என் மலர்
நீங்கள் தேடியது "passengers"
- சராசரியாக நாளொன்றுக்கு 34.70 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
- மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டுகள் மூலம் 1,38,54,947 பேர் பயணித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 10.40 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதில், சராசரியாக நாளொன்றுக்கு 34.70 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பண பரிவர்த்தனை மூலம் 3,57,52,241 பேர் பயணம் செய்துள்ளனர்,
மகளிர் விடியல் பயணம் மூலம் 3,97,16,550 பேர் பயணம், டெபிட்கிரெடிட் வாயிலாக 3,996 பேர், UPI வாயிலாக 21,31,351 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சிங்கார சென்னை பயண அட்டை மூலம் 6,71,431 பேர், சென்னை ஒன் மொபைல் செயலி மூலம் 37,993 பேர்,
மாணவர்கள் கட்டாமில்லா பேருந்து பயண அட்டை மூலம் 1,19,28,220 , மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டுகள் மூலம் 1,38,54,947 பேர் பயணித்துள்ளனர்.
- அதிகபட்சமாக 14.08.2025 அன்று 4,09,590 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
- மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.
2025 ஆகஸ்டு மாதத்தில் 99.09 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும், மே மாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும், ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 14.08.2025 அன்று 4,09,590 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 48,71,627 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 2,24,246 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48,13,759 பயணிகள் (Single journey Paper QR /Token 21,74,413; Static QR 3,10,521; Whatsapp - 6,12,757; Paytm 4,28,846; ONDC – 7,58,871; PhonePe – 3,45,562; CMRL Mobile App 1,82,789) பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ரெயில் அத்திப்பட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது மாடு ஒன்று சிக்கியதால் ரெயில் நிறுத்தம்.
- ரெயிலில் சிக்கிய மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயிலில் மாடு சிக்கியதால் சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் அத்திப்பட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது மாடு ஒன்று சிக்கியதால் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது.
ரெயிலில் சிக்கிய மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் அவதிப்பட்டுள்ளனர்.
- கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
- சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.
கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதற்கிடையே, மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது. இதனால் ரெயில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரெயிலில் சிக்கி இருந்தவர்களை நீள ஏணிகளின் மூலம் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
- நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர்.
- கடந்த 4 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
சுபமுகூர்த்தம், விசேஷ நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர்.
நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் நேற்று இரவும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 2 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கடந்த 4 நாட்களில் இயக்கப்பட்ட 11 ஆயிரத்து 26 அரசு பஸ்களில் மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேர் பயணம் செய்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, கடந்த 4 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.
தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும். பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்களை இயக்கிட வழி வகை செய்யப்படும் என்றனர்.
- கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2.16 கோடி பயணிகள் பிடிபட்டுள்ளனர்.
- அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரெயில்வே ரூ.562 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் இன்றி பிடிபட்ட பயணிகள் எண்ணிக்கை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மக்களவையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
கடந்த 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த சுமார் 2.16 கோடி பயணிகளை இந்திய ரெயில்வே கண்டறிந்தது. அந்தப் பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.562.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கேமராக்கள், ஏ.ஐ. அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம் டிக்கெட் இல்லாத பயணிகளைக் கண்டறியும் விகிதம் உயர்ந்துள்ளது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அபராத வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் எடுக்காத பயணிகள் பதிவாகியுள்ளனர். டிக்கெட் இல்லாத பயணம் ரெயில்வேக்கு ஏராளமான நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.
உள்ளூர் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அல்லது ரெயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, மண்டல ரயில்வேக்களால் அவ்வப்போது சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
டிக்கெட் சரிபார்ப்பு செயல்பாடு மற்றும் சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்களை நடத்துவது இந்திய ரெயில்வேயில் தொடர்ச்சியான பயிற்சியாகும். இந்த நடவடிக்கைகள் முறைகேடுகளைக் குறைக்கவும், ரெயில்வே வருவாயை மேம்படுத்தவும் உதவுகின்றன என தெரிவித்தார்.
- தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது.
- பாதுகாப்பு கருதி பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது.
சிங்கப்பூர்:
தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அந்த விமானம் பயன்படுத்தாத முடியாத அளவுக்கு சேதமடைந்தது. இதனையடுத்து விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தைவானின் ஈவா ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த உத்தரவை அமல்படுத்தியது.
அந்தவரிசையில் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. அதன்படி 100 வாட் திறன் வரை கொண்ட பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்லலாம். ஆனால் தங்களுடன் கொண்டு செல்லும் கைப்பையில் அதனை கொண்டு செல்லக்கூடாது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- நவம்பர் 5,12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படுகிறது.
- விரைவு வண்டி பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
பாபநாசம்:
மயிலாடுதுறை, பெங்களூர், மைசூர் இடையே மீண்டும் நேற்று முதல் ஒரு வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (ஒரு மாதத்திற்கு மட்டும்) இயக்குவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
வண்டி எண்: 06251: மைசூர் - மயிலாடுதுறை ரெயில் நவம்பர் 4,11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெங்களூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படுகிறது.
வண்டி எண்:06252: மயிலாடுதுறை - மைசூர் இன்று (29-ந்தேதி), நவம்பர் 5,12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும் இயக்கப்படுகிறது.
விரைவு வண்டி பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
பெங்களூரிலிருந்து பாபநாசத்திற்கு வரும் நேரம் மதியம் 2.00 மணி மற்றும் பாபநாசத்திலிருந்து பெங்களூர், மைசூர் செல்ல புறப்படும் நேரம் இரவு 7.30 மணி ஆகும்.
ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். எனவே, பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து பயன்பெற வேண்டுகிறோம்.
இத்தகவலை திருச்சிராப்பள்ளி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்தார்.
- பூதலூரில் இருந்து தஞ்சைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
- பாசஞ்சர் ரெயில்களில் கட்டண குறைப்பு செய்து தர வேண்டும்.
பூதலூர்:
தஞ்சை- திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் முன்ப திவு இல்லாத ரெயில்களில் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்தது போல் குறைந்த கட்டணம் வசூலிக்க ப்பட வேண்டும் என்று ரயில் பயணிகளி டமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
தஞ்சை - திருச்சி வழித்தடத்தில் ஆலக்குடி, பூதலூர், அய்யனாபுரம், சோழகம்பட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன.
இவை அனைத்தும் கிராமப்புறங்களாகும். கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
இயக்கப்பட்டு வரும் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் விரைவு ரெயில்கள் என்று பெயர் மாற்றப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கொரானா காலத்திற்கு முன்பு விரைவு ரயில் பூதலூர் இருந்து தஞ்சைக்கு ரூ.30 ஆக இருந்தது.
சாதாரண பாசஞ்சர் ரயில்களில் பூதலூரில் இருந்து தஞ்சைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் அவதியநடைந்து உள்ளனர்.
எனவே கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை போல் பாசஞ்சர் ரெயில்களில் கட்டண குறைப்பு செய்து தர வேண்டும் என்று ரயில் பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் ரயில்வே ஆணையத்திற்கு குரல் எழுப்ப வேண்டும் என்று திருக்காட்டுப்பள்ளி சமூக ஆர்வலர் கண்ணதாசன் கோரியுள்ளார்.
- நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருத்துறைப்பூண்டி:
திசையன்விளை அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த இரு பஸ்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரம் வழியாக திருத்துறைப்பூண்டியை கடந்து வேளாங்கண்ணி செல்வது வழக்கம்.
திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய கோவிலுக்கு செல்ல இந்த இரு பஸ்களை தான் நம்பி உள்ளனர்.
அப்படி இருக்கும் வகையில், இந்த பஸ்கள் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்திற்குள் வராமல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.
இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.
தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இனி இந்த இரு பஸ்களும் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்துக்குள் வரும் என உறுதி அளித்தததன் பேரில் பொதுமக்கள் பஸ்வை விடுவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்கள் சரியான முறையை கடைபிடிக்க வேண்டும்.
- பயணிகள் புறக்கணிப்பது ஏன் என்பது தெரியவில்லை.
குனியமுத்தூர்,
கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனையாமல் இருப்பதற்காக பிரமாண்டமான நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழல் கூடையை பயன்படுத்துவது இல்லை. .
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
எத்தனையோ சாலைகளில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் நின்று , பஸ்சில் ஏறும் நிலை இருந்து வருகிறது. ஆனால் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் மக்கள் நிழற்குடை இருந்தும் அதனை பயன்படுத்துவது இல்லை. பயணிகள் புறக்கணிப்பது ஏன் என்பது தெரியவில்லை. பொதுமக்கள் தான் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
நிழல் குடையில் நிற்காமல் தள்ளி நிற்கும் போது, பஸ் ஓட்டி வரும் டிரைவருக்கு குழப்பம் ஏற்படும். எனவே பொதுமக்கள் விதி மீறல் இல்லாமல் சரியான முறையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொருவரும் செயல்படும் போது எந்த குழப்பமும் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
பல்லடம் :
பல்லடம் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. விசைத்தறி, மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக, மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இணையான கட்டமைப்பு வசதிகள்,அடிப்படை தேவைகள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை,பொள்ளாச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து வருவதால் இங்கு அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்டவைகள் தினமும் நடைபெறுவதால்,பல்லடம் பஸ் நிலையம் என்றாலே வெளியூர் பயணிகள் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் செல்போன் திருட்டு, பணம் திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக பஸ் நிலையத்தில் பொது மக்கள் பஸ்களில் ஏறும்போதும், இறங்கும்போதும், கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி, மர்ம நபர்கள் சிலர் மொபைல் போன்களை திருடி செல்கின்றனர்.
கடந்த இரு வாரங்களில் தினமும் ஒரு மொபைல் போன் திருட்டு போகிறது. அவசர,அவசரமாக பஸ்சில் ஏறுபவர்களிடம் மொபைல் போன்கள் திருடப்படுகிறது. சிலர் மட்டுமே போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கின்றனர். நிறைய பேர் வீண் அலைச்சல் என்று போலீசில் புகார் செய்வதில்லை. இதனால் திருடர்களுக்கு மிகவும் சௌகரியமாக போய்விட்டது. இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.






