search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sharath Kamal"

    • டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றார்
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 21 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

    இதன்மூலம் இந்தியா 21 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி, மலேஷிய ஜோடியை எதிர் கொண்டது.
    • ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்றைய போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்தனர்.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி சரத் கமல், ஸ்ரீஜா அகுலா, மலேசிய ஜோடியான சூங் ஜாவன் மற்றும் லைன் கரேன் ஆகியோரை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய கலப்பு ஜோடி 11-4, 9-11, 11-5, 11-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

    முன்னதாக டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

    2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் நம்பிக்கை தெரிவித்தார். #SharathKamal #Olympics
    சென்னை:

    இந்தோனேஷியாவில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் சரத் கமல், ஹர்மீத் தேசாய், அமல்ராஜ், சத்யன் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியும், கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல்-மனிகா பத்ரா ஆகியோரை கொண்ட இந்திய ஜோடியும் வெண்கலப்பதக்கம் வென்றது. 1958-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்தியா பதக்கம் வென்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார், வேளச்சேரி நீச்சல் வளாக அதிகாரி கந்தசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பதக்கம் வென்று சாதனை படைத்த 36 வயதான சரத் கமல் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் ‘டாப்-10’ இடங்களில் உள்ள 7 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நமது ஆண்கள் அணி சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் என்னுடன் ஜோடி சேர்ந்த மனிகா பத்ராவும் அருமையாக விளையாடினார்.

    சவால் நிறைந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் டோக்கியோவில் (ஜப்பான்) 2020-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. என்னுடைய இந்த வெற்றியில் எனது பயிற்சியாளர்கள், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் எனது குடும்பத்தினரின் பங்களிப்பு முக்கியமானதாகும். எனது பதக்கத்தை பயிற்சியாளர்கள் இருவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

    2004-ம் ஆண்டு முதல் நான் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று வருகிறேன். இதே உத்வேகமும், உடல் தகுதியும் நீடித்தால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை கூட என்னால் விளையாட முடியும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காக கடினமாக தயாராகுவதே எனது அடுத்த இலக்காகும்

    இவ்வாறு சரத் கமல் தெரிவித்தார். 
    ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியைவை சேர்ந்த சரத்கமல், சத்தியன், மனிகா பத்ரா தோல்வி அடைந்தனர். #asiangames #tabletennis #sharathkamal
    ஜகார்தா:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    இதில் இந்திய வீரர் சரத்கமல் சீனதைபேயின் சியுயாக் சுவாங்கை சந்தித்தார். முதல் செட்டை சரத்கமல் 7-11 என்ற செட் கணக்கில் இழந்தார்.

    2-வது செட்டை அவர் 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3-வது செட்டை (10-12)பறிகொடுத்த சரத்கமல் 4-வது செட்டில் கடுமையாக போராடினார். இதில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை எடுத்தனர். முடிவில் அந்த செட்டை சரத்கமல் 16-14 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் சரத்கமல் 9-11 என்ற கணக்கில் பறிகொடுத்தார்.

    இதனால் 3-2 என்ற கணக்கில் சீனதைபே வீரர் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சத்தியன், ஜப்பாக் வீரர் மாட்சுடை ராவுடன் தோல்வியடைந்தார்.



    இதேபோல் பெண்களுக்கான ஒற்றை பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, சீனாவின் மன்யூவுடன் தோல்வியடைந்தார். #asiangames #tabletennis #sharathkamal
    ×