search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
    X

    வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

    • முன்பக்க கதவு உடைக்கப்பட்டு தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
    • அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி, அதனடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்மகன் பிரகாஷ்.

    இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மதுமிதா பிரசவத்துக்காக நாகப்பட்டினத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளதால் பிரகாஷின் தந்தை ராமகிருஷ்ணன் அவ்வப்போது வந்து வீட்டை பார்த்து சென்று வந்துள்ளார்.

    கடைசியாக நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் பின்னர் வீட்டை பூட்டி சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அவர் வந்தபோது வீட்டின் கிரில் கதவு மற்றும் முன்பக்க கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பூஜையறை உடைக்கப்பட்டு உள்ளே மர பீரோவில் வைத்திருந்த 54 சவரன் தங்க நகைகள், 1 ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ 21ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியன கொள்ளையடிக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ராமகிரு ஷ்ணன் குத்தாலம் காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார்.

    உடனடியாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நிஷா, டி.ஸ்.பி வசந்தராஜ் மற்றும் குத்தாலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, அதன் அடிப்ப டையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ள அவ்வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

    Next Story
    ×