என் மலர்
நீங்கள் தேடியது "world cup shooting"
- 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்தது.
- கலப்பு அணி பிரிவில் இந்திய ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
முனீச்:
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் 36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங் தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
இந்நிலையில், இன்று நடந்த கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா-ஆர்யா போர்சே அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்த ஜோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீனாவின் ஷெங்க் லிஹாவ்-வாங்க் செபெய் அணியை 17-7 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன்மூலம் நடப்பு தொடரில் இந்திய அணி 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது. சீனா 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதல் இடத்தைப் பிடித்தது.
- 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சுருச்சி தங்கப் பதக்கம் வென்றார்.
முனீச்:
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் வரும் 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள்.
தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 6வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங் தங்கப் பதக்கம் கைப்பற்றினார். தொடர்ந்து 3-வது முறையாக உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றுள்ளார் சுருச்சி.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக நடப்பு தொடரில் இந்திய அணி ஒரு தங்கம், 2 வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்றுள்ளது.
- 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்.
முனீச்:
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் வரும் 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள்.
தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 6வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். நடப்பு தொடரில் இந்திய அணி 2 பதக்கங்கள் வென்றுள்ளது.
- 3-வது உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் மனு பாக்கர் இறுதிச்சுற்றில் 6வது இடம் பிடித்தார்.
முனீச்:
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் நேற்று தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர், வெண்கலம் கைப்பற்றிய சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே ஆகியோரும் அடங்குவர்.
தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், 25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் 5வது இடம்பெற்று டாப் 8 பட்டியலில் இடம்பிடித்தார்.
மாலை 6 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 6வது இடம்பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
- 3வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் தொடங்குகிறது.
- இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள்.
முனீச்:
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் இன்று தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
குறிப்பாக ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களான சீனாவின் லி யுஹோங், 20 வயதான ஷெங் லிஹாவ், ஸி யு உள்ளிட்ட ஜாம்பவான்கள் களம் காண்கின்றனர்.
இந்திய அணியில் மொத்தம் 36 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர், வெண்கலம் கைப்பற்றிய சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே ஆகியோரும் அடங்குவர்.
ஒலிம்பிக்கில் இரண்டு முறை கலந்துகொண்டவரான தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இளவேனில் மற்றும் தேசிய சாம்பியன் அனன்யா நாயுடு (பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள்), ஆதித்யா மால்ரா, நிஷாந்த் ரவாத் (ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்) ஆகியோர் முதல் முறையாக உலக போட்டியில் அடியெடுத்து வைக்கிறார்கள்.
பியூனஸ் அயர்சில் நடந்த முதலாவது சீசனில் இந்தியா 4 தங்கம் உள்பட 8 பதக்கமும், லிமாவில் நடந்த 2-வது சீசனில் இந்தியா 7 பதக்கமும் அறுவடை செய்தது.
ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த மனு பாக்கர் உலக போட்டியிலும் சாதிப்பாரா என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
- பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
- இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.
பியூனஸ் அயர்ஸ்:
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அர்ஜென்டினாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை 18 வயதான சுருச்சி இந்தர்சிங் முதல் முறையாக தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
8 பேர் இடையிலான இறுதி சுற்றில் சுருச்சி 244.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். நடப்பு தொடரில் இந்தியாவின் 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும். சீனாவின் கியான் வெய் 241.9 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜியாங் ரேன்சிங் 221 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் ஏமாற்றம் அளித்தார். அவர் தகுதி சுற்றோடு (13-வது இடம்) வெளியேற்றப்பட்டார்.
இதற்கிடையில், ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டலில், விஜய்வீர் சித்து தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்திலும் (3 தங்கம் உள்பட 7 பதக்கம்), இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.
- உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை உலக சாதனை படைத்தார்.
- இந்தப் போட்டியில், அவர் தகுதிச்சுற்றில் 595 புள்ளிகள் சேர்த்தது சாதனை ஆகும்.
பகு:
அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நேற்று நடந்த இளநிலை மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டியில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான் (19), கலந்துகொண்டார்.
இந்தப் போட்டியில், அவர் தகுதிச்சுற்றில் 595 புள்ளிகள் சேர்த்தார். கடந்த 1994-ம் ஆண்டு பல்கேரிய வீராங்கனை டயானா லார்கோவா 594 புள்ளிகள் சேர்த்து இருந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்துவந்தது. அதனை சங்வான் முறியடித்துள்ளார். இதற்கு முன் 1989-ம் ஆண்டு ரஷிய வீராங்கனை நினோ சலுக்வத்ஜேவின் (593 புள்ளிகள்) சாதனையையும் முறியடித்துள்ளார்.
- உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலில் நடைபெற்றது.
- இதில் இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளி வென்றார்.
பிரசிலியா:
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டிஜெனீரோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அவர் தனது முதலாவது உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பதுடன் தகுதிச்சுற்றில் 592 புள்ளிகள் குவித்ததன் மூலம் சக வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலின் (591 புள்ளி) தேசிய சாதனையையும் தகர்த்தார்.
நார்வே வீராங்கனை ஜியானெட்டி ஹிக் டஸ்டாட் 461.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற 16 பேர் கொண்ட இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 7-வது இடம் பெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






