என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிய சாம்பியன்ஷிப்"
- ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா மொத்தம் 99 பதக்கங்களை வென்றுள்ளது
- இந்தியா 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
16 ஆவது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது.
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 99 பதக்கங்களை வென்று, முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது. இந்த 99 பதக்கங்களில் 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கமும் அடக்கம்.
கஜகஸ்தான் 21 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தையும், சீனா 15 தங்கம் உள்பட 37 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
- சீனியர் பிரிவில் 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம்.
- மூன்று பிரிவுகளிலும் சேர்த்து 103 பதக்கங்கள் வென்றுள்ளது.
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது. இதில் 25 மீ சென்டர் ஃபயர் (25m centre fire) பிரிவில் இந்திய வீரர் ராஜ்கன்வார் சிங் சந்து தங்கப் பதக்கம் வென்றார். அன்குர் மிட்டல் டபுள் ட்ரப் பிரிவில் தங்கம் வென்றார்.
பெண்களுக்கான டபுள் டிரப் பிரிவில் அனுஷ்கா பாதி (93 புள்ளி) தங்கம், பிரனில் இங்க்லே (89) வெள்ளி, ஹபீஸ் கான்ட்ரக்டர் (87) வெண்கல பதக்கம் வென்றனர். மூன்று பேரும் அணிப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினர்.
சீனியர் பிரிவில் இந்தியா 14 தங்கம், 8 சில்வர், 9 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம் பிடித்தது. சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 3 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது.
ஒட்டுமொத்தமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் (சீனியர், ஜூனியர், இளையோர்) மூன்று பிரிவுகளில் 103 பதக்கங்கள் வென்றனர்.
- 18-17 என முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், பின்தங்கி தோல்வியடைந்தார்.
- சீன வீரர் தங்கப் பதக்கமும், கொரிய வீரர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 25 மீ ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளி பதக்கம் வென்றார்.
22 வயதான அனிஷ் பன்வாலா மொத்தம் 35 புள்ளிகள் பெற்றார். சீன வீரர் சு லியான்போஃபன் 36 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். கொரிய வீரர் லீ ஜேக்யூன் வெண்கல பதக்கம் வென்றார்.
18-17 என முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், அதன்பின் அனிஷ் பின்தங்கினார். precision சுற்றில் 290 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தில் இருந்தார். இன்று நடைபெற்ற ரேபிட் (Rapid) சுற்றில் 293 புள்ளிகள் பெற்று, மொத்தமாக 583 புள்ளிகள் பெற்று 4ஆவது இடத்திற்கு முன்னேறிார்.
மற்றொரு இந்திய வீரர் ஆதார்ஷ் சிங் 5ஆவது இடம் பிடித்தார்.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் கம்ரா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
கடந்த ஆண்டில் இவர் வெள்ளி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் பிரதாப் சிங் கைப்பற்றிய 3வது தங்கம் இதுவாகும். இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளார்.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் அர்ஜுன் பபுதா, இளவேனில் வாலறிவன் ஜோடி தங்கம் வென்றது.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா, இளவேனில் வாலறிவன் ஜோடி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
இந்த ஜோடி சீன ஜோடியை 17-11 என வென்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றியது.
ஏற்கனவே, தனிநபர் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
அவர் 253.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா தங்கம் வென்றார்.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
அவர் 57 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்றார்.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்நிலையில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் 219.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மனு பாக்கர் பெற்ற 10வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடியுடன் காங்காங் ஜோடி மோதியது.
- பரபரப்பாக சென்ற முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது.
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடியுடன் காங்காங் ஜோடி மோதியது.
இதில் பரபரப்பாக சென்ற முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது. தொடர்ந்து ஆடிய 2-வது செட்டையும் அந்த ஜோடியே வென்றது. இதனால் 22-20, 21-13 என்ற செட் கணக்கில் காங்காங் ஜோடி வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்த தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் யாரும் அரையிறுதிக்கு கூட தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 16-21, 21-12, 11-21 என சீனாவின் ஜு குயாங் லுவிடம் வீழ்ந்தார்.
- கிரண் ஜார்ஜ், கஜகஜஸ்தான் வீரர் டிமிட்ரி பனாரினை 21-16, 21-8 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனாய், சீனாவின் ஜு குயாங் லு-வை எதிர்கொண்டார்.
இதில் 16-21, 21-12, 11-21 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்ததார்.
மற்றொரு இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், கஜகஜஸ்தான் வீரர் டிமிட்ரி பனாரினை 21-16, 21-8 என வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆகார்ஷி காஷ்யப், அனுபமா உத்யாயா தொடக்க சுற்றுடன் வெளியேறினர். ஆகார்ஷி 13-21, 7-21 என தோல்வியடைந்தார். அனுபமா 13-21, 14-21 என தோல்வியடைந்தார்.
- அரையிறுதியில் சீன தைபே அணியிடம் தோல்வி
- சரத் கமல், சத்தியன் நேர்செட்டில் தோல்வியடைந்தனர்
ஆசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங்கில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் அணிக்கான அரையிறுதியில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது.
இந்திய அணியில் சரத் கமல், ஜி. சத்தியன், ஹர்ப்ரீத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். சரத் கமல் சுயாங் சி-யுயானை எதிர்கொண்டார். இதில் சரத் கமல் 6-11, 6-11, 9-11 என தோல்வியடைந்தார்.
சத்தியன் 5-11, 6-11, 10-12 என லின் யுன்-ஜுவிடம் தோல்வியடைந்தார். ஹர்ப்ரீத் 6-11, 7-11, 11-7, 9-11 என தோல்வியடைந்தார்.
இதனால் இறுதி வாய்ப்பை இழந்த இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தோடு விடைபெற்றது.






