search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "olympic"

    • கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்ப்பு.
    • சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பு.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைத்து ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டது.

    இதற்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு நிரந்தர இடத்தைப் பிடிக்கும் என்று ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    வேகமாக வளர்ந்து வரும் நமது கிரிக்கெட்டை உலகின் மிகப்பெரிய நிலைக்கு எடுத்துச் செல்ல இது வாய்ப்பளிக்கிறது. நான் விளையாட்டைப் பற்றி சிந்திக்க விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் நிரந்தர இடத்தைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி.
    • பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.

    சிறுவர்-சிறுமிகளின் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில் 8 வயது சிறுமி ஒருவர் 60 கிலோ எடையை தூக்கி அசத்தும் வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

    அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.

    பின்னர் அவர் கம்பீரமாக நடந்து வரும் வீடியோவை பார்த்த சமூக வலைதள பயனர்கள் அர்ஸியாவை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சிறுமியின் செயல் இளைஞர்கள் பலருக்கும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கும் என்றும், இவரால் ஒரு நாள் இந்தியா பெருமையடையும் என்றும் சில பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.

    இதுவரை சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 20 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

    திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க சதி நடப்பதாக அவரது அண்ணன் பேட்டியளித்துள்ளார்.
    திருச்சி:

    கத்தார் நாட்டில் உள்ள தோகா நகரில் கடந்த மாதம் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2.70 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

    பெங்களூருவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் கோமதி திருச்சி அருகே உள்ள முடி கண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு ஏராளமான பாராட்டுக்களும், பரிசுகளும் குவிந்தன.

    தமிழக அரசு சார்பில் மற்றும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், திரையுலக நட்சத்திரங்கள் சார்பில் நிதியுதவி வழங்கி பாராட்டு விழாக்களும் நடத்தப்பட்டு கோமதி கவுரவிக்கப்பட்டார். ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்கு சொந்த ஊரான முடிகண்டத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பதக்கம் வென்ற கோமதி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் திடீரென கோமதி மீது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அவர் ஆசிய தடகள போட்டியில் பங்கேற்றபோது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை முடிவு இப்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் ‘நான்ட் ரோலோன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோமதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கு முன்பும், பின்பும் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்படும். கோமதிக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதாவது ‘ஏ’ மாதிரி ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வியை தழுவியுள்ளார். அடுத்த நிலை சோதனையான ‘பி’ மாதிரி சோதனையிலும் அவர் ஊக்க மருந்தை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கம் பறிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் அவர் 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய விபரம் குறித்து அவருக்கு ஈமெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊக்க மருந்து சர்ச்சையை வீராங்கனை கோமதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது வாழ்க்கையில் ஒரு போதும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது இல்லை என்ற அவர் ‘பி’ மாதிரியை சோதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்துள்ளார்.

    சுப்பிரமணி

    வீராங்கனை கோமதி மீது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து திருச்சியில் முடிகண்டத்தில் உள்ள அவரது அண்ணன் சுப்பிரமணியிடம் கேட்டபோது அவர் இதனை முற்றிலும் மறுத்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த எனது சகோதரி கோமதி அவ்வாறு ஊக்க மருந்தை பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. இது பற்றி நாங்கள் அவரிடம் கேட்ட போதும் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்தார். நாங்கள் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.

    கோமதி இதற்கு முன்பு பல போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது அடுத்த கட்ட வெற்றிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் கோமதியின் லட்சியக்கனவு.

    இந்த நிலையில் இது போன்ற புகார்கள் கோமதியின் லட்சியத்திற்கு தடையாக அமையும். மேலும் அடுத்த கட்டமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தடுக்க நடக்கும் சதியோ என்றும் எண்ண தோன்றுகிறது. ஆனாலும் ‘பி’ பரிசோதனைக்கு அவர் இந்திய தடகள கூட்டமைப்புக்கு மேல்முறையீடு செய்துள்ளார். இதில் அவர் நிச்சயம் வெற்றி பெற்று தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பார்.

    அதற்குள் சிலர் இதை பெரிதாக்குவது, எங்களை மன உளைச்சல் அடைய செய்துள்ளது. எதையும் இறுதி செய்வதற்குள் தவறான தகவல்களை பரப்பக்கூடாது.

    இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.
    உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்தார். #ShootingWorldCup #AbhishekVerma #TeamIndia
    பீஜிங்:

    சீன தலைநகர் பீஜிங்கில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்  பிஸ்டர் பிரிவில், இந்தியாவின் அபிஷேக் வர்மா 242.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ரஷிய வீரர் ஆர்டம் செர்னோசோவ் 240.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். கொரிய வீரர் சியுங்வூ ஹான் 220 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்த வெற்றியின்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் வர்மா தனது இடத்தை உறுதி செய்தார். இதேபோல் அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டேலா, சவுரப் சவுத்ரி, திவ்யன்ஷ் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளனர். #ShootingWorldCup #AbhishekVerma #TeamIndia
    2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன் என இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா கூறியுள்ளார். #ManikaBatra #Olympic
    புதுடெல்லி:

    இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.



    டெல்லியை சேர்ந்த 23 வயதான மனிகா பத்ரா அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். உலக தரவரிசையில் 56-வது இடத்தில் இருக்கும் மனிகா பத்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது மற்றும் 20-வது இடத்தில் உள்ள வீராங்கனைகளை வீழ்த்தி இருக்கிறேன். இது எனது மனஉறுதியை பலப்படுத்தி இருக்கிறது.

    அடுத்து நான் ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக உழைக்க இருக்கிறேன். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன். உலக தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் வருவதும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதும் தான் எனது இலக்காகும்’ என்று தெரிவித்தார்.  #ManikaBatra #Olympic 
    ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வென்று தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக ஆசிய விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்று ஊர் திரும்பிய இந்திய வீரர் அவினாசி தருண் கூறியுள்ளார்.
    திருப்பூர்:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீ., தடை தாண்டும் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டத்தில் இந்திய வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி பதக்கம் வென்றார்.

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி, ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த அவர் நேற்று காலை தனது ஊருக்கு வந்தார். அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஊர் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தருணுக்கு, மலர் கிரீடம் சூட்டினர். பள்ளி மாணவர் குழுவினர், பாண்டு வாத்தியம் முழங்க வரவேற்றனர்.

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அவர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவிநாசியை சேர்ந்த முகமது சுல்தான் என்பவர், தருணுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.

    பின், சொந்த ஊரான ராவுத்தம்பாளையம் கிராமத்துக்கு சென்றார். ஊர் எல்லையில், சின்னாரிபாளையம், வலையபாளையம், ராவுத்தம்பாளையம் கிராம மக்கள், மேள தாளம் முழங்க, வரவேற்பளித்தனர்.

    அவிநாசி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். தருண் அய்யாசாமி கூறும்போது. பதக்கம் வென்றது பெருமையளிக்கிறது. வரும் நாட்களில், போட்டிகளில் சிறப்பாக பங்கேற்பேன். என் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வென்று தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.
    ‘தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்தி தீவிர பயிற்சி மேற்கொண்டால் ஒலிம்பிக் போட்டியிலும் சாதிக்க முடியும்’ என்று ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் தெரிவித்தார். #AsianGames2018
    சென்னை:

    சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ் 400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் கலப்பு அணிகள் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், தருண் 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் தலா 2 வெள்ளிப்பதக்கம் வென்ற திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வலுதியூரை சேர்ந்த ஆரோக்ய ராஜீவ், திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த தருண் ஆகியோருக்கு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையை உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாலை அணிவித்து வீரர்களை வாழ்த்தினார். அத்துடன் வீரர்கள் இருவருக்கும் ஒரு பவுன் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.


    பின்னர் 21 வயதான தருண் அளித்த பேட்டியில், ‘காயத்தில் இருந்து மீண்டு வந்து 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 48.96 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியை என்னால் நம்பமுடியவில்லை. ஐரோப்பாவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டது எனது திறனை மேம்படுத்த உதவிகரமாக இருந்தது. அடுத்து ஆசிய மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகுவதில் கவனம் செலுத்த இருக்கிறேன். தீவிர பயிற்சி மேற்கொண்டு எனது திறமையை வளர்த்து கொண்டால் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற முடியும். இந்திய அணியின் பயிற்சி முகாமை பாட்டியாலாவுக்கு பதிலாக திருவனந்தபுரத்துக்கு மாற்றினால் நன்றாக இருக்கும். வேலைவாய்ப்பு எனக்கு வரத் தான் செய்கிறது. இருப்பினும் நல்ல வேலைவாய்ப்புக்காக காத்து இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

    27 வயது ராணுவ வீரரான ஆரோக்ய ராஜீவ் அளித்த பேட்டியில், ‘ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனது செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதற்கு சத்தான உணவுகளை எடுத்து கொள்வதும் ஒரு காரணமாகும். தேசிய பயிற்சி முகாமில் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் ஒரே மாதிரியான உணவு வகைகள் தான் அளிக்கப்படுகிறது. வீரர்கள் கலந்து கொள்ளும் பந்தயத்திற்கு தகுந்த மாதிரி உணவு வழங்க வேண்டும். தினமும் ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிடும் போது ஒருவித சலிப்பும் ஏற்படுகிறது. தேசிய பயிற்சி முகாம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டால் சவுகரியமாக இருக்கும். அடுத்து ஆசிய மற்றும் உலக தடகள போட்டி குறித்து கவனம் செலுத்த இருக்கிறேன். நவீன தொழில்நுட்ப வசதியை சரியாக பயன்படுத்தி கடுமையாக உழைத்தால் நம்மால் ஒலிம்பிக் போட்டியிலும் சாதிக்க முடியும்’ என்று கூறினார். #AsianGames2018
    ×