என் மலர்
நீங்கள் தேடியது "துப்பாக்கிச்சுடுதல்"
- 3 தங்க பதக்கத்துடன் இந்தியா 3ஆவது இடம் பிடித்துள்ளது.
- சீனா 12 தங்கத்துடன் முதல் இடத்தை பிடித்தது.
எகிப்து நாட்டின் கெய்ரோவில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் குர்ப்ரீத் சிங் ஆண்களுக்கான 25மீ சென்டர் பையர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் தங்கமும், பிரான்ஸ் வீரர் வெண்கல பதக்கமும் வென்றனர்.
ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இந்தியா 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 13 பதக்கங்களை வென்றது.
சீனா 12 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்றது. தென்கொரியா 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் வென்றது.
சம்ரத் ராணா (10மீ ஏர் பிஸ்டல்), ரவீந்தர் சிங் (50மீ ஸ்டேண்டர்டு பிஸ்டல் மற்றும் 10 மீ ஏர் பிஸ்டல் அணி) ஆகியோர் தங்கம் வென்றனர்.
- இந்தியா 11 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
- இதில் மூன்று தங்கம், ஐந்து வெள்ளி பதக்கங்கள் அடங்கும்.
ISSF ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிப்பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகா- கபில் ஜோடி தங்கப் பதக்கம் வென்றனர். மூன்று தங்கம், ஐந்து வெள்ளி, மூன்று வெண்கலம் என 11 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இத்தாலி 2 தங்கம், ஒரு வெள்ளியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஜூனியர் 10மீ ஏர் பிஸ்டலில் ராஷ்மிகா சாகல், கபில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றனர்.
இந்த ஜோடி மற்றொரு இந்திய ஜோடியான வான்ஷிகா சவுத்ரி- அந்தோணி ஜோநாதன் கவின் ஜோடியை 16-10 என வீழ்த்தியது. ஸ்பெயின் ஜோடி, ஈரான் ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.
- ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா மொத்தம் 99 பதக்கங்களை வென்றுள்ளது
- இந்தியா 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
16 ஆவது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது.
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 99 பதக்கங்களை வென்று, முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது. இந்த 99 பதக்கங்களில் 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கமும் அடக்கம்.
கஜகஸ்தான் 21 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தையும், சீனா 15 தங்கம் உள்பட 37 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
- சீனியர் பிரிவில் 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம்.
- மூன்று பிரிவுகளிலும் சேர்த்து 103 பதக்கங்கள் வென்றுள்ளது.
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது. இதில் 25 மீ சென்டர் ஃபயர் (25m centre fire) பிரிவில் இந்திய வீரர் ராஜ்கன்வார் சிங் சந்து தங்கப் பதக்கம் வென்றார். அன்குர் மிட்டல் டபுள் ட்ரப் பிரிவில் தங்கம் வென்றார்.
பெண்களுக்கான டபுள் டிரப் பிரிவில் அனுஷ்கா பாதி (93 புள்ளி) தங்கம், பிரனில் இங்க்லே (89) வெள்ளி, ஹபீஸ் கான்ட்ரக்டர் (87) வெண்கல பதக்கம் வென்றனர். மூன்று பேரும் அணிப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினர்.
சீனியர் பிரிவில் இந்தியா 14 தங்கம், 8 சில்வர், 9 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம் பிடித்தது. சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 3 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது.
ஒட்டுமொத்தமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் (சீனியர், ஜூனியர், இளையோர்) மூன்று பிரிவுகளில் 103 பதக்கங்கள் வென்றனர்.
- உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- 10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் சீன வீராங்கனை வாங் ஜிஃபை தங்க பதக்கம் வென்றார்.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் 252.7 புள்ளிகள் பெற்று சீன வீராங்கனை வாங் ஜிஃபை தங்க பதக்கமும் கொரியாவின் குவான் யூன்ஜி 252.6 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கமும் வென்றனர். 231.2 புள்ளிகள் பெற்று இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்றார்.
- 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சரபோத் சிங் தங்கம் வென்றார்.
- 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஸ்சன் பிரிவில் சிஃப்ட் கவுர் சம்ரா வெண்கல பதக்கம் வென்றார்.
ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சரபோத் சிங் தங்கம் வென்றார்.
50 மீட்டர் ரைபிள் 3 பொசிஸ்சன் பிரிவில் சிஃப்ட் கவுர் சம்ரா வெண்கல பதக்கம் வென்றார். இந்தியாவால் இரண்டு பதக்கங்கள்தான் வெல்ல முடிந்தது.
சீனா 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 11 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்தது. நார்வே ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 3 பதக்கங்கள் பெற்று 2-வது இடம் பிடித்தது.
பிரான்ஸ் ஒரு தங்கம், ஒரு வெண்கலத்துடன் 3-வது இடம் பிடித்தது. இந்தியா 1 தங்கம், ஒரு வெண்கலத்துடன் 4-வது இடம் பிடித்துள்ளது.
- பாரீசில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்திறங்கிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்ததது மகிழ்ச்சியளிக்கிறது என்று மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்சில் துப்பாக்கிச்சுடுதலில் பிரிவில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றெடுத்த வீராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பியுள்ளார். ஏர் இந்தியா விமானம் மூலம் பாரீசில் இருந்து டெல்லிக்கு இன்று காலை வந்திறங்கிய மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மனுவின் குடும்பத்தினர் உட்பட 100 கணக்கானோர் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலையில் இருந்தே காத்திருந்த நிலையில் விமானமானது ஒரு மணி நேரம் தாமதமாகி 9.20 மணிக்கு தரையிறங்கியது.
தொடர்ந்து மனு பாக்கருக்கும் அவருடன் வந்த பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மக்களின் வரவேற்பினால் நெகிழ்ந்த மனு பாக்கர், இங்கு எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்ததது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் 10m ஏர் பிரிஸ்டல் துப்பாக்கிச்சூடுதல் ஒற்றையர் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், 10m பிரிஸ்டல் இரட்டையர் பிரிவில் சரபோஜித் சிங்குடன் சேர்ந்து மற்றொரு வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.






