என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Table Tennis"
- டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
- இந்திய ஜோடி வட கொரியாவிடம் 3-4 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது.
ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணி 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி சகோதரிகள், வடகொரிய வீராங்கனைகளுடன் மோதினர். இதில் 3-4 என்ற கணக்கில் தோற்றனர். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கம் பெற்றனர். டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.
இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- டேபிள் டென்னிசில் தமிழக வீராங்கனைகள் ஆர்.லத்திகா, ஆர்.உத்பிரக்ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.
- சென்னை பெரம்பூரில் உள்ள கே.ஆர்.எம். பள்ளியில் படித்து வரும் மாணவிகள் லத்திகா, உத்பிரக்ஷா இருவரும் மாநில பயிற்சியாளர் ராஜேஸ்குமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
சென்னை:
3-வது சர்வதேச பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் நடந்து வருகிறது. டேபிள் டென்னிஸ், சிலம்பம், கைப்பந்து, யோகா, கூடைப்பந்து, தடகளம், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.
இதில் டேபிள் டென்னிசில் தமிழக வீராங்கனைகள் ஆர்.லத்திகா, ஆர்.உத்பிரக்ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.
17 வயதுக்குட்பட்டோர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் லத்திகா 3-0 என்ற செட் கணக்கில் இலங்கை வீராங்கனையையும், 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உத்பிரக்ஷா 3-1 என்ற செட் கணக்கில் நேபாளம் வீராங்கனையையும் தோற்கடித்தனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள கே.ஆர்.எம். பள்ளியில் படித்து வரும் மாணவிகள் லத்திகா, உத்பிரக்ஷா இருவரும் மாநில பயிற்சியாளர் ராஜேஸ்குமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
- பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது.
- முதல் பரிசான தங்கப் பதக்கத்தை மாணவிகள் வென்றனர்.
திருப்பூர் :
தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவிகளான சத்யா, நிஷாந்தி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்று, முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வென்றனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகள் சத்யா, நிஷாந்தி ஆகியோரை பள்ளி தலைவரும், தாளாளருமான பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில், துணை தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பிவிஎஸ் பி.முருகசாமி, செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓகே எம்.கந்தசாமி, இணை செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி மற்றும் பள்ளி முதல்வர் சுமதி, ஆசிரிய-ஆசிரியைகள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
- புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அமலோற்பவம் தொடக்க பள்ளியில் 4 நாட்கள் நடைபெற்றது.
- 10 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் புதுவையை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அமலோற்பவம் தொடக்க பள்ளியில் 4 நாட்கள் நடைபெற்றது. 10 பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் புதுவையை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் தலைவர் நமசிவாயம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு குண சேகரன் வரவேற்பு வழங்கினார். தமைமை விருந்தினராக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், சிறப்பு விருந்தினராக சுந்திரராஜன் பெர்ஜின், புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் கவுரவ செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் புதுவை மாநில டேபிள் டென்னிஸ் கழகத்தின் துணைத் தலைவர் சுந்தரவரதன், செயற்குழு உறுப்பினர் அலெக்ஸ் அன்புராஜ் சுரேஸ் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி,சதீஷ், பழனி, அய்யப்பன், சர்குருநாத் ஆகியோர் கலந்து கொண்டனார். முடிவில் வேலாயுதம் நன்றி கூறினார்.
- டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றார்
- இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 21 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்
இதன்மூலம் இந்தியா 21 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
- டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சதயன் வெண்கலம் வென்றார்.
- இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என 58 பதக்கம் வென்றுள்ளது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையரில் தமிழக வீரர் சதயன் ஞானசேகரன், இங்கிலாந்தின் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கம் வென்றார்.
இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
- காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது.
- டேபிள் டென்னிசில் நைஜீரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேறியது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.
முதல் போட்டியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் - சத்யன் ஞானசேகரன் ஜோடி 11 - 6, 11 - 7, 11 - 7 என்ற கணக்கில் நைஜீரியா ஜோடியை
இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.
மூன்றாவது போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 11 - 9, 4 - 11, 11 - 6, 11 - 8 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஆண்கள் குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
- சிங்கப்பூர் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
- ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியா வெற்றி.
பர்மிங்காம்:
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- சத்தியன் ஞானசேகரன் ஜோடி சிங்கப்பூரை சேர்ந்த ஷாவோ ஃபெங் ஈதன் போ மற்றும் கிளாரன்ஸ் செவ் செ யூ ஜோடியை 11-5, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல், சிங்கப்பூர் வீரர் பாங்க் யெவ் என் கோயனை, 11-8, 11-9 11-9 என்ற செட்களில் வீழ்த்தி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன், சிங்கப்பூரின் கிளாரன்ஸ் செவ் சே யூவை 11-7, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மெட்ராஸ் ஜிம்கானா கிளப் சார்பில் கிளப்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஓபன் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் ஷரண் ஸ்ரீதர் 11-5, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் ஆந்திரா கிளப் வீரர் சாய் தினேஷ்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் இரட்டையர் பிரிவில் ஷரண் ஸ்ரீதர்-சி.என்.ஸ்ரீதர் (ஜிம்கானா கிளப்) ஜோடி 11-5, 12-10, 11-5 என்ற செட் கணக்கில் எம்.ஏ.ஆர்யா-எம்.எஸ்.ஆதித்யா (மைலாப்பூர் கிளப்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் வித்யா ராமச்சந்திரனும் (மைலாப்பூர் கிளப்), வெட்ரன்ஸ் ஒற்றையர் பிரிவில் ஜேக்கப் ராஜ்குமாரும் (டி.என்.சி.ஏ. கிளப்) வெற்றி பெற்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன.
இதில் இந்திய வீரர் சரத்கமல் சீனதைபேயின் சியுயாக் சுவாங்கை சந்தித்தார். முதல் செட்டை சரத்கமல் 7-11 என்ற செட் கணக்கில் இழந்தார்.
2-வது செட்டை அவர் 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3-வது செட்டை (10-12)பறிகொடுத்த சரத்கமல் 4-வது செட்டில் கடுமையாக போராடினார். இதில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை எடுத்தனர். முடிவில் அந்த செட்டை சரத்கமல் 16-14 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் சரத்கமல் 9-11 என்ற கணக்கில் பறிகொடுத்தார்.
இதனால் 3-2 என்ற கணக்கில் சீனதைபே வீரர் வெற்றி பெற்றார்.

இதேபோல் பெண்களுக்கான ஒற்றை பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, சீனாவின் மன்யூவுடன் தோல்வியடைந்தார். #asiangames #tabletennis #sharathkamal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்