search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Championships"

    • ஜப்பான் வீராங்கனையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.
    • 50 கிலோ எடைப்பிரிவில் ஷிவானி பவார் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களம் காண்கிறார்.

    சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம் கிர்கிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ராதிகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோநோகா ஒசாக்கியை எதிர்கொள்கிறார். 23 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த வருடம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். கடந்த வருடம் நடைபெற்ற சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் 2-வது இடம் பிடித்தார். கஜகஸ்தான், கிர்கிஸ்தான் வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    50 கிலோ எடைப்பிரிவில் ஷிவானி பவார் காலியுறுதியில் தோல்வியடைந்தார். ஆனால் அவரை வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    அதேபோல் 55 கிலோ எடைப்பிரிவில் தமன்னா 0-9 என தோல்வியடைந்த நிலையில், அவர் வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் பதக்கத்திற்கான போட்டியில் நீடிக்கிறார்.

    அதேபோல் புஷ்பா யாதவ் (59 கிலோ), பிரியா (76 கிலோ) ஆகியோரும் தோல்வியடைந்தாலும் பதக்கப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களை வீழ்த்திய வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

    • அரையிறுதியில் சீன தைபே அணியிடம் தோல்வி
    • சரத் கமல், சத்தியன் நேர்செட்டில் தோல்வியடைந்தனர்

    ஆசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங்கில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் அணிக்கான அரையிறுதியில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது.

    இந்திய அணியில் சரத் கமல், ஜி. சத்தியன், ஹர்ப்ரீத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். சரத் கமல் சுயாங் சி-யுயானை எதிர்கொண்டார். இதில் சரத் கமல் 6-11, 6-11, 9-11 என தோல்வியடைந்தார்.

    சத்தியன் 5-11, 6-11, 10-12 என லின் யுன்-ஜுவிடம் தோல்வியடைந்தார். ஹர்ப்ரீத் 6-11, 7-11, 11-7, 9-11 என தோல்வியடைந்தார்.

    இதனால் இறுதி வாய்ப்பை இழந்த இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தோடு விடைபெற்றது.

    • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் லவ்லினா, பர்வீன் ஹூடா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்,
    • இப்போட்டியில் இந்தியாவின் மீனாட்சி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    ஜோர்டான்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிகள் இன்று தொடங்கியது.

    இந்த தொடரில் 75 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அந்த வகையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) இன்று உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சொகிபாவை எதிர்கொண்டார்.

    போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தனது புத்திசாலித்தனமான நுட்பங்களையும் உத்திகளையும் திறம்பட பயன்படுத்திய லவ்லினா இறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இதேபோல், 63 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, ஜப்பான் வீரர் கிடோ மாயை எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற கணக்கில் பர்வீன் ஹூடா வென்று தங்கம் கைப்பற்றினார்.

    தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் அமித் பங்கால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.#AsianChampionships #AmitPanghal
    பாங்காக்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கால், இறுதிச்சுற்றில் தென்கொரிய வீரர் கிம் இங்கியூவை எதிர்கொண்டார்.

    இந்திய வீரர் பங்காலின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு, கொரிய வீரரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து குத்துகளை விட்டு புள்ளிகளைக் குவித்த அமித் பங்கால் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஆண்டில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

    இதேப்போல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் 3-2 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் எங்க் அமர் காக்ஹூவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.  49 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஆஷிஷ் குமார் (75 கிலோ), ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை சாய்த்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். #AsianChampionships #AmitPanghal
    ×