search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் டிக்கெட் பதிவு செய்ய புதிய வசதிகள் அறிமுகம்
    X

    ரெயில் டிக்கெட் பதிவு செய்ய புதிய வசதிகள் அறிமுகம்

    • ரெயில் டிக்கெட் பதிவு செய்ய புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    மதுரை

    ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் எடுக்க, கடைசி நேரத்தில் வரும் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக டிக்கெட் எடுக்கலாம். மேலும் சீசன்- பிளாட்பாரம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். சீசன் டிக்கெட்டுகளை எளிதாக புதுப்பிக்கவும் இயலும்.

    அதாவது ரெயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் முதல் 20 கி.மீ. தொலைவு வரை வீட்டில் இருந்தே பயணச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் போனில் அன்ரிசர்வ் டிக்கெட் எடுக்கும் முறையில் காகிதம் இல்லாத- காகிதத்துடன் கூடிய பயண சீட்டுகள் உள்ளன. அதன்படி சுற்றுச்சூழலுக்கு

    காகிதம் இல்லாத பயணச் சீட்டு எடுக்க முடியும். மொபைல் போன் யூடிஎஸ் செயலியில் "காண்க டிக்கெட்" (SHOW TICKET option) பகுதியில் உள்ள பயணச்சீட்டை எடுக்கலாம். அதனை டிக்கெட் பரிசோதரிடம் காண்பித்துக் கொள்ளலாம். இது காகிதம் இல்லாத முறை ஆகும்.

    அடுத்தபடியாக காகிதத்துடன் கூடிய முறை. இதன்படி பயணச்சீட்டு பதிவு செய்யும்போது வந்த அல்லது குறுஞ்செய்தியில் வந்த அல்லது பதிவு வரலாற்றில் உள்ள பதிவு அடையாள எண் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி டிக்கெட் பதிவு ரெயில் நிலையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு பதிவு எந்திரத்தில் பயணச்சீட்டு அச்சிட்டு கொள்ளலாம்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிறு சிறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருப்பது போல க்யூஆர் கோட், பயணச்சீட்டு அலுவலகம் அருகே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை ஸ்கேன் செய்தவுடன் போக வேண்டிய ரெயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்து மின்னணு வசதி வாயிலாக பணம் செலுத்தி டிக்கெட்டை எளிதாக பதிவு செய்யலாம்.

    காகிதம் இல்லாத முறையில் டிக்கெட் எடுக்கும் போது மொபைல் போனில் பதிவு செய்த பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும். இல்லையெனில் உரிய அபராதம் விதிக்கப்படும். தென்னக ரெயில்வேயில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை கடந்த 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 2.51 கோடி பயணிகள், கூட்ட நெரிசல் இன்றி டிக்கெட் எடுத்து பயணம் செய்து உள்ளனர்.

    தென்னக ரெயில்வேயில் மொபைல் போன் பதிவு மூலம் பயண சீட்டு வருமானமாக ரூ.24.82 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

    Next Story
    ×