என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian railways"

    • ரெயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை அதிரடியாக குறைத்து இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
    • 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ரெயில் பயணங்களின் போது மக்களின் வசதிக்காக ரெயில் நிலையங்களிலும் ரெயில்களிலும் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், ரெயில் நீர் பாட்டில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15-க்கும் அரை லிட்டர் (500 ml) ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை ரூ.1 குறைத்து இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ரெயில் நிலையங்களில் விற்கும் ரெயில் நீர் பாட்டில் மற்றும் மற்ற தண்ணீர் பாட்டில்கள் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் (500 ml) பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.

    மேலும் தண்ணீர் பாட்டில் விலையும் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.

    இது வரும் 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • தனது 24 வயதில் இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சுரேகா சேர்ந்தார்.
    • இன்று, இந்திய ரயில்வேயில் 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60 வயது)

    எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்து, 1989 ஆம் ஆண்டு தனது 24 வயதில் இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சுரேகா சேர்ந்தார்.

    இதன் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ரெயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை சுரேகா யாதவ் பெற்றார்.

    இதன்பின் 1996 ஆம் ஆண்டு சரக்கு ரெயில் ஓட்டுநரான சுரேகா, 2000 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரெயில்களை ஓட்டத் தொடங்கினார்.

    36 ஆண்டுகள் ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

    ரெயில்வேயில் ஓட்டுநர்களாக மாறிய அனைத்து பெண்களுக்கும் சுரேகா யாதவின் வாழ்க்கை ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளது. இன்று, இந்திய ரயில்வேயில் 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.

    பணியின் இறுதியாக பயணமாக மராட்டியத்தின் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியின் ஹச்ரத் நிஜாமுதின் ரெயில் நிலையம் இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை சுரேகா யாதவ் இயக்கினார்.

    அப்போது அவருக்கு ரெயில்வே சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. 

    • ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட உள்ளது.
    • இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

    இந்திய ரெயில்வே, ரெயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்பட உள்ளது.

    புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோமீட்டருக்கு குறைவான தொலைவு பயணங்களுக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறுகிய தூர பயணிகள் மற்றும் புறநகர் ரெயில் பயணிகள் இந்த உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 

    • நடப்பாண்டு சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.92,345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
    • அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரிப்பு.

    மத்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல், அக்டோபர் மாதம் வரையிலான 7 மாதக் காலகட்டத்தில், சரக்கு ரெயில்கள் மூலம் மொத்தம் 855.63 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 786.2 மெட்ரிக் டன்னாக இது இருந்தது. இதனால், சரக்குகள் கையாளுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9% அதிகரித்துள்ளது.

    இதேபோல் நடப்பாண்டு அக்டோபர் மாதம் சரக்கு ரெயில்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதே அக்டோபர மாதம் வரை வருவாய் ரூ.78,921 கோடியாக இருந்தது. இதனால் சரக்கு ரெயில் வருவாய் 17% அதிகரித்துள்ளது.

    அதே போல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 117.34 மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகள் கையாளுதல் இந்த அக்டோபர் மாதம் மட்டும் 118.94 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லெவல் கிராசிங் பகுதிகளில் எல்இடி பல்புகள் பொருத்தப்படுகின்றன.
    • ரெயில்களை 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு.

    வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளைகள் மற்றும் அதிகாலை வேளைகளில் காணப்படும் மூடுபனியின்போது ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரெயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பனி படர்வை நீக்கும் கருவிகளை ரெயில் இஞ்சின்களில் பொருத்துவது, அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, தண்டவாளங்களுக்கு அருகில் வெள்ளை நிற கோடுகளை போடுவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

    லெவல் கிராசிங் பகுதிகளில் விசில் எழுப்பக் கூடிய கருவிகள் மற்றும் எல்இடி பல்புகளை பொருத்துதல், சிக்மா வடிவிலான சிக்னல் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ரெயில்களை 60 கிலோ மீட்டரிலிருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.
    • தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்தார்.

    ஐதராபாத்:

    செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

    பின்னர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது, 'பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்திய ரெயில்வேத்துறை உலகத்தரம் வாய்ந்த நிலையங்கள், ரெயில்கள் மற்றும் புதிய பாதைகள், இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் என புதிய திட்டங்களை முடிப்பதில் விரைவான முன்னேற்றத்துடன் அனைத்து வளர்ச்சியையும் கண்டு வருகிறது' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ரெயில்வேத்துறையை பிரதமர் மோடி மாற்றி விட்டதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

    • பயணிகள் வருவாய் 61 சதவீதம் அதிகரித்து ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது.
    • ரெயில்வேயின் மூலதன முதலீடு ரூ.3,200 கோடியாக உயர்ந்துள்ளது.

    இந்திய ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    2022-23 நிதியாண்டில் இந்திய ரெயில்வேக்கு ரூ2.40 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.49,000 கோடி அதிகமாகும். கடந்த 2022-23-ம் ஆண்டில், சரக்கு வருவாய் ரூ. 1.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும்.

    பயணிகள் வருவாய் 61 சதவீதம் அதிகரித்து ரூ.63,300 கோடியை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வூதியச் செலவினங்களை இந்திய ரெயில்வேயால் சமாளிக்க முடிகிறது. வருவாய் மற்றும் செலவின மேலாண்மையை சரி செய்ததன் மூலம் ரெயில்வேயின் மூலதன முதலீடு ரூ.3,200 கோடியாக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
    • உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.

    எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரெயில்களின் முழு ரேக்குகளும் எல்.எச்.பி. பெட்டிகளாக இருக்கும்.
    • ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள், விபத்துக்குள்ளானால் உயிரிழப்பு வாய்ப்புகளை முழுமையாக குறைக்கிறது.

    புதுடெல்லி:

    பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அசாம், அரியானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலர் பிழைப்பு தேடி பெரு நகரங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

    இவர்கள் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரெயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது. தற்போது உள்ள ரெயில் கட்டணம் ஏழை, நடுத்தர மக்களுக்கு சற்று அதிகமானதாக கருதப்படுவதால் ரெயில் நிர்வாகம் இதுபற்றி ஆய்வு செய்தது.

    இதை தொடர்ந்து படுக்கை வசதிகளுடன் கூடிய பொதுப்பெட்டிகளுடன் புதிய ரெயில்கள் குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு பெரு நகரங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் உருவாக்கப்படும் இந்த ரெயில்களின் கட்டணமும் சிக்கனமாக இருக்கும். இந்த ரெயில்களின் முழு ரேக்குகளும் எல்.எச்.பி. பெட்டிகளாக இருக்கும்.

    ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள், விபத்துக்குள்ளானால் உயிரிழப்பு வாய்ப்புகளை முழுமையாக குறைக்கிறது. இந்த சிறப்பு ரெயில்கள் ஓரிரு ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த ரெயில்களில் குறைந்தது 25 சிறப்பு பொது படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும் என்று இந்திய ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் பயண பாதையை இந்தியன் ரெயில்வே உள்ளடக்கியது
    • இவர் பங்களாதேஷ் ரெயில்வேயின் ஆலோசகராக பணி புரிந்தவர்

    இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு ரெயில்வே கட்டமைப்பகளை நிர்வகிப்பது இந்திய ரெயில்வே. இது இந்திய அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது.

    சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் பயண பாதையை உள்ளடக்கிய இந்திய ரெயில்வே, உலகிலேயே 4-வது பெரிய ரெயில்வே கட்டமைப்பை நிர்வகிக்கும் சிறப்பு பெற்றுள்ளது. மேலும் இது, கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி வருவாயை ஆண்டொன்றிற்கு ஈட்டி வருகிறது.

    இதன் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியுமாக செயல்படுபவரே இதன் ஒட்டு மொத்த நிர்வாகத்திற்கும் பொறுப்பானவர் என்பதால் இப்பதவி மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பெருமைக்குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. தற்போது அனில் குமார் லஹோட்டி இப்பதவியை வகித்து வருகிறார்.

    விரைவில் ஓய்வு பெறும் இவருக்கு அடுத்து இந்த பதவிக்கான அதிகாரி நியமனம் குறித்து தேர்வு நடைபெற்று வந்தது. இந்திய ரெயில்வேயின் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த இந்த பதவிக்கு ஜெய வர்ம சின்ஹா என்பவரை இந்திய அரசாங்கம் தேர்வு செய்து நியமித்துள்ளது. இந்த உயர்ந்த பதவியை ஏற்கும் முதல் பெண்மணி ஜெய வர்ம சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

    "இந்திய ரெயில்வேயின் செயலாக்கம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஜெய வர்ம சின்ஹா, இந்திய ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை அரசாங்கத்தின் நியமனங்களுக்கான கேபினெட் கமிட்டியும் உறுதி செய்துள்ளது" என இது குறித்து அரசு அறிவித்திருக்கிறது.

    செப்டம்பர் 1 அல்லது அதற்கு பிறகு பொறுப்பேற்க இருக்கும் ஜெய வர்ம சின்ஹா, 2024 ஆகஸ்ட் 31 வரை இந்த பதவியில் தொடர்வார். அக்டோபர் 1 அன்று இப்போது அவர் வகிக்கும் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெய வர்மா, மீண்டும் புதிதாக அதே நாளில் தலைமை செயல் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்.

    1988-ல் இந்திய ரெயில்வே டிராஃபிக் சேவையில் சேர்ந்த ஜெய வர்மா அலகாபாத் பல்கலைகழகத்தில் பயின்றவர். வடக்கு ரெயில்வே, தென்கிழக்கு ரெயில்வே மற்றும் கிழக்கு ரெயில்வே ஆகியவற்றில் பணிபுரிந்த அனுபவம் உள்ள இவர் இந்தியாவின் அண்டை நாடான வங்களாதேசத்தின் ரெயில்வே சேவைக்கு ஆலோசகராகவும் பணி புரிந்தார்.

    இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து வங்களாதேச தலைநகர் தாகாவிற்கான மைத்ரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இவரது வங்களாதேச பணியின் போது தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செப்டம்பர் 9 முதல் சென்னை-திருநெல்வேலி மார்க்கத்தில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது
    • வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி 50 நிமிடங்களாக உள்ளது

    இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்திய ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை. பகல் நேர ரெயில் சேவையான இதன் மூலம் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் பயணிகள் நாட்டின் ஒரு நகரிலிருந்து மற்றொரு முக்கிய நகரத்தை அடைய முடியும். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த சேவை தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை-மைசூரு மற்றும் சென்னை-கோயம்புத்தூர் ஆகிய மார்க்கங்களுக்கிடையே முன்னரே இந்த சேவை அறிமுகமான நிலையில் செப்டம்பர் 9 முதல் சென்னை-திருநெல்வேலி மார்க்கத்தில் 'வந்தே பாரத்' ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆனால், இதன் காரணமாக ஏற்கெனவே இந்த மார்க்கத்தில் இயங்கி வந்த பிற ரெயில்களின் பயண நேரம் அதிகமாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் ரெயில்களின் புதிய பயண நேரப்படி மதுரை-சென்னை மார்க்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் அதிகமாகவும், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் பயண நேரம் 10லிருந்து 15 நிமிடங்கள் வரையும் அதிகரிக்கப்படுகிறது.

    'வந்தே பாரத்' ரெயிலின் பயண நேரம் (சென்னை-மதுரை) 5 மணி 50 நிமிடங்களாகவும், பிற அதி விரைவு (Super Fast) ரெயில்களின் பயண நேரம் 7 மணி 45 நிமிடங்கள் எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    பத்து வருடங்களுக்கு முன்பு, சதாப்தி ரெயில்களில் பயணிப்பதை ஊக்குவிக்க அதே தடத்தில் பிற ரெயில்களின் பயண நேரங்களை அதிகரிக்க செய்த முயற்சியை போலவே பயணிகளால் இது பார்க்கப்படுகிறது.

    பெரும் பொருட்செலவில் ரெயில் பாதைகளை மேம்படுத்தி விட்டு அதன் பயன் மற்ற அதி விரைவு ரெயில் பயண கட்டணங்களை விட 15 சதவீதம் அதிகமுள்ள ரெயில்களுக்கு மட்டுமே பலனளிக்கும் வகையில் மாற்றியமைத்திருப்பது ஒரு வகையில் மக்களின் பணத்தை வீணடிப்பதாகும் என ரெயில் பயணிகள் விமர்சிக்கின்றனர்.

    • தற்போது இயங்கும் ரெயில்களில் அமரும் வசதி மட்டுமே உள்ளது
    • தமிழக நகரங்களுக்கு இடையே 2 ரெயில்கள் இயங்குகின்றன

    இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பல்வேறு நகரங்களை இணைக்கவும், மாநிலங்களிக்கு உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும் இந்தியன் ரெயில்வேயால் துவங்கப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை.

    தற்போது பகல் நேர ரெயில் சேவையாக இருப்பதால், அமரும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    எந்த அயல்நாட்டு தொழில்நுட்பத்தையும் நாடாமல், இந்த ரெயில்களின் கட்டமைப்பு 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஐ.சி.எஃப். நிறுவனத்தாலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்டது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

    தற்போது வரை இந்தியா முழுவதும் 34 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை-சென்னை வழித்தடத்திலும், திருநெல்வேலி-சென்னை வழித்தடத்திலும் என 2 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், படுக்கை வசதியுடன் வரப்போகும் வந்தே பாரத் ரெயில்களின் 'மாதிரி' வடிவங்களின் படங்களை இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் பணியாளர்களுக்கு 34 படுக்கைகளும் பயணிகளுக்கு 823 படுக்கைகளும் என மொத்தம் 857 படுக்கைகள் இடம்பெறும். அதிர்வுகளை தாங்க கூடிய மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், போதிய அளவு வெளிச்சத்திற்கான மின் விளக்குகள், இரண்டு படுக்கைகளுக்கு இடையே போதிய இடைவெளி, மேலே உள்ள படுக்கைகளுக்கு சுலபமாக ஏறும் வகையில் படிக்கட்டு வசதி என பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வசதிகள் இதில் உள்ளது.

    உயர் கட்டண பிரிவு ரெயில் சேவையான ராஜ்தானி விரைவுவண்டியில் உள்ள வசதிகளை விட இது சிறப்பாக இருக்கும் வகையில், இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

    அடுத்த வருடம் பிப்ரவரி மாதவாக்கில் சோதனை ஓட்டத்திற்கு இது விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×