search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manu Bhaker"

    ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய வீராங்கனை மனு பாகர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    ரஷியாவில் உள்ள முனிச்சில் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டி நடைபெற்றது.

    இதில் இந்திய வீராங்கனை மனு பாகர் நான்காவது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இவருடன் தற்போது 7 முறை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது. #AsianAirgunChampionship #ManuBhaker #SaurabhChaudhary
    புதுடெல்லி:

    12-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி 484.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.



    தென்கொரியாவின் ஹவாங் சியோன்குன்-கிம் மோஸ் ஜோடி 481.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சீன தைபேயின் வு ஷியா யிங்-கு குயான் டிங் இணை 413.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய ஜோடியான அனுராதா-அபிஷேக் வர்மா 372.1 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த போட்டியின் தகுதி சுற்றில் 17 வயதான மானு பாகெர், 16 வயதான சவுரப் சவுத்ரி ஜோடி 784 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த வகையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் விடாலினா பாட்சாராஷ்கினா-அர்டெம் செர்னோசோவ் ஜோடி 782 புள்ளிகள் சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது. #AsianAirgunChampionship #ManuBhaker #-SaurabhChaudhary
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் தங்கப்பதக்கம் வென்றனர். #YouthOlympics2018 #ManuBhaker
    பியூனஸ் அயர்ஸ்:

    206 நாடுகள் பங்கேற்றுள்ள 3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 62 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரினுங்கா மொத்தம் 274 கிலோ (ஸ்னாட்ச்-124, கிளன் அண்ட் ஜெர்க்-150 கிலோ) எடை தூக்கி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். துருக்கி வீரர் தோப்தாஸ் கானெர் மொத்தம் 263 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கமும், கொலம்பியா வீரர் வில்லார் எஸ்டீவன் ஜோஸ் மொத்தம் 260 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.



    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். மிசோரமை சேர்ந்த 15 வயதான ஜெர்மி லால்ரினுங்கா உலக இளையோர் மற்றும் ஆசிய இளையோர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லால்ரினுங்கா கூறுகையில், ‘இளையோர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தந்தை குத்துச்சண்டையில் தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றவர். அதனால் நானும் குத்துச்சண்டை வீரராக ஆக வேண்டும் என்று விரும்பி, ஆரம்ப காலத்தில் அதற்குரிய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தேன். அந்த சமயத்தில் தான் எங்களது கிராமத்தில் புதிதாக பளுதூக்குதல் அகாடமி திறக்கப்பட்டது. அதை பார்த்ததும் எனக்குள் பளுதூக்குதல் வீரராக உருவெடுக்க வேண்டும் என்று ஆசை துளிர்விட்டது. அதன் பிறகு பளுதூக்குதலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இந்த போட்டிக்கு உடல்ரீதியாக நம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதனால் தான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.



    மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த மே மாதம் அம்மை நோயால் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து குணமடைந்ததும், பழைய நிலையை எட்ட கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. இனி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இன்னும் தீவிரமாக தயாராகுவேன். ஒலிம்பிக் போட்டிக்கு எனது உடல் எடைப்பிரிவை 67 கிலோவுக்கு மாற்றப்போகிறேன்’ என்றார்.

    இதன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீராங்கனை மானு பாகெர் 236.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ரஷிய வீராங்கனை இயானா எனினா 235.9 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜார்ஜியா வீராங்கனை நினோ குட்சிபெரிட்ஸ் (214.6 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

    அரியானாவை சேர்ந்த 16 வயதான மானு பாகெர் உலக கோப்பை போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தி இருந்தார். சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அவர் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் அவர் பதக்கமின்றி ஏமாற்றம் அளித்தார். அதற்கு இந்த போட்டியில் மானு பாகெர் பரிகாரம் தேடிக் கொண்டார். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    மானு பாகெர் கூறுகையில், ‘இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆசிய போட்டி ஏமாற்றத்திற்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி எனது மனஉறுதிக்கு வலுசேர்க்கும். ஒவ்வொரு முறையும் முழுதிறமையை வெளிப்படுத்தவே முயற்சிக்கிறேன். சில நேரம் வெற்றிகரமாக அமையாமல் போகலாம். ஆனால் விடா முயற்சியை சிறந்த முறையில் தொடர்வதும், அதிக புள்ளிகள் குவிப்பதும் திருப்தி அளிக்கிறது’ என்றார்.

    ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 9-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் தோற்கடித்தது. பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.  #YouthOlympics2018 #ManuBhaker
    ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் 16 வயதான மனு பாகெர் 593 புள்ளிகள் பெற்று இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். #ManuBhaker #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.

    4-ம் நாளான இன்று காலை பெண்களுக்கான 25 மீட்டர் பிரிவில் தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் மனுபாகெர், ரகி சர்னோபட் பங்கேற்றனர். 16 வயதான மனு பாகெர் 593 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். இதேபோல் ரகி சர்னோபட் 580 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் இறுதிப் போட்டி இன்று மாலை நடக்கிறது.

    பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (நிலை 3) பிரிவில் இந்திய வீராங்கனைகள் அனுஜூம் (1159 புள்ளி) 9-வது இடமும், காயத்ரி நித்யானந்தம் (1148 புள்ளி) 17-வது இடமும பெற்று இறுதி சுற்று வாய்ப்பை இழந்தனர். #ManuBhaker #AsianGames2018
    ×