என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் திருநாள்- சென்னையில் 320 இணைப்பு பேருந்துகள் இயக்க முடிவு
- ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
- வாராந்திர ஓய்வு நாட்களை மாற்றி அமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்கி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 320 கூடுதல் இணைப்பு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைக்கு கிளை மேலாளர் மற்றும் மண்டல மேலாளரிடம் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாராந்திர ஓய்வு நாட்களை மாற்றி அமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்கி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் ஜனவரி 13ம் தேதி வரை கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
Next Story






