search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக்"

    • ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம்.
    • பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு மிக சிறப்பாக நடத்தி வருகிறது.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மேடையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, "இந்த தொடக்க விழாவில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் பிரதமரின் முக்கிய திட்டமாகும். தற்போது சர்வதேச அளவில் இந்தியா பதக்கங்களை பெற்று முன்னிலை பெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம் ஆகும். இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்து வருகிறது.

    2030, 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்காக பிரதமர் மோடி பல முயற்சிகளை செய்து வருகிறார். விஸ்வநாதன் ஆன்ந்த், பிரக்ஞானந்தா ஆகிய செஸ் ஜாம்பவான்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர். பெரிய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் மிக சிறப்பாக தமிழ்நாடு அந்த போட்டிகளை நடத்தி இருக்கின்றது. ஹாக்கி விளையாட்டு போட்டி, ஸ்குவாஸ் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகிய போட்டிகளை மிகவும் திறமையாக நடத்தி இருக்கிறது.

    கேலோ இந்தியா என்பது பதக்கங்களை வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல, உங்களின் பெருமையை, திறமையை மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பை தருகின்ற ஒரு விளையாட்டு போட்டி" எனக் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கேலோ இந்தியாவின் கீழ் செலவழிக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்கு உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

    • 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.
    • ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார்.

    2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தற்போது உலக தடகள போட்டியிலும், தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார். ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார். செக் குடியரசை சேர்ந்த ஜான் ஜெலன்சி, நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் தார்கில்சென் ஆகியோர் ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இருந்தனர்.

    ஜெலன்சி 1992, 1996, 2000 ஒலிம்பிக்கிலும், 1993, 1995, 2001 உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், தார்கில்சென் 2008 ஒலிம்பிக்கிலும், 2009 உலக தடகளத்திலும் தங்கம் வென்று இருந்தனர்.

    • உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகள் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இ ப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    நாமக்கல்:

    இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இ ப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கலெக்டர் ஸ்ரேயாபிசிங் தலைமையில் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

    பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் எம்.பி. எ.கே.பி.சின்ராஜ் , நாமக்கல் எம்.எல்.ஏ. .ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி அவர்கள், காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் 44 - வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்க ர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளையும், விழி ப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டத்தினையும் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும், 44 - வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் மதிவேந்தன் செல்பி எடுத்துக்–கொண்டார். தொடர்ந்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டார்கள்.

    ×