என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aishwary Pratap Singh Tomar"

    • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.

    ஷிம்கென்ட்:

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

    ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் பிரதாப் சிங் கைப்பற்றிய 3வது தங்கம் இதுவாகும். இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளார்.

    • குசலே மொத்தம் 590-38x என்ற புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
    • மற்றொரு இந்திய வீரரான தோமர் மொத்தமாக 589-33x உடன் 11-வது இடத்தைப் பிடித்தார்.

    பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50மீ 3பி தகுதிச் சுற்றில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ஸ்வப்னில் குசேலே ஆகியோர் கலந்து கொண்டனர். தகுதிச் சுற்றில் முதல் எட்டு துப்பாக்கி சுடும் வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர்.

    அந்த வகையில் குசலே மொத்தம் 590-38x என்ற புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான தோமர் மொத்தமாக 589-33x உடன் 11-வது இடத்தைப் பிடித்தார். இதனால் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார்.

    சீனாவின் லியு யுகுன் மொத்தம் 594 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், நார்வேயின் ஜான்-ஹெர்மன் ஹெக் 593 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்,

    3 முதல் 6 இடங்கள் முறையே செர்ஹி குலிஷ் 592 புள்ளி (உக்ரைன்), லுகாஸ் 592-35x புள்ளி (பிரான்சிஸ்), லாசர் கோவாசெவிக் 592-33x புள்ளி (செர்பியா), டோமாஸ் பார்ட்னிக் 590-40x புள்ளி (பொலந்து) ஜிரி பிரிவ்ராட்ஸ்கி 590-35x புள்ளி (செக் குடியரசு). 7-வது இடத்தில் தோமர் உள்ளார்.

    ×