என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai bus"

    • சராசரியாக நாளொன்றுக்கு 34.70 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
    • மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டுகள் மூலம் 1,38,54,947 பேர் பயணித்துள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 10.40 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    இதில், சராசரியாக நாளொன்றுக்கு 34.70 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    பண பரிவர்த்தனை மூலம் 3,57,52,241 பேர் பயணம் செய்துள்ளனர்,

    மகளிர் விடியல் பயணம் மூலம் 3,97,16,550 பேர் பயணம், டெபிட்கிரெடிட் வாயிலாக 3,996 பேர், UPI வாயிலாக 21,31,351 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சிங்கார சென்னை பயண அட்டை மூலம் 6,71,431 பேர், சென்னை ஒன் மொபைல் செயலி மூலம் 37,993 பேர்,

    மாணவர்கள் கட்டாமில்லா பேருந்து பயண அட்டை மூலம் 1,19,28,220 , மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டுகள் மூலம் 1,38,54,947 பேர் பயணித்துள்ளனர்.

    • சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
    • பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,347 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் 106 புதிய வழித்தடங்களை கண்டறிந்து அதில் 409 மாநகர பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 74 வழித்தடங்களில் 123 பஸ்களுடன் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் தினமும் 32 லட்சம் பயணிகள் மாநகர பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 4,400 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.

    அதன் பிறகு சென்னை நகரம் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளது. சென்னையில் தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. பல சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருக்கும் சில பஸ் நிறுத்தங்களில் சாலைகள் குறுகலாக மாறி விட்டன. இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சென்னையில் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் ஒருபுறம் அல்லது இருபுறமும் தோண்டப்பட்டு பணிகள் நடப்பதால் அந்த இடங்களிலும் சாலைகள் சுருங்கி விட்டன.

    சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதும், பஸ்சுக்காக காத்திருப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற இடங்களில் இருக்கும் பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்த இடமில்லாமல் டிரைவர்கள் சற்று தூரம் தள்ளி சென்று நிறுத்துகிறார்கள். இதனால் பயணிகள் பஸ்சை பிடிக்க ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. மேலும் பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதுவும் பயணிகளுக்கு பஸ் ஏறுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    இதையடுத்து சென்னையில் நெரிசலான பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களை 50 முதல் 100 மீட்டர் தூரம் வரை மாற்றுவதற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக பயணிகள் மத்தியில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் பஸ் நிறுத்தத்தை மாற்ற வேண்டும் என்பதை அறிய தனியார் நிறுவனம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் பயணிகள் கூறும் கருத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பல இடங்களிலும் பஸ் நிறுத்தங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி 29 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி அரசு பஸ்பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அரசு பஸ் திடீரென்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் பயங்கர சத்தத்துடன் மோதி ஏறி நின்றது.

    அந்த சமயம் அரசு பஸ்சுக்கு பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினார்கள். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அரசு மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்து காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


    இந்த விபத்தில் 29பேர்கள் காயம் அடைந்து உள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்தில் அரசு பஸ் முன்புறம் சிதைந்தது. ரெட்டிச்சாவடி போலீசார் உடனடியாக ஜே.சி.பி. மற்றும் கிரேன் போன்ற வாகனங்கள் மூலம் இடிப்பாட்டில் சிக்கிக் கொண்டிருந்த அரசு மற்றும் ஆம்னி பஸ்சை மீட்டு சாலையின் ஓரமாக நிறுத்தினார்கள். இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதற்கட்டமாக டிசம்பரில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • 2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரெயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில்களில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் பயன்படுத்துவற்கான செயலியை உருவாக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    செயலியை உருவாக்க Moving Tech Innovation Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.

    முதற்கட்டமாக டிசம்பரில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரெயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
    • வாராந்திர ஓய்வு நாட்களை மாற்றி அமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்கி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 320 கூடுதல் இணைப்பு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

    அத்தியாவசிய தேவைக்கு கிளை மேலாளர் மற்றும் மண்டல மேலாளரிடம் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வாராந்திர ஓய்வு நாட்களை மாற்றி அமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்கி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை முதல் ஜனவரி 13ம் தேதி வரை கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

    • மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்து- ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
    • பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள்.

    கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களின்போது, சொந்த ஊர்களுக்கு சென்று அவர்கள் விழாவை சிறப்பித்து வருவது வழக்கம். மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்து- ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட சென்னைவாசிகள் விரும்பி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால் பேருந்து - ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் (10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை) 21,904 பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் பொங்கல் சிறப்பு பஸ்களில் கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (12.01.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில், 2,092 பஸ்களும், 1,858 சிறப்பு பஸ்களும் ஆக 3,950 பஸ்களில் 2,17,250 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர்" என்று அதில் பதிவிட்டுள்ளது.

    சேலத்தில் இருந்து வந்த சென்னை பஸ்சில் வியாபாரியிடம் ரூ.25 லட்சம் வைர நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    திருச்சியைச் சேர்ந்தவர் தாராசந்த். தங்கம் மற்றும் வைர நகை வியாபாரி. இவர் ஆர்டரின் பேரில் சென்னையில் உள்ள சிறிய நகை கடைகளுக்கு நகைகள் சப்ளை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி சென்னையில் உள்ள கடைகளுக்கு நகைகள் கொண்டு செல்வதற்காக சேலத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கோயம்பேடுக்கு வந்தார்.

    மதியம் 2மணி அளவில் தாராசந்த் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய போது தான் கொண்டு வந்த பையில் வைர நகைகள் அடங்கிய பெட்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதில் 23 வைர வளையல்கள் இருந்தன. பஸ்சில் உடன் பயணம் செய்த மர்ம நபர்கள் வைர நகைகள் இருந்த பெட்டியை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.25லட்சம் ஆகும். தாராசந்த் நகையுடன் பஸ்சில் ஏறுவதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் அவருடன் வந்துள்ளனர். பின்னர் அவர் அசந்த நேரத்தில் நகையை கொள்ளையடித்து தப்பி சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தாராசந்த் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து செல்லும் வெளியூர் பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்து வருவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். #Diwali

    சென்னை:

    அரசு பஸ்களில் பல்வேறு வகையான கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. சாதாரண பஸ், எக்ஸ்பிரஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என வகைப்படுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

    பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூருக்கு எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம் ரூ.31 ஆகும். ஆனால் ரூ.35 வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணியிடமும் ரூ.4 கூடுதலாக பெறப்படுகிறது. சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி முழு தொகையாக வசூலிக்கப்படுகிறது.

    மேலும் சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என்ற பெயரில் அதிக கட்டணம் சாதாரண பேருந்துகளுக்கு வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் இருக்க வேண்டிய எந்த வசதியும் இல்லாமல் சாதாரண இருக்கைகள் உள்ள பஸ்களுக்கு அதிக கட்டணம் பெறப்படுகிறது. மேலும் பெரும்பாலான பஸ் நிறுத்தங்களிலும் இந்த பஸ் பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். அல்ட்ரா டீலக்ஸ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் இருந்து திருண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, ஆரணி, வேலூர், வந்தவாசி, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதற்கு பயணிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    கட்டண விரங்களில் அடங்கிய பட்டியலை பொது மக்களிடம் வினியோகித்து அரசு பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

    இதுகுறித்து விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று மறுத்துள்ளார். #Diwali

    ×