search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train tickets"

    • போலீசார் விசாரணை
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் முன்பதிவு செய்யப்பட்ட ஏ.சி. பெட்டியில் பி.விஜூ (வயது 45) என்பவர் டிக்கெட் பரிசோதக ராக பணியில் இருந்தார்.

    ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து வந்த போது அந்த பெட்டியில் கதவு அருகில் நின்றிருந்த ஒருவரிடம், டிக்கெட் பரி சோதகர் விஜூ, என்ன டிக்கெட் வைத்துள்ளார் என்று சோதனை செய்தபோது அவர் பொது பெட்டியில் பயணம் செய் வதற்கான டிக்கெட் வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதனால் அபராதம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதில் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டு அந்த நபர், டிக்கெட் பரிசோதகரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்தபோது ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோரிடம் தாக்கிய நபரை ஒப்படைத்து புகார் அளித்தார்.

    அதன்பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் விழுப்புரம் மாவட்டம் சொம்ம னாபுரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (49) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரெயில் டிக்கெட் பதிவு செய்ய புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    மதுரை

    ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் எடுக்க, கடைசி நேரத்தில் வரும் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக டிக்கெட் எடுக்கலாம். மேலும் சீசன்- பிளாட்பாரம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். சீசன் டிக்கெட்டுகளை எளிதாக புதுப்பிக்கவும் இயலும்.

    அதாவது ரெயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் முதல் 20 கி.மீ. தொலைவு வரை வீட்டில் இருந்தே பயணச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் போனில் அன்ரிசர்வ் டிக்கெட் எடுக்கும் முறையில் காகிதம் இல்லாத- காகிதத்துடன் கூடிய பயண சீட்டுகள் உள்ளன. அதன்படி சுற்றுச்சூழலுக்கு

    காகிதம் இல்லாத பயணச் சீட்டு எடுக்க முடியும். மொபைல் போன் யூடிஎஸ் செயலியில் "காண்க டிக்கெட்" (SHOW TICKET option) பகுதியில் உள்ள பயணச்சீட்டை எடுக்கலாம். அதனை டிக்கெட் பரிசோதரிடம் காண்பித்துக் கொள்ளலாம். இது காகிதம் இல்லாத முறை ஆகும்.

    அடுத்தபடியாக காகிதத்துடன் கூடிய முறை. இதன்படி பயணச்சீட்டு பதிவு செய்யும்போது வந்த அல்லது குறுஞ்செய்தியில் வந்த அல்லது பதிவு வரலாற்றில் உள்ள பதிவு அடையாள எண் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி டிக்கெட் பதிவு ரெயில் நிலையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு பதிவு எந்திரத்தில் பயணச்சீட்டு அச்சிட்டு கொள்ளலாம்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிறு சிறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருப்பது போல க்யூஆர் கோட், பயணச்சீட்டு அலுவலகம் அருகே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை ஸ்கேன் செய்தவுடன் போக வேண்டிய ரெயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்து மின்னணு வசதி வாயிலாக பணம் செலுத்தி டிக்கெட்டை எளிதாக பதிவு செய்யலாம்.

    காகிதம் இல்லாத முறையில் டிக்கெட் எடுக்கும் போது மொபைல் போனில் பதிவு செய்த பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும். இல்லையெனில் உரிய அபராதம் விதிக்கப்படும். தென்னக ரெயில்வேயில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை கடந்த 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 2.51 கோடி பயணிகள், கூட்ட நெரிசல் இன்றி டிக்கெட் எடுத்து பயணம் செய்து உள்ளனர்.

    தென்னக ரெயில்வேயில் மொபைல் போன் பதிவு மூலம் பயண சீட்டு வருமானமாக ரூ.24.82 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

    காத்திருப்போர் நிலையில் உள்ள ரெயில் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து சொல்லி விடும். அதற்கேற்ப இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில்களில் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், தினந்தோறும் சுமார் 13 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

    இதனால், பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் காத்திருக்கும் நிலை டிக்கெட்டுகளாகவும், ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகளாகவும் அமைகின்றன. அந்த டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள முடியாதநிலை இருந்தது.

    இந்நிலையில், அத்தகைய டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து சொல்லி விடும். அதற்கேற்ப இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே தகவல் சேவை மையம் உருவாக்கிய புதிய தொழில்நுட்பத்தின்படி, முன்பதிவு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து, காத்திருக்கும் நிலையில் உள்ள டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை இணையதளம் யூகித்து சொல்லி விடும். இந்த புதிய முறை, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 
    செல்போன் மூலம் டிக்கெட் எடுத்தால் ரெயில் கட்டணத்தில் சலுகை கிடைக்கும் வகையில், மதுரை கோட்டம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. #train

    மதுரை:

    மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விரைவு ரெயில் மற்றும் பாசஞ்சர் ரெயிலில் பயணிப்போர் செல்போனில் “utsஷீஸீனீஷீதீவீறீமீ” ஆப் வாயிலாக டிக்கெட் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

    இதன்வாயிலாக 3 சதவீதம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து பயன்பெற்று வருகின்றனர்.

    இதற்கான பணத்தை அவர்கள் ஆர் வாலேட், கிரெடிட்-டெபிட் கார்டுகள் வாயிலாகவோ, அல்லது பயணசீட்டு அலுவலகத்திலோ செலுத்தி வருகின்றனர். இதற்காக மத்தியஅரசு கூடுதல் சேவை கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை.

    இந்தநிலையில் ‘ஆர் வாலெட்’ மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ஆர் வாலெட்டில் பணம் செலுத்தும்போது, பயனாளிகளின் கணக்கில் 5 சதவீதம் போனஸ் தொகை வரவு வைக்கப்படும்.

    உதாரணமாக பயணி ஒருவர் ஆர் வாலெட்டில் 1000 ரூபாய் பணம் செலுத்தினால், அவரின் கணக்கில் ரூ.1050 வரவு வைக்கப்படும்.

    செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. #train

    ×