 5, ஐகூ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 3 அறிமுகப்படுத்தப்படுகிறது.

    இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஐகூ நியோ 10 மற்றும் நியோ 10 ப்ரோ சீரிசில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் மற்றும் 2K டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் வழங்கப்படும் என்று ஐகூ நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த சிப்செட் ஐகூ பிராண்டின் புளூ க்ரிஸ்டல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் LPDDR5x Ultra RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஏற்படும் வெப்பத்தை கையாள்வதற்காக 7K ஐஸ் வால்ட் கொண்டிருக்கும் என்றும், இது குளிரூட்டும் திறனை 15 சதவீதம் மேம்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

    வரவிருக்கும் நியோ 10 ப்ரோ+ 1.5மிமீ பெசல்கள் மற்றும் ஒரு கண்ணாடி பின்புற பேனலுடன் 2K டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று ஐகூ தெரிவித்துள்ளது. இது ஷி குவாங் ஒயிட், ஷேடோ பிளாக் மற்றும் சூப்பர் பிக்சல் (சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) போன்ற நிறங்களில் கிடைக்கும்.

    ஐகூ நியோ 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.82-இன்ச் பிளாட் OLED திரையுடன் வரும் ஏற்கனவே வெளியான தகவல்களில் கூறப்பட்டுள்ளது. பின்புறம் இரட்டை 50MP கேமராக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என்றும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 5 உடன் வரலாம்.

    • கேலக்ஸி S25 எட்ஜ் மாடலுக்கான் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
    • ஸ்மார்ட்போன் டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்-பிளாக் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் வெளியிடப்பட்டது. இந்த புதிய போனின் இந்திய விலை விவரங்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கேலக்ஸி S25 எட்ஜ், கேலக்ஸி சிப்செட்டிற்கான ஸ்னாப்டிராகன் 8 எலைட், 200MP கேமரா யூனிட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    5.8 மிமீ அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், இதுவரை இருந்த மிக மெல்லிய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இது 12 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S25 எட்ஜ் மாடலுக்கான் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் 12ஜிபி + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 1,09,999-ல் தொடங்குகிறது. இதன் 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ. 1,21,999 ஆகும். இந்த மொபைல் தற்போது சாம்சங் இந்தியா இ-ஸ்டோரில் முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்-பிளாக் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் கேலக்ஸி S25 எட்ஜ் 512ஜிபி வேரியண்ட்-ஐ 256ஜிபி மாடலின் விலையிலேயே வாங்க முடியும்.

    சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் மாடலில் 6.7-இன்ச் குவாட் ஹெச்டி + 1440x3120 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 பாதுகாப்புடன் கொண்டுள்ளது. இது கேலக்ஸி SoC-க்கான ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் கொண்டிருக்கிறது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 உடன் கிடைக்கிறது.

    கேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் மாடலில் 2x ஆப்டிகல் இன்-சென்சார் ஜூம் மற்றும் OIS வசதி கொண்ட 200MP பிரைமரி கேமரா, பின்புறம் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறம் பஞ்ச்-ஹோல் ஸ்லாட்டில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 12MP சென்சார் உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் ஆனது 25W வயர்டு மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 3,900mAh பேட்டரி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். இது IP68 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    • கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல் 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.7 இன்ச் உள்புற டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
    • ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் கொண்டு இருக்கும் என்றும் இதில் அதிகபட்சம் 4,300mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 7 உடன் கேலக்ஸி Z போல்டு 7 ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் கிளாம்ஷெல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகி உள்ள தகவல்களை பார்ப்போம்.

    கேலக்ஸி Z ப்ளிப் 7 குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மேம்பாட்டை கொண்டிருக்கும் என தெரிகிறது. இது சாதனத்தின் மேல் பாதியை உள்ளடக்கிய மிகவும் விரிவான, எட்ஜ்-டு-எட்ஜ் கவர் டிஸ்ப்ளேவுடன் வருவதாக கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 7 இன் பெரிய கவர் டிஸ்ப்ளே பற்றிய விவரங்கள் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி கண்டறிந்துள்ளது.

    இது தொடர்பான அனிமேஷன் கோப்புகள் கேலக்ஸி Z ப்ளிப் 5 , கேலக்ஸி Z ப்ளிப் 6 மற்றும் வரவிருக்கும் கேலக்ஸி Z ப்ளிப் 7 ஆகியவற்றைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6-க்கான காட்சிகள் அவற்றின் தற்போதைய வடிவமைப்புகளுடன் பொருந்தினாலும், கேலக்ஸி Z ப்ளிப் 7 இன் அனிமேஷன் குறிப்பிடத்தக்க அளவு பெரிய கவர் டிஸ்ப்ளேவைக் குறிக்கிறது.

    கேலக்ஸி Z ப்ளிப் 7-இல் தற்போதுள்ள வடிவமைப்பிற்கு பதிலாக, புதிய மாடலில் மோட்டோரோலா ரேசர் 50-ஐ ஒத்த இரட்டை கேமராக்களுக்கான கட்-அவுட்கள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது.

    வரவிருக்கும் கேலக்ஸி Z ப்ளிப் 7 மாடல் 4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.8 இன்ச் உள்புற டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்பட்டது. ஆனால், கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல் 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 6.7 இன்ச் உள்புற டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

    இது 12 ஜிபி ரேம் உடன் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 2500 சிப்செட்டைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இது 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட இரட்டை கேமரா ஸ்லாட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் கொண்டு இருக்கும் என்றும் இதில் அதிகபட்சம் 4,300mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

    • மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
    • புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

    மொபல் போன்களின் பிரியர்களுக்காக நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பலவிதமான மாடல்களில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, சோனி நிறுவனம் சோனி எக்ஸ்பீரியா 1 VII-ஐ வருகிற 15-ந்தேதி அறிமுகப்படுத்துகிறது.

    சோனி எக்ஸ்பீரியா 1 VII கருப்பு, பச்சை மற்றும் ஊதா என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸரால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 12 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த மாடலில் பெரிய டிஸ்ப்ளே உள்ளது. மேலும் செல்ஃபி கேமரா மேல்பக்க பெசலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் இரட்டை LED ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.

    மேலும், சோனியின் பிராவியா தொழில்நுட்பத்துடன் கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலில் 5,000mAh பேட்டரி இருக்கும் என்றும் இரண்டு நாட்கள் வரை பேட்டரி சார்ஜ் வழங்கும் என கூறுகின்றனர்.

    • 55% இலிருந்து 62% ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
    • 10 பேரில் இருவர் தங்கள் தொலைப்பேசிகளில் சீன செயலிகளை கொண்டுள்ளனர்.

    கடந்த 12 மாதங்களில் 62% இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்கியுள்ளனர் என புதிய சர்வேயில் தெரியவந்துள்ளது.

    லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் சீனப் பொருட்களை வாங்கும் இந்திய நுகர்வோரின் சதவீதம் 55% இலிருந்து 62% ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்தியர்கள் அதிக சீனப் பொருட்களை வாங்கும் பிரிவுகள், கேஜெட்டுகள், மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல் பாகங்கள் ஆகும்.

    மேலும் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 10 பேரில் இருவர் தங்கள் தொலைப்பேசிகளில் சீன செயலிகளை கொண்டுள்ளனர்.

    • ரெயில் டிக்கெட் பதிவு செய்ய புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    மதுரை

    ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் எடுக்க, கடைசி நேரத்தில் வரும் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக டிக்கெட் எடுக்கலாம். மேலும் சீசன்- பிளாட்பாரம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். சீசன் டிக்கெட்டுகளை எளிதாக புதுப்பிக்கவும் இயலும்.

    அதாவது ரெயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் முதல் 20 கி.மீ. தொலைவு வரை வீட்டில் இருந்தே பயணச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் போனில் அன்ரிசர்வ் டிக்கெட் எடுக்கும் முறையில் காகிதம் இல்லாத- காகிதத்துடன் கூடிய பயண சீட்டுகள் உள்ளன. அதன்படி சுற்றுச்சூழலுக்கு

    காகிதம் இல்லாத பயணச் சீட்டு எடுக்க முடியும். மொபைல் போன் யூடிஎஸ் செயலியில் "காண்க டிக்கெட்" (SHOW TICKET option) பகுதியில் உள்ள பயணச்சீட்டை எடுக்கலாம். அதனை டிக்கெட் பரிசோதரிடம் காண்பித்துக் கொள்ளலாம். இது காகிதம் இல்லாத முறை ஆகும்.

    அடுத்தபடியாக காகிதத்துடன் கூடிய முறை. இதன்படி பயணச்சீட்டு பதிவு செய்யும்போது வந்த அல்லது குறுஞ்செய்தியில் வந்த அல்லது பதிவு வரலாற்றில் உள்ள பதிவு அடையாள எண் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி டிக்கெட் பதிவு ரெயில் நிலையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு பதிவு எந்திரத்தில் பயணச்சீட்டு அச்சிட்டு கொள்ளலாம்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிறு சிறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருப்பது போல க்யூஆர் கோட், பயணச்சீட்டு அலுவலகம் அருகே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை ஸ்கேன் செய்தவுடன் போக வேண்டிய ரெயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்து மின்னணு வசதி வாயிலாக பணம் செலுத்தி டிக்கெட்டை எளிதாக பதிவு செய்யலாம்.

    காகிதம் இல்லாத முறையில் டிக்கெட் எடுக்கும் போது மொபைல் போனில் பதிவு செய்த பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும். இல்லையெனில் உரிய அபராதம் விதிக்கப்படும். தென்னக ரெயில்வேயில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை கடந்த 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 2.51 கோடி பயணிகள், கூட்ட நெரிசல் இன்றி டிக்கெட் எடுத்து பயணம் செய்து உள்ளனர்.

    தென்னக ரெயில்வேயில் மொபைல் போன் பதிவு மூலம் பயண சீட்டு வருமானமாக ரூ.24.82 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

    • உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
    • மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது.

    இரவில் தாமதமாக உறங்கச் செல்பவர்களை தூக்கி வாரிப் போடும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறையால் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களில் முக்கியமானது சிறுவர்கள் உட்பட பெரும்பாலானோர் அதிகமாக மொபைல் பயபடுத்துவது ஆகும்.

    இரவில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு விடிய விடிய மொபைல் பயன்படுத்தும் காட்சிகளை ஏறக்குறைய எல்லோரது வீட்டிலும் நாம் பார்க்க முடியும். இதனால் மனிதர்களின் உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

     

    அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக ஸ்டேன்போர்டு பலகலைக்கழகத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தூங்கச்செல்பவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் உண்டாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவில் தாமதமாக உறங்கச் செல்வதால் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு திறன், நோய் எதிர்ப்புதிறன் குறைவு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

     

    மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது. மேலும் அந்த ஆய்வில் இரவு வேகமாக தூங்கி அதிகாலையில் எழுந்துகொள்பவர்களின் மனநலம் சிறப்பானதாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது பிரிட்டனில் உள்ள சுமார் 74,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×