search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manika Batra"

    • சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ஸ்ரீஜா அகுலா 4-11, 4-11, 15-13, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    புதுடெல்லி:

    சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் மான்யூவுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 6-11, 4-11, 9-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரீஜா அகுலா, உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியனான சீனாவின் ஷென் மெங்குடன் மோதினார்.

    இதில் உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ஸ்ரீஜா அகுலா 4-11, 4-11, 15-13, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா ஆகிய இருவருமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து உள்ளனர்.

    • உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது.
    • முதல் இரண்டு சுற்றில் மணிகா பத்ரா வெற்றி பெற்றிருந்தார்.

    டர்பன்:

    உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, 13-வது இடத்தில் உள்ள அட்ரினா டியாஸ்சை (புயர்டோரிகோ) சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா 11-6, 10-12, 9-11, 11-6, 11-13, 11-9, 3-11 என்ற செட் கணக்கில் அட்ரினாடியாஸ்சிடம் போராடி வீழ்ந்து நடையை கட்டினார்.

    முதல் இரண்டு சுற்றில் மணிகா பத்ரா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக மணிகா பத்ரா பதக்கம் வென்றார்.
    • வெண்கலம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது. இத்தொடரில் முதல்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார். இதில் 2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மணிகா தோல்வியடைந்தார்.

    இதையடுத்து நேற்று நடந்த வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார். இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார். மேலும், 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக பதக்கம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெண்கலம் வென்று ஆசிய கோப்பையில் இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றை எழுதியதற்காக மணிகா பத்ராவை வாழ்த்துகிறேன். அவரது வெற்றி இந்தியா முழுவதும் உள்ள பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மற்றும் டேபிள் டென்னிஸை இன்னும் பிரபலமாக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • அரையிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.
    • வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார்.

    பாங்காங்:

    ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீரங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார். இதில்  2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மனிகா தோல்வியடைந்தார்.

    இதையடுத்து இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார்.  இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில்
    வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்று இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது.

    போட்டி நிறைவுக்கு பின்னர் பேசிய அவர், இது மிகப்பெரிய வெற்றியாகும், சிறந்த வீரர்களை தோற்கடித்தேன். நான் அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாடி, சிறப்பாகப் போராடி ஒரு அற்புதமான முடிவை எட்டினேன். எனது எதிர்காலப் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன் என இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா கூறியுள்ளார். #ManikaBatra #Olympic
    புதுடெல்லி:

    இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.



    டெல்லியை சேர்ந்த 23 வயதான மனிகா பத்ரா அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். உலக தரவரிசையில் 56-வது இடத்தில் இருக்கும் மனிகா பத்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது மற்றும் 20-வது இடத்தில் உள்ள வீராங்கனைகளை வீழ்த்தி இருக்கிறேன். இது எனது மனஉறுதியை பலப்படுத்தி இருக்கிறது.

    அடுத்து நான் ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக உழைக்க இருக்கிறேன். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன். உலக தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் வருவதும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதும் தான் எனது இலக்காகும்’ என்று தெரிவித்தார்.  #ManikaBatra #Olympic 
    காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் நான்கு பதக்கம் வென்ற டெல்லி வீராங்கனை இன்னும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். #ManikaBatra
    ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரமான கோல்டு கோஸ்டில் காமல்வெல்த் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான டென்னிஸில் டெல்லி வீராங்கனை மணிகா பத்ரா அசத்தினார். அவர் பெண்கள் அணி மற்றும் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றார்.

    பெரிய பெரிய தொடரில் சாதிக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநிலங்கள் ஊக்கத்தொகை அறிவிக்கும்.

    வெளிமாநிலங்கள் அதிகத் தொகை கொடுத்த போதிலும் டெல்லி அரசு தங்கத்திற்கு 14 லட்சம் ரூபாயும், வெள்ளிக்கு 10 லட்சம் ரூபாயும், வெண்கலத்திற்கு 6 லட்சம் ரூபாயும் கொடுத்து வந்தது. இது மிகவும் குறைவு என்பதால் ஊக்கத்தொகையை அதிகரித்து டெல்லி அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

    பரிந்துரையின்படி மணிகா பத்ராவிற்கு நான்கு பதக்கத்திற்கான தொகையாக 1.7 கோடி ரூபாய் டெல்லி அரசு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. டெல்லியில் நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் பெடரேசன் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இதை மணிகா பத்ரா தெரிவித்தார்.



    இதுகுறித்து மணிகா பத்ரா கூறுகையில் ‘‘இதுவரை ஏன் பணம் வரவில்லை என்று எனக்குத் தெரியாது. ஆனால், பணம் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்’’ என்றார்.

    டெல்லி அரசின் கல்வித்துறைக்கான (விளையாட்டு) துணை இயக்குனர் தர்மேந்தர் சிங், மணிகா பத்ரா ஃபைல் கேபினட் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
    ×