என் மலர்
நீங்கள் தேடியது "தங்கம்"
- 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
- 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், நமண சமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை தனிப்படையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து தங்கம் மற்றும் வெளளிக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் திருமயம், நமணசமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில், அறந்தாங்கி எல்என்புரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தேவா (வயது58), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கீழத்தெரு மீனாட்சி சுந்தரம் மகன் ஹரிஹரன் (44), ஆவுடையார்கோவில் முண்டகவயல் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் வெங்கடேஷ் (26), அறந்தாங்கி பூவைமாநகா் அலஞ்சரக்காடு கணபதி மகன் சொக்கலிங்கம் (54), கீரமங்கலம் வேப்பங்குடி மேற்கு செட்டித் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் தங்கபாண்டியன் (46) ஆகிய 5 பேரையும் தனிப்படையினா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டி, 5.750 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.1,500, 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா். குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே நேரில் அழைத்துப் பாராட்டினார்.
- தங்கம் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,560-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும் பார் வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. கடந்த வாரம் 16-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.37,824-க்கு விற்றது.
மறுநாள் 17-ந்தேதி அது 38 ஆயிரத்தை தாண்டியது. 18-ந்தேதி மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. 19-ந்தேதி மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டி ரூ.38,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
20-ந்தேதி ரூ.38,344-க்கும், 21-ந்தேதி ரூ.38,536-க்கும் விற்கப்பட்டது. நேற்றும் அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.
இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38,648-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,817-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,831-க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.66.10-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.66,100-க்கு விற்பனையாகிறது.
பெண்கள் தங்க நகைகள் அணிவதற்குப்பின்னால் பல அறிவியல் மற்றும் உடலியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளன. பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது. தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே காணலாம்:
உடல் வெப்பத்தை சீராக்குகிறது:
மனித உடலின் வெப்ப நிலை, சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும். இதனால் சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. தங்க நகை அணியும்போது இயற்கையாகவே உடலின் வெப்பத்தை சீராக்குகிறது. உதாரணத்துக்கு, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும். தங்க நகை அணிவதன் மூலம் வெப்ப நிலையை கட்டுக்குள் வைக்க முடியும்.
காயங்களுக்கான சிகிச்சை:
இயற்கையாகவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்படுகிறது. பழங்காலத்தில் உடலில் காயங்களும், புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள். இதன் மூலம் காயங்களும் குணமாகும், அவற்றால் ஏற்படும் நோய் தொற்றும் தடுக்கப்படும்.
வாதத்தை தடுக்கும் மருந்து:
வாத நோய் ஏற்படும்போது, விரல்களையும் கால்களையும் அசைப்பது சிரமமாக இருக்கும். தங்க நகை அணிவதன் மூலம் உடம்பில் நேர்மறை
சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல், வாதத்தால் ஏற்படும் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தும். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதனை பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்கள்.
மனக்கவலையை குறைக்கிறது:
பெண்கள் அதிக அளவில் மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். பதற்றமும், பயமும் ஏற்பட்டு நீண்ட கால கவலையாக உருவாகிறது. தங்க நகைகளை அணிவதன் மூலம், அவர்கள் உடலில் ‘நேர்மறை சக்தி’ பரவுகிறது. இதனால் உடலில் அமைதியான நிலை ஏற்பட்டு ரத்த நாளங்களை சீராக்குகிறது.சுவாசக் காற்றை உடல் உறுப்புகளுக்கு சரி சமமாக அனுப்பி நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது.
சருமத்தின் பராமரிப்பு:
சருமம் வயதாவதை தடுக்கும் எதிர்ப்பு சக்தியாக தங்கம் செயல்படுகிறது. பல அழகுசாதனப் பொருட்களிலும், சரும பராமரிப்புப் பொருட்களிலும் தங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.
மருத்துவ பயன்பாடு:
புற்றுநோயை கண்டுபிடிக்கவும் தங்கம் உதவுகிறது. மது போன்ற உடலுக்கு தீங்கு தரும் பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுக்க தங்கம் பயன்
படுத்தப்படுகிறது. தங்க நகை அணிவதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகி, நரம்புகள் வலுவாகிறது. உதாரணத்திற்கு காதில் உள்ள நரம்பு கண்களுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் காதில் தங்க நகை அணிவதால் கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.
அதுபோல, தங்க மூக்குத்தி அணிவதன் மூலம் குறிப்பிட்ட நரம்பு வலுவாகி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் வயிற்றில் தங்க ஒட்டியானம் அணிவதால் வயிற்றுப் பகுதியில் நரம்புகள் வலுவாகி குழந்தை நலமாக பிறப்பதற்கு உதவுகிறது.
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38 ஆயிரத்து 120-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.40 சரிந்து ரூ.4 ஆயிரத்து 765 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.66 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. கடந்த 23-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,696-க்கு விற்கப்பட்டது.
24-ந்தேதி அது ரூ. 38,680 ஆக குறைந்தது. மறுநாள் ரூ.38,440 ஆக குறைந்தது. மே 26-ந்தேதி ரூ.38,120 ஆக குறைந்தது.
அதன் பிறகு கடந்த 27-ந்தேதி சற்று உயர்ந்து ஒரு பவுன் ரூ.38,200-க்கு விற்றது. 28 மற்றும் 29-ந்தேதிகளில் தொடர்ந்து அதே விலையே நீடித்தது.
கடந்த திங்கட்கிழமை விலை மேலும் உயர்ந்து ரூ.38,280-க்கு விற்பனையானது. நேற்று ரூ.38,200 ஆக குறைந்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் தங்கம் நேற்று ரூ.4,775-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த வாரம், இந்த வார தொடக்கத்திலும் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கம் ஒரு பவுன் ரூ.38,200 என்ற விலையிலேயே தொடர்ந்து விற்பனையானது. கடந்த 30-ந்தேதி (திங்கட்கிழமை) அது ரூ.38,280 ஆக உயர்ந்தது. அதன்பிறகு 31-ந்தேதி மீண்டும் ரூ.38,200 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.37,920 ஆக குறைந்தது.
அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பவுன் விலை ரூ.38,080 ஆக உயர்ந்தது. இன்று மேலும் உயர்வடைந்து ரூ.38,400 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் நேற்று ரூ.4,760-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4,810-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பவுன் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 480-க்கு விற்றது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38 ஆயிரத்து 200-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4 ஆயிரத்து 775 ஆக உள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1000 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கிறது.