search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "French Open Tennis"

    • பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல.

    பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார். 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோகோவிச் தனது வெற்றி குறித்து பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "23-வது சாம்பியன் பட்டத்தை வென்றது ஒரு நம்பமுடியாத உணர்வு. பல நம்பமுடியாத சாதனைகளுடன் இங்கு நிற்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

    எனது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எனக்கு கிடைத்திருப்பது தற்செயலானது அல்ல. ஏனென்றால், எனது வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது எனக்கு கடினமான ஒன்றாக இருந்தது. நான் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். எனது வெற்றி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • செர்பியா மக்களின் சிறப்பான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
    • இளைஞர்களுக்கு நோவக் ஜோகோவிச் ஒரு எழுச்சியூட்டும் சின்னமாக உள்ளார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரெஞ்ச் ஓபனில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வென்றதற்காக, டென்னிஸ் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற நோவக் ஜோகோவிக்கிற்கு வாழ்த்துக்கள்.

    சில நாட்களுக்கு முன்பு நான் மறக்க முடியாத நேரத்தை செலவழித்த செர்பியா மக்களின் சிறப்பான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

    செர்பியா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு நோவக் ஜோகோவிச் ஒரு எழுச்சியூட்டும் சின்னமாக உள்ளார். அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
    • 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.

    3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் இம்முறை பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஜோகோவிச்சின் வெற்றிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடால் கூறியதாவது:-

    இந்த அற்புதமான சாதனைக்கு ஜோகோவிச்சுக்கு பல வாழ்த்துகள்.

    23 என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்க முடியாத ஒரு எண், அதை நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதை உங்கள் குடும்பம் மற்றும் குழுவுடன் கொண்டாடுங்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.
    • ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச்.

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) நான்காம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.

    ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 டென்னிஸ் போட்டிகள் கிராண்ட் சிலாம் அந்தஸ்து பெற்றவையாகும். ரபேல் நடாலும் (ஸ்பெயின்) ஜோகோவிச்சும் இணைந்து அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீரர்களாக இருக்கிறார்கள். இருவரும் தலா 22 பட்டத்தை பெற்று உள்ளனர்.

    இன்றைய பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 23-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

    சாம்ராசின் 14 கிராண்ட்சிலாம் சாதனைனையை பெடரர் முறியடித்தார். பெடரரின் 20 கிராண்ட்சிலாம் சாதனையை ரபெல் நடால் முறியடித்தார். நடாலின் 22 கிராண்ட்சிலாம் சாதனையை ஜோகோவிச்இன்று முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றார். காயம் காரணமாக நடால் இந்த போட்டியில் ஆடவில்லை.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் இருந்தார்.

    இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார்.

    மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.

    3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளார்.

    • காலிறுதிச்சுற்றில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரேவை எதிர்கொண்டார்.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் இறுதியில், 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரூட், ரூனேவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரெவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் சுவேரேவை வீழ்த்தி ரூட் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • ஆண்களுக்கான அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாயின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் அல்காரசுடன் மோதினார்.
    • இதில் ஜோகோவிச் அல்காரசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். சுதாரித்து கொண்ட கார்லோஸ் அல்காரஸ் 2வது செட்டை போராடி 7-5 என கைப்பற்றினார்.

    இதையடுத்து, மூன்றாவது மற்றும் நான்காவது செட்டை ஜோகோவிச் 6-1, 6-1 என கைப்பற்றினார். இதன்மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நடைபெற்றது.
    • நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் இறுதியில், 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரூட், ரூனேவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று இன்று நடைபெற்றது.
    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் முச்சோவா.

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் அரினா சபலெங்கா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பாவ்லி சென்கோவாவை தோற்கடித்து அரை இறுதியில் கால் பதித்தார்.

    இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், சபலெங்கா, கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

    இதில், 7-6, 6-7, 7-5 என்று 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று சபலெங்காவை வீழ்த்தி முச்சோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் முச்சோவா.

    மற்றொரு ஆட்டத்தில், பிரேசில் வீராங்கனை பீட்ரில் ஹாடட் மையாவை எதிர்கொண்ட போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேதான் மைதானத்திற்குள் வந்ததாக தெரிவித்தார்.
    பாரிஸ்:

    பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், குரோஷிய வீரர் மரின் சிலிச் மோதினர்.

    இந்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து தனது கழுத்தை, டென்னிஸ் வலையில் கட்டிக்கொண்டார். அவரது ஆடையில் ‘இன்னும் 1028 நாட்கள் மட்டுமே இருக்கிறது’ என ஐநா குறிப்பிட்ட காலநிலை குறித்த எச்சரிக்கை வாசகம் அதில் எழுதியிருந்தது.

    இதையடுத்து அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்து சென்றனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேதான் மைதானத்திற்குள் வந்ததாக தெரிவித்தார். 
    கடந்த பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிகளில் தோல்வியடைந்த நடால்-ஸ்வெரேவ் இந்த முறை அரை இறுதியில் மோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒன்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.15 மணிக்கு நடக்கும் அரை இறுதி போட்டியில் 5-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), 3-ம் நிலை வீரர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதுகிறார்கள்.

    21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 13 முறை கைப்பற்றியுள்ளார். அவர் 14-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.

    ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் தோற்றார். இந்த முறை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் உள்ளார்.

    ஆனால் களிமண் தரையில் சிறப்பாக விளையாடும் நடாலுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியதிருக்கும். இதனால் ஸ்வெரேவ் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியம்.

    கடந்த பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிகளில் தோல்வியடைந்த நடால்-ஸ்வெரேவ் இந்த முறை அரை இறுதியில் மோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரவு 9 மணிக்கு நடக்கும் மற்றொரு அரை இறுதியில் 8-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே)-20-ம் நிலை வீரர் மரின் சிலிச் (குரேஷியா) மோது கிறார்கள். இவர்கள் இருவரும் பிரெஞ்ச் ஓபனில் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய சிலிச் முதல் முறையாக பிரெஞ்சு ஒபனில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.
    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ருப்லெவ்-இருபதாம் நிலை வீரரான சிலிச் (குரோஷியா) மோதினார்கள்.

    மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிலிச் 5-7 , 6-3, 6-4, 3-6, 7-6 (10-2) என்ற செட் கணக்கில் கடும் போராட் டத்துக்கு பிறகு வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் ஏற்கனவே கால்இறுதியில் 2-ம் நிலை வீரரான மெட்வதேவை வீழ்த்தி இருந்தார்.

    2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய சிலிச் முதல் முறையாக பிரெஞ்சு ஒபனில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

    நள்ளிரவில் நடந்த கால்இறுதியில் 8-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) 6-1, 4-6, 7-6 (7-2) 6-3 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனேயை (டென்மார்க்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் சிலிச்-கேஸ்பர் ரூட், ரபெல் நடால் (ஸ்பெயின்)-அலெக்ஸ்சாண்டர் கவரேவ் (ஜெர்மனி) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. ஒரு அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து)-கசட்கினா மோதுகிறார்கள்.

    மற்றொரு அரை இறுதியில் கோகோ கவூப் (அமெரிக்கா)-மார்ட்டினா டிரெவிசியன் (இத்தாலி) மோதுகிறார்கள்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மிடில்கூப் (நெதர்லாந்து) ஜோடி இன்று நடைபெறும் அரைஇறுதியில் ரோஜர் (நெதர்லாந்து),-மார்சிலோ (சால்வடார்)ஜோடியை எதிர் கொள்கிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் 34-ம் நிலை வீராங்கனை அலிஸ் கார்னெட் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 34-ம் நிலை வீராங்கனை அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்)-13-ம் நிலை வீராங்கனை எலெனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா) மோதினர். இதில் கார்னெட் 6-0, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி அடைந்த ஒஸ்டா பென்கோ, 2017-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கார்னெட் 3-வது சுற்றில் சீனாவின் கின்வென் ஜெங்க்யுடன் மோதுகிறார். இன்று ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் 3-ம் சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்களான ஜோகோவிச் (செர்பியா), நடால் (ஸ்பெயின்), ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் களம் காணுகிறார்கள்.

    ×