என் மலர்
நீங்கள் தேடியது "Mirabai Chanu"
- கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்.
- அதிக எடைப் பிரிவுக்குத் தயாராக வேண்டும், அது அவருக்குப் பழக்கமில்லை.
கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள 2028 ஒலிம்பிக்கில், புதிய எடைப் பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டியதாகி உள்ளது.
சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு (IWF) புதிய ஒலிம்பிக் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் மீராபாயின் 49 கிலோ எடைப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. பளுதூக்குதல் போட்டிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்ட போதிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ பிரிவில் வெள்ளி வென்ற சானு, கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தார். இப்போது, LA 2028 இல் பங்கேற்க விரும்பினால், அவர் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க வேண்டும்.
31 வயதான மீராபாய் சானு முன்னேறுவதற்கு முன்னால் இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று, அதிக எடைப் பிரிவுக்குத் தயாராக வேண்டும், அது அவருக்குப் பழக்கமில்லை. மேலும், 53 கிலோ பிரிவில் தொடர்ந்து 200 கிலோ அல்லது அதற்கு மேல் தூக்குவது முக்கியமானதாக இருக்கும். 2024 ஒலிம்பிக்கில், அவர் ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் முழுவதும் 199 கிலோவைத் தூக்கினார்.
மேலும், கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். மேலும், மீராபாய் தோள்பட்டை மற்றும் மணிக்கட்டு காயங்களை எதிர்கொண்டதால், அவரது உடற்தகுதி சமீபத்தில் ஒரு பிரச்சனையாக உள்ளது.
- மீராபாய் சானு 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டியில் பங்கேற்றார்.
- மீராபாய் சானு 199 புள்ளிகளுடன் 4 ஆம் இடம் பிடித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார்.
அவர், ஸ்ட்ரச் பிரிவில் 88 புள்ளி கிளீன் அண்ட் ஜர்க் பிரிவில் 111 புள்ளிகள் என மொத்தம் 199 புள்ளிகள் பிடித்து 4ம் இடம் பிடித்தார். 114 கிலோவை தூக்கும் இறுதி முயற்சியில் மீராபாய் சானு தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மீராபாய் சானு 199 புள்ளிகளுடன் 4 ஆம் இடம் பிடித்தார்.
இதே சுற்றில் பங்கேற்ற தாய்லாந்து வீராங்கனை மீராபாய் சானுவை விட ஒரு புள்ளி (200 புள்ளிகள்) அதிகமாக பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ஒருபுள்ளி வித்தியாசத்தில் மீராபாய் சானு பதக்க வாய்ப்பை இழந்தார்.
- காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இன்று 3 பதக்கங்களை வென்றுள்ளது.
- பளு தூக்குதலில் மீராபாய் சானு தங்கம் வென்றார்.
புதுடெல்லி:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.
பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது பதக்கமாகும்.
இந்நிலையில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல், விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.
- காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.
இந்நிலையில், பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது (2014 - வெள்ளி, 2018 - தங்கம், 2022 - தங்கம்) பதக்கமாகும்.
இதன்மூலம் காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.
ஆனாலும் கிளன் அண்ட் ஜெர்க் பிரிவில் தனிப்பட்ட முறையில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தது மீராபாய் சானுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. இந்த பிரிவில் அவர் 113 கிலோ தூக்கினார். முன்பு 111 கிலோ வரை எடை தூக்கியதே சிறந்ததாக இருந்தது. மணிப்பூரைச் சேர்ந்த 24 வயதான மீராபாய் ஒரு முறை 115 கிலோ எடையை தூக்குவதற்கு முயற்சித்தார். அது வெற்றிகரமாக அமைந்திருந்தால் அவருக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்திருக்கும்.
ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் வீரர்கள், ஏ, பி என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். இதில் பி பிரிவில் அங்கம் வகித்த இளையோர் ஒலிம்பிக் சாம்பியனான இந்திய வீரர் ஜெரிமி லால்ரின்னுங்கா மொத்தம் 297 கிலோ (ஸ்னாட்ச் 134 கிலோ மற்றும் கிளன் அண்ட் ஜெர்க் 163 கிலோ) தூக்கி பிரமாதப்படுத்தினார். ஜெரிமி பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்தார். பாகிஸ்தானின் தல்ஹா தலிப் 304 கிலோவுடன் முதலிடம் பெற்றார். இன்று ‘ஏ’ பிரிவில் உள்ள வீரர்களுக்கு போட்டி நடக்கும். அதன் பிறகே பதக்கம் வெல்வது யார்? என்பது தெரிய வரும்.
மிசோரத்தை சேர்ந்த 16 வயதான ஜெரிமி தனது அசத்தலான செயல்பாட்டின் மூலம் ஜூனியர் மட்டத்தில் 15 சாதனைகளை நிகழ்த்தினார். அதாவது உலக இளையோர், ஆசிய இளையோர், தேசிய இளையோர், தேசிய ஜூனியர், தேசிய சீனியர் ஆகிய பிரிவில் தலா 3 சாதனைகள் வீதம் படைத்தார். இதில் குறிப்பிட்டு ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் ஸ்னாட்ச் பிரிவில் இளையோர் உலக சாதனை 131 கிலோ தூக்கியது ஆகும். அதுவும் அவரது சாதனை தான். அதை தற்போது 134 கிலோவாக மாற்றி அமைத்துள்ளார்.
முன்னதாக பெண்களுக்கான 45 கிலோ பிரிவில் ஜிலி தலபெஹெரா 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தி (மொத்தம் 167 கிலோ) இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார். ஜிலி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ஆனால் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் 45 கிலோ பிரிவு இடம் பெறவில்லை. இதனால் இந்த பிரிவு பந்தயம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. #AsianWeightliftingChampionships
#MirabaiChanu

இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டியில் 48 கிலோ உடல் எடைப் பிரிவில் மொத்தம் 194 கிலோ எடை தூக்கி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
மணிப்பூரை சேர்ந்த 23 வயதான மீராபாய் சானு, இந்தோனேஷியாவில் வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய பளுதூக்குதல் அணியில் இடம் பிடித்து இருந்தார். இந்த போட்டிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது முதுகுவலி பிரச்சினை ஏற்பட்டது. இந்த காயத்துக்காக அவர் பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றாலும், காயத்தின் தன்மை குறித்து துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் மீராபாய் சானு இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘காயத்தில் இருந்து மீண்டு வரவும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தயாராகவும் தனக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய பளுதூக்குதல் அணியின் தலைமை பயிற்சியாளர் விஜய் சர்மாவும், மீராபாய் சானுவின் காயம் குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு அறிக்கை அளித்துள்ளார்.
அதில் முக்கியமான ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு முன்பாக காயத்தில் இருந்து மீண்டு வர மீராபாய் சானுவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இது குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளன பொதுச்செயலாளர் செக்தேவ் யாதவிடம் கேட்ட போது, ‘ஆசிய விளையாட்டு போட்டியில் மீராபாய் கலந்து கொள்ளப்போவதில்லை என்பது உண்மை தான். இது குறித்து மத்திய விளையாட்டு துறைக்கு அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்படும்’ என்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மீராபாய் சானு போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி துர்க்மெனிஸ்தானில் வருகிற நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. #WeightLifter #MirabaiChanu #tamilnews






