என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக்"

    • எனது செயல்பாடு நன்றாகவே இருந்தது.
    • பதக்கமேடையில் ஏற முடியாமல் போய் விட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், எகிப்தில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தோல்வியை தழுவினார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனு பாக்கர் பேசுகையில்,

    'உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதே எனது இலக்காக இருந்தது. எனது செயல்பாடு நன்றாகவே இருந்தது. ஓரளவு நல்ல ஸ்கோர் எடுத்தேன். ஆனாலும் பதக்கமேடையில் ஏற முடியாமல் போய் விட்டது. சக வீராங்கனை இஷா சிங் பதக்கம் வென்றார்.

    விளையாட்டில் நீங்கள் ஒவ்வொரு நாளும் பதக்கம் வெல்ல முடியாது. சில சமயம் தோல்விகளும் வரும். என்னை பொறுத்தவரை நான் தான் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில்லை. இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வேண்டும். அதை யார் வென்றாலும் உற்சாகப்படுத்துவேன்' என்றார்.

    • கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்.
    • அதிக எடைப் பிரிவுக்குத் தயாராக வேண்டும், அது அவருக்குப் பழக்கமில்லை.

    கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள 2028 ஒலிம்பிக்கில், புதிய எடைப் பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டியதாகி உள்ளது.

    சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு (IWF) புதிய ஒலிம்பிக் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் மீராபாயின் 49 கிலோ எடைப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. பளுதூக்குதல் போட்டிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்ட போதிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ பிரிவில் வெள்ளி வென்ற சானு, கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தார். இப்போது, LA 2028 இல் பங்கேற்க விரும்பினால், அவர் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க வேண்டும்.

    31 வயதான மீராபாய் சானு முன்னேறுவதற்கு முன்னால் இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று, அதிக எடைப் பிரிவுக்குத் தயாராக வேண்டும், அது அவருக்குப் பழக்கமில்லை. மேலும், 53 கிலோ பிரிவில் தொடர்ந்து 200 கிலோ அல்லது அதற்கு மேல் தூக்குவது முக்கியமானதாக இருக்கும். 2024 ஒலிம்பிக்கில், அவர் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் முழுவதும் 199 கிலோவைத் தூக்கினார்.

    மேலும், கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். மேலும், மீராபாய் தோள்பட்டை மற்றும் மணிக்கட்டு காயங்களை எதிர்கொண்டதால், அவரது உடற்தகுதி சமீபத்தில் ஒரு பிரச்சனையாக உள்ளது.

    • விழா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது.
    • நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

    இந்திய ராணுவத்தில் பல துறைகளில் உயரிய விருதுகளை பெற்றவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தாதாசாகேப் விருது பெற்ற மலையுல உலகின் சூப்பர் ஸ்டாரும் பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால், ராணுவத் தளபதியை சந்தித்து பாராட்டு பெற்றார்.

    இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இந்த விழா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது.

    தடகளத்தில் நீரஜ் சோப்ராவின் சாதனைகளையும், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களை ஊக்குவிப்பதற்கான அவரது பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக ஆயுதப் படைகளில் கவுரவப் பதவிகளைப் பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் குழுவில் அவர் இணைந்துள்ளார். 



    • சிறு வயதில் இருந்தே நீச்சல் என்றால் கொள்ளை பிரியம்.
    • கடந்த 12 மாதங்கள் நீச்சல் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

    ஆஸ்திரேலியாவின் பிரபல நீச்சல் வீராங்கனை அரியானே டிட்மஸ் தனது 25-வது வயதிலேயே நீச்சல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். அரியானே டிட்மஸ் 400 மீட்டர் பிரீஸ்டைலில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் பிரீஸ்டைலில் கடும் போட்டிக்கிடையே அமெரிக்காவின் கேட்டி லெடெக்கி, கனடாவின் சம்மர் மெக்இன்தோஷ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மகுடம் சூடினார்.

    ஒலிம்பிக்கில் மட்டும் இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளார். அத்துடன் உலக சாம்பியன்ஷிப்பில் 9 பதக்கம் என சர்வதேச போட்டியில் மொத்தம் 33 பதக்கங்களை அறுவடை செய்துள்ளார். 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் அவரது பதக்க வேட்டை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நீச்சலுக்கு முழுக்கு போட்டு விட்டார்.

    அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    'நீச்சல் எனக்கு எப்போதும் பிடிக்கும். சிறு வயதில் இருந்தே நீச்சல் என்றால் கொள்ளை பிரியம். ஆனால் இந்த விளையாட்டில் இருந்து ஒதுங்கி, அதை விட வாழ்க்கையில் சில விஷயங்கள் எனக்கு முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளேன். கடந்த 12 மாதங்கள் நீச்சல் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் அது தான் எனது நோக்கமாக இருந்தது. முன்பே இது தெரிந்திருந்தால், எனது கடைசி பந்தயத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக ரசித்து அனுபவித்து இருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    டிட்மசுக்கு 2023-ம் ஆண்டில் கர்ப்பப்பையில் இரண்டு நீர்கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனாலும் துரிதமாக நீச்சல் களத்திற்கு திரும்பி ஒலிம்பிக்கில் சாதித்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
    • 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது.

    கடந்தாண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

    2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது. கடைசியாக 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (ஆண்கள்,பெண்கள்) 6 அணிகள் பங்கேற்கும் என்று இன்று போட்டி அமைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் வீதம் 90 வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் அனுமதி வழங்கப்படும். பெண்கள் பிரிவிலும் இதே நிலைதான் செயல்படுத்தப்படும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி) இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாகும். 94 நாடுகள் அசோசியேட் உறுப்பினர்கள் ஆகும். தகுதி சுற்று மூலம் 6 அணிகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.
    • ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார்.

    2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தற்போது உலக தடகள போட்டியிலும், தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார். ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார். செக் குடியரசை சேர்ந்த ஜான் ஜெலன்சி, நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் தார்கில்சென் ஆகியோர் ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இருந்தனர்.

    ஜெலன்சி 1992, 1996, 2000 ஒலிம்பிக்கிலும், 1993, 1995, 2001 உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், தார்கில்சென் 2008 ஒலிம்பிக்கிலும், 2009 உலக தடகளத்திலும் தங்கம் வென்று இருந்தனர்.

    • ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம்.
    • பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு மிக சிறப்பாக நடத்தி வருகிறது.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மேடையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, "இந்த தொடக்க விழாவில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் பிரதமரின் முக்கிய திட்டமாகும். தற்போது சர்வதேச அளவில் இந்தியா பதக்கங்களை பெற்று முன்னிலை பெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம் ஆகும். இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்து வருகிறது.

    2030, 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்காக பிரதமர் மோடி பல முயற்சிகளை செய்து வருகிறார். விஸ்வநாதன் ஆன்ந்த், பிரக்ஞானந்தா ஆகிய செஸ் ஜாம்பவான்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர். பெரிய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் மிக சிறப்பாக தமிழ்நாடு அந்த போட்டிகளை நடத்தி இருக்கின்றது. ஹாக்கி விளையாட்டு போட்டி, ஸ்குவாஸ் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகிய போட்டிகளை மிகவும் திறமையாக நடத்தி இருக்கிறது.

    கேலோ இந்தியா என்பது பதக்கங்களை வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல, உங்களின் பெருமையை, திறமையை மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பை தருகின்ற ஒரு விளையாட்டு போட்டி" எனக் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கேலோ இந்தியாவின் கீழ் செலவழிக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்கு உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

    • டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.
    • பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் முன்னணி தடகள வீரர் நீரஜ் சோப்ரா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், உலக சாம்பியன் போட்டியில் சாதனைப் படைத்துள்ளார்.

    பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்காக ஐரோப்பியாவில் தனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுடன் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டு இருந்தார். இந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் நீரஜ் சோப்ரா வெளிநாட்டில் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

    இந்த நிலையில் மே 29-ந்தேதியில் இருந்து ஜூலை 28-ந்தேதி வரை ஐரோப்பியாவில் உள்ள பல்வேறு இடங்களில் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக TOPS என்ற திட்டம் இந்தியாவில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீர்ஜ் சோப்ராவின் பயிற்சிக்காக தொகை வழங்கப்படும்.

    நீரஜ் சோப்ராவை போன்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற சில வீரர்கள் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்காக உதவிகள் கேட்டுள்ளது.

    • புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.
    • காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார்.

    பாரீஸ்:

    உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பிரெஞ்சு ஓபனில் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் 5 செட் வரை போராடி வெற்றி பெற்றார்.

    முட்டியில் வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது. இதனால் பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்பாக வெளியேறியதுடன், வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.

    இந்த நிலையில் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கு 3 முதல் 6 வாரங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தவற விடும் ஜோகோவிச், அதே மாத கடைசியில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
    • அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் பிரெஞ்சு ஓபனை 4 வது முறையாக வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக் 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக தொடருகிறார். அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.

    பிரெஞ்சு ஓபனில் இறுதிசுற்று வரை முன்னேறி ஆச்சரியப்படுத்திய இத்தாலி வீராங்கனை பாவ்லினி 15 ல் இருந்து 7 வது இடத்துக்கு வந்துள்ளார். அவர் டாப் 10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

    ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இத்தாலி இளம் வீரர் ஜானிக் சினெர் ஒரு இடம் அதிகரித்து முதல்முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்கும் முதல் இத்தாலி நாட்டவர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை முதலிடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் காயத்தால் 4 வது சுற்றுடன் வெளியேறியதால் நம்பர் ஒன் இடத்தை பறிகொடுத்ததுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 428 வாரங்கள் முதலிடத்தில் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதே சமயம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முதல்முறையாக சொந்தமாக்கிய ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய வீரர் சுமித் நாகல் கிடுகிடுவென 18 இடங்கள் எகிறி 713 புள்ளிகளுடன் 77 வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் நாகல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார்.

    ஒற்றையர் தரவரிசையில் முதல் 56 இடங்களை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் தரவரிசையில் முன்னணியில் இருந்தாலும் ஒரு நாட்டில் இருந்து அதிகபட்சமாக 4 பேருக்கு மேல் ஒலிம்பிக்குக்கு செல்ல அனுமதி கிடையாது.

    உதாரணமாக ஆண்கள் பிரிவில் முதல் 56 இடத்திற்குள் 7 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மட்டுமே ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும். அடுத்த இடங்கள் தரவரிசையில் பின்தங்கி உள்ள வேறு நாட்டு வீரர்களுக்கும் செல்லும். அந்த வகையில் நாகல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறும் நிலையில் இருக்கிறார். 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குக்கு பிறகு டென்னிசில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் முதல் இந்தியர் என்ற சிறப்பை பெறுகிறார்.

    • தமிழக துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • இவர் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.

    பிருத்வி ராஜ் தொண்டைமான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவரது தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவர் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2024 ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெறும் நாடானா பாரீஸில் ஏற்றப்பட்டது.
    • ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில் 2024 ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெறும் நாடானா பாரீஸில் ஏற்றப்பட்டது. இதனை ஃபிஃபாவின் உலகளாவிய கால்பந்து மேம்பாட்டுத் தலைவர் அர்சென் வெங்கர் ஏற்றி வைத்தார். இதன்மூலம் 30 நாட்கள் கவுண்ட் டவுன் தொடங்கி உள்ளது.

    ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலைவிழாக்கள் நடத்தி இச்சுடர் ஏற்றப்படும். அப்போது நீளமான உடையணிந்த வீராங்கனை ஒருவர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நிலத்தில் மண்டியிட்டு சூரிய ஒளியால் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவார்.

     

    இது உலக நாடுகளை சுற்றி வந்து இறுதியில் போட்டி நடைபெறும் இடத்தை வந்து அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×