search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "retirement"

    • இது ஒரு நம்பமுடியாத பயணம், சவால்கள், வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தது.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு விலைமதிப்பற்றது.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மரூப், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான அவர் பாகிஸ்தான் அணிக்காக 136 ஒருநாள் போட்டி மற்றும் 140 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தைப் பதிவு செய்யத் தவறிய போதிலும், பாகிஸ்தானுக்காக இரண்டு வடிவங்களிலும் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 21 அரை சதங்களுடன் 3369 ரன்களும் டி20 போட்டிகளில் 12 அரை சதங்களுடன் 2893 எடுத்துள்ளார்.

    2006-ல் 15 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர், 2016-ல் டி20 மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கேப்டனாக 34 ஒருநாள் போட்டி (16 வெற்றி), 62 (27 வெற்றி) டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தி உள்ளார். பாகிஸ்தான் பெண்கள் கேப்டன்களில் சிறந்த வெற்றி சதவீதத்தை இவர் படைத்துள்ளார்.

    பல காயங்களுடன் போராடிய போதிலும், பிஸ்மா மரூப் எட்டு உலகக் கோப்பைகளில் இடம்பெற்றார். மேலும் 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற அணியில் ஒரு அங்கமாகவும் இருந்தார்.

    மரூப் தனது லெக்ஸ்பின் மூலம் 80 சர்வதேச விக்கெட்டுகளையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நான் மிகவும் விரும்பும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத பயணம், சவால்கள், வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எனது கிரிக்கெட் பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    "என்னை நம்பி, எனது திறமையை வெளிப்படுத்தும் தளத்தை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு விலைமதிப்பற்றது.

    • டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர்
    • கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "பேட்டிங்கிற்கு சாதகமான தர்மசாலா பிட்சில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர். குறிப்பாக, குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் கைப்பற்றி, இங்கிலாந்தை சுருட்டினர் என தெரிவித்தார்.

    பின்னர், ஓய்வு அறிவிப்பு குறித்து ரோகித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''எப்போது எனது ஆட்டம் போதுமானதல்ல என்று தோன்றுகிறதோ, அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருவதாக உணர்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த அவர், தற்போது 17ஆவது சீசனில் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட உள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ரோகித் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்தார்.
    • உங்களுடைய அபாரமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஸ்டூவர்ட் பிராட்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி விட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் டெஸ்ட் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் திடீரென அறிவித்தார்.

    அவரது ஓய்வு முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உங்களுடைய அபாரமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஸ்டூவர்ட் பிராட். மிகச்சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் ஒருவர். உண்மையான ஜாம்பவான். உங்கள் பயணமும், உறுதியும் மிகவும் ஊக்கமளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழில்நுட்ப ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
    • புதுவை அரசின் உயர்கல்வி துறை அதனை ஏற்க மறுப்பது ஆசிரியை சமூகத்தின் மன வலியை மேலும் அதிகரிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரி சங்க தலைவர் பேராசிரியர் செல்வராஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் 65 வயது அடைந்த உடன் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் பேராசிரியர்கள் 62 வயதில் மிகவும் மன வேதனையுடன் ஓய்வு பெறும் சூழ்நிலை உள்ளது.

    62 வயதிற்கு பின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் தங்கள் உரிமைகளை நீதிமன்றத்தில் மூலம் வாதாடி பெற்று வந்தாலும் புதுவை அரசின் உயர்கல்வி துறை அதனை ஏற்க மறுப்பது ஆசிரியை சமூகத்தின் மன வலியை மேலும் அதிகரிக்கிறது.

    இதுகுறித்து ஆசிரியர் சங்கம் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்து முறையிட்ட போது எங்கள் கோரிக்கை நியாயமானது என்று கூறுகிறார் என்றாலும் ஆனால் எந்த சக்தி இதற்கான அரசாணையை வெளியிடாமல் தடுக்கிறது என்று தெரியவில்லை.

    மாநில அரசின் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு இந்த ஓய்வு வயது 2016 முதல் அமல்படுத்தப் பட்டிருக்கும் போது மாநிலத்தின் மணி மகுடமாக விளங்கும் புதுவை தொழில் நுட்பக் கழக பேராசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார்.

    திருச்சூர் கேரள போலீஸ் அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஜெனி கடந்த 2015-ம் ஆண்டு முதல் இடுக்கி மோப்பநாய் படையில் பணியாற்றியது.

    கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் துப்புதுலங்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் முக்கிய பங்கு வகித்தது. தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.

    அதன்படி பணி ஓய்வு பெற்ற நாய் ஜெனிக்கு போலீசார் போல் மாலை அணிவித்து மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். இடுக்கி மோப்பநாய் படை பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் ஜெனி மோப்பநாய் சீருடையில் வந்தது. அதனை இடுக்கி மாவட்ட எஸ்.பி. குரியகோஸ் மாலையிட்டு வரவேற்றார். அதன்பிறகு போலீஸ் நடைமுறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    வழக்கமாக பணி ஓய்வு பெறும் மோப்ப நாய்கள் திருச்சூர் போலீஸ் அகாடமி ஓய்வு முகாமிற்கு அனுப்பப்படும் ஆனால் ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று எஸ்.பி. அவரிடம் ஜெனியை ஒப்படைத்தார். பல ஆண்டுகளாக பழகிய சாபுவுடன் ஜெனி உற்சாகமாக சென்றது.

    • அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
    • அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்கள் உள்ளன.

    இந்த போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 20,127 பஸ்கள் உள்ளன. இவற்றில் 18,723 பஸ்கள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 1404 பஸ்கள் இதற்கான மாற்று பஸ்கள் ஆகும். அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

    அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் களுக்கான காலி பணியிடங் கள் அதிகரித்து வருவதால் பஸ்களின் இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்து கழகங்களில் இந்த வார இறுதிக்குள் 600 முதல் 700 டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற உள்ளனர். இதனால் போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழக போக்குவரத்து கழகங்களில் இந்த வார இறுதியில் 600 முதல் 700 ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவதால் பஸ்களின் இயக்கங்கள் மேலும் பாதிக்கப்படும்.

    தமிழக போக்குவரத்து கழகங்களில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி நில வரப்படி 1,44,818 ஊழியர்கள் இருந்தனர். ஆனால் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நிலவரப்படி 1,16,259 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் 28,559 ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    போக்குவரத்து கழகங்களுக்கு டிரைவர்களை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஓய்வு பெற்ற டிரைவர்கள், கண்டக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓய்வு பெற்ற டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வருகிற 3-ந்தேதி தமிழகம் முழுவதும் தொழிலாளர்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மண்டல அளவில் வருகிற 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

    • எனவே தங்களுக்கு பணியில் சேர்ந்து 20 ஆண்டுக்குள் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
    • செவிலிய பதவி பெயர் மாற்றம் செவிலிய அதிகாரி என மாற்றம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கைவிளக்கு ஏந்திய காரிகை பிலாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி அவரது பிறந்த நாளான இன்று தஞ்சை அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 1- புவனேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் சித்ரா வரவேற்றார். இதில் அனைத்து செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி , எனது வாழ்வில் மிகவும் தூய்மையாகவும் எனது பணியை உண்மையாக செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்து கொண்டு கேக் வெட்டி செவிலியர்களுக்கு கொடுத்து செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

    பின்னர் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் வளர்மதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 30 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வு பெறாமல் செவிலியர்களாகவே பணி ஓய்வு பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    எனவே தங்களுக்கு பணியில் சேர்ந்து 20 ஆண்டுக்குள் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

    99 சதவீத பெண்களை கொண்ட செவிலியர் துறையில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் இயற்கையாகவே பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை கருத்தில் கொண்டு 55 வயதுக்கு மேல் இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான செவிலியர் துறைக்கான தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.

    செவிலிய பதவி பெயர் மாற்றம் செவிலிய அதிகாரி என மாற்றம் செய்ய வேண்டும்.

    பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி நடத்தி வரும் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் , எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சாந்தகுமாரி உள்ளிட்ட ஏராளமான செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்டத் தலைவர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

    • டபேதாரை கௌரவப்படுத்திய கலெக்டர்
    • புதுக்கோட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு டபேதாராக இருந்தவர் அன்பழகன். இவர் மாவட்ட கலெக்டர்கள் உமா மகேஸ்வரி மற்றும் தற்போது செயல்பட்டு வரும் கவிதா ராமு ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அன்பழகனை மாவட்ட கலெக்டர் தனது காரில், அவர் அமர்ந்து செல்லும் இடத்தில் அன்பழகனை அமர வைத்து அவர் வீடு உள்ள அடப்பன் வயல் ஒன்றாம் வீதியில் உடன் சென்று வீட்டில் இறக்கி விட்டு அதன் பின்னர் வீட்டில நடைப்பெற்ற விருந்தில் கலந்துக் கொண்டார். அப்போது அன்பழகனுக்கு பரிசுகள் வழங்கி அவரை கௌரவப்படுத்தினார். அன்பழகன் ஓய்வு பெற்றதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் தனது காரில் கொண்டு சென்று வீட்டில் விட்டதை புதுக்கோட்டை மக்கள் வெகுவாக பாராட்டினர். 

    • போராட்டத்துக்கு ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.
    • ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகள், வங்கிகள், துரித உணவகங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    பாரீஸ்:

    பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் வகையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து உள்ளன. நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த போராட்டத்துக்கு ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

    இதையடுத்து அவர்கள் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினார்கள்.

    இந்த போராட்டத்தின் போது வன்முறைகளும் வெடித்தன. பாரீசில் நடந்த பேரணியின் போது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு பலகைகள் மற்றும் குப்பை குவியல்களுக்கு தீ வைத்தனர். சாலையோரம் இருந்த பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் கறுப்பு உடைகள் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகள், வங்கிகள், துரித உணவகங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    இதில் அதன் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஆனது. இதையடுத்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள். போலீசாருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 123 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். இதனால் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். மேலும் தடியடியும் நடத்தினார்கள். இதனால் போராட்டக் காரர்கள் சிதறி ஓடினார்கள். இது தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டங்களும் நடந்தன. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிவேக ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    நிலைமையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். பிரான்சில் இதுவரை இல்லாத அளவு நடந்த இந்த போராட்டம் அந்நாட்டு அதிபருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • வருகிற 5-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதம்.

    திருவாரூர்:

    ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் கலந்து கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பழைய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு புதிய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் நியமன முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

    அகவிலைப்படி மத்திய அரசு வழங்கிய அதே தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.

    இவை அனைத்தும் தமிழக பட்ஜெட்டில் தமிழக முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற மார்ச் 5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • எந்தவித பணப்பயன் வழங்கப்படாமல் இருக்கிறது.

    திருச்சி:

    தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் நாகூர் கனி தலைமை தாங்கினார். சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சையது உமர் நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு நான் முதல்வன் மற்றும் கல்லூரி கனவு திட்டம் போன்ற பல நல்ல சமூக நீதி கொள்கைகள் மூலம் திராவிட மாடல் ஆட்சியை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினுக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மத்திய பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெறும் வயது 65 ஆக இருப்பது போல நமது மாநில பல்கலைக்கழகங்களிலும் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும். பெரும்பாலான தமிழக பல்கலைக்கழகங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு உரிய பணபலனோ அல்லது பணி ஓய்வுக்குரிய பணமோ அல்லது எந்தவித பணப்பயன் வழங்கப்படாமல் இருக்கிறது.

    எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து பண பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் சங்கத்தை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அடுத்து என்ன செய்வது என்பது குறித்து நான் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை. அதற்கான நேரம் வரும் போது முதல் நபராக ஓய்வு முடிவை அறிவிப்பேன் என மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யுவராஜ்சிங் அடித்த அரைசதம் (35 பந்துகளில் 53 ரன்கள்) ஆறுதல் அளித்ததே தவிர, அணியின் வெற்றிக்கு உதவவில்லை. போட்டிக்கு பிறகு யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பான்டுக்கு இடம் கிடைக்குமா? என்பது எனக்கு தெரியாது. இந்த போட்டியில் அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. கடந்த ஆண்டும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவர் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இளம் வயதிலேயே இரண்டு சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். அவர் வருங்காலத்தில் மிகச் சிறந்த வீரராக உருவெடுப்பார். அவரை கவனமாக வழிநடத்த வேண்டியது முக்கியமானதாகும். கடந்த 2 வருடங்களாக எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறேன். இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து நான் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை. அதற்கான நேரம் வரும் போது முதல் நபராக ஓய்வு முடிவை அறிவிப்பேன். கிரிக்கெட்டை இளம் வயது முதலே அனுபவித்து ஆடுவதால் நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். எனது ஓய்வு குறித்து குழப்பமான சூழ்நிலை ஏற்பட்ட போது தெண்டுல்கருடன் கலந்து ஆலோசித்தேன். அதில் எனக்கு நல்ல தெளிவு கிடைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×