search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvarur accient"

    திருவாரூர் அருகே இன்று காலை பள்ளி பஸ் வாய்க்காலில் இறங்கி பக்கவாட்டில் சாய்ந்த விபத்தில் 20 மாணவ- மாணவிகள் காயம் அடைந்தனர்.

    திருவாரூர், ஜூலை.9-

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் நன்னிலம், பூந்தோட்டம், பேரளம், குடவாசல் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி வாகனங்கள் மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

    அதன்படி இன்று காலை வெள்ள மண்டபம் என்ற இடத்தில் இருந்து 30 மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அச்சுதமங் களம் என்ற இடத்தில் உள்ள சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுபப்பாட்டை இழந்து பஸ் ஓடியது. இதில் ரோட்டோரத்தில் உள்ள ஆலங்குடி வாய்க்காலில் பஸ் இறங்கி பக்கவாட்டில் சாய்ந்தது.

    இந்த விபத்தில் பள்ளி பஸ்சில் இருந்த 20 மாணவ- மாணவிகள் மற்றும் டிரைவர் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    பள்ளி பஸ் டிரைவர் மகேந்திரன், பள்ளி மாணவ- மாணவிகள் நிஷா(7), கார்த்திகா (9), ராம்குமார் (8), வைஷ் ணவி(8), உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் நன்னிலம் அரசு மருத்துவ மனையில் சிகிச் சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

    மேலும் நிஷா, வைஷ்ணவி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக் காக திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

    இந்த விபத்து பற்றி நன்னிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். * * * பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் பள்ளி வேன்.

    ×