என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "condom"

    • இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.
    • வழக்கமாக ஒலிம்பிக் கிராமத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை தட்டுப்பாடு என்ற புகார்கள் எழும்.

    மிலான்:

    இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அங்கு வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக உயர்தர அறைகளை தவிர்த்து பல்வேறு வசதிகள் இலவசமாக வழங்கப்படும். இதில் ஆணுறைகளும் அடங்கும்.

    வழக்கமாக ஒலிம்பிக் கிராமத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை தட்டுப்பாடு என்ற புகார்கள் எழும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுபாடு சற்று வித்தியாசமானது. மிலானில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த 3 நாட் களில் அனைத்து ஆணுறைகளும் தீர்ந்துவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. உலகம் முழுவதும் 3 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டதை தொடர்ந்து இலவசமாக 10 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டு இருந்ததாக கூறப்படு கிறது. ஆனாலும் அவை அனைத்தும் அங்கு தீர்ந்துவிட்டது.

    1988-ம் ஆண்டு உலகம் முழுவதும் எச்.ஐ.வி. தொற்று பரவல் அதிகரித் ததை தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலவச மாக ஆணுறைகள் கொடுக்கும் மரபு உருவானது. கடந்த 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வீரர்களுக்கு 3 லட்சம் ஆணுறைகள் கொடுக் கப்பட்டது. 2026-ம் ஆண்டு அதிகபட்சமாக 4% லட்சம் ஆணுறைகள் வழங் கப்பட்டன. இதற்கு நேர்மாறாக மிலானில் குறைந்த அளவில் அதாவது வெறும் 10 ஆயிரம்தான் வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஆணுறைகள் தட்டுப் பாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறுகையில், "ஒலிம்பிக் கிராமத்தில் ஒலிம்பிக் சாசனத்தின் விதி 62-ன் படி, கண்டிப்பாக ஆணுறை வழங்கப்பட வேண்டும். எதிர்பார்த்ததை விடத் தேவை அதிகமாக உள்ளதால், கூடுதல் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் முடியும் வரை தட்டுப்பாடு வராமல் தொடர்ந்து இருப்பு வைக்கப்படும்" என்றார்.

    • வரும் 22 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
    • கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 10,500 வீரர்களுக்காக சுமார் 3 லட்சம் காண்டம்கள் வழங்கப்பட்டன.

    2026 ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் கேம்ஸ் வில்லேஜில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கின. வரும் 22 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

    இந்த போட்டியில் கலந்துகொள்ளவும், பார்வையிடவும் உலகெங்கிலும் இருந்து பலர் வருகை தந்துள்ளனர்.

    கேம்ஸ் வில்லேஜில் 92 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,900 தடகள வீரர், வீராங்கனைகள் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் வீரர்களுக்காக இலவசமாக வைக்கப்பட்டிருந்த காண்டம்கள் படு வேகமாக காலியாகி உள்ளது போட்டி ஏற்பாட்டாளர்களை மலைப்பில் ஆழ்த்தியுள்ளது.

    முதற்கட்டமாக வீரர்களுக்காக வில்லேஜில் சுமார் 10,000 காண்டம்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த இருப்பு 3 நாட்களில் காலியாகியுள்ளன.

    கடந்த 2024 பாரிஸ் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 10,500 வீரர்களுக்காக சுமார் 3 லட்சம் காண்டம்கள் வழங்கப்பட்டன.

    குளிர்கால ஒலிம்பிக்கில் வீரர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இந்த முறை குறைவாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், வீரர்களின் அதீத தேவை காரணமாக காண்டம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    காண்டம் இருப்பு முழுமையாகத் தீர்ந்துவிட்டதாகவும், புதிய இருப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை என்றும் வீரர் ஒருவர் இத்தாலிய ஊடகதிற்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்துள்ளார்.

    புதிய இருப்பு விரைவில் கொண்டுவரப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

    ஒலிம்பிக் போட்டிகளில் பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கவும், எச்.ஐ.வி போன்ற நோய்த்தொற்றுகளை தடுக்கவும் 1988 சியோல் ஒலிம்பிக்ஸ் முதல், வீரர்களுக்கு இலவசமாக காண்டம்கள் வழங்கும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பல ஆண்டுகளாக ஒலிம்பிக் கமிட்டி வீரர்களுக்கு இலவசமாக காண்டம் வழங்கி வருகிறது.
    • எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலிம்பி கமிட்டி இதை செய்கிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 160 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பல்வேறு நாடுகளிலிருந்து வரும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் நடைபெறும் நாட்களில் உடலுறவு கொள்வார்கள். இதனால் வீரர்களின் பாதுகாப்பு கருதி பல ஆண்டுகளாக ஒலிம்பிக் கமிட்டி இலவசமாக காண்டம் வழங்கி வருகிறது.

    இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர் வீராங்கனைகள் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்பதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அப்போது வீரர்களுக்கு காண்டம் வழங்குவதை ஒலிம்பிக் கமிட்டி நிறுத்தி வைத்தது.

    தற்போது கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்பதால் வீரர் வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகளுக்கு 2,30,000 காண்டம்களை ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது. அதில் 2 லட்சம் ஆணுறைகளும், 20 ஆயிரம் பெண்ணுறைகளும் 10 ஆயிரம் ஓரல் காண்டம்களும் அடங்கும்.

    வீரர்கள் வீராங்கனைகளுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் தங்கள் நாட்டுக்கு சென்று மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் காண்டம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆணுறை பயன்படுத்துவது குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.

    உலக சுகாதார மையம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், ஐரோப்பாவில் கடந்த பத்து ஆண்டு காலக்கட்டத்தில் உடலுறவில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் ஆணுறை பயன்படுத்துவது பெருமளவுக்கு குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.

    அரசாங்கங்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இந்த நிலை பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுக் குறித்து ஐரோப்பியாவை சுற்றியுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    இந்தக் கருத்துக் கணிப்பில் உடலுறவு நாட்டம் கொண்ட ஆண்களிடையே 2014 ஆம் ஆண்டு 70 சதவீதத்தில் இருந்த ஆணுறை பயன்பாடு 2022 ஆம் ஆண்டு 61 சதவீதமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் பெண்கள் உடலுறவின் போது பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது 63 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக குறைந்துள்ளது.

    மூன்றில் ஒரு பங்கு இளம் பருவத்தினர் கடைசியாக உடலுறவு கொண்ட போது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் எதையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.

    இந்த ஆய்வைத் தொடர்ந்து அரசுகள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் பாலியல் தொடர்பான கல்வியில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை மற்றும் ORS கரைசலை பப் நிர்வாகம் அனுப்பியுள்ளது.
    • பப் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் உள்ள பப் ஒன்றில் இருந்து புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை சேர்த்து அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

    புத்தாண்டு கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை மற்றும் ORS கரைசலை பப் நிர்வாகம் அனுப்பியுள்ளது.

    இதனை அடுத்து, பப் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமாரிடம் மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அக்ஷய் ஜெயின், "நாங்கள் பப்கள் மற்றும் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இருப்பினும், இளைஞர்களை கவரும் இத்தகைய மார்க்கெட்டிங் உத்தி புனே நகரத்தின் மரபுகளுக்கு எதிரானது. பப் நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • நேற்று இரவு 1.2 லட்சம் ஆணுறை பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதாக Blinkit CEO பதிவிட்டுள்ளார்.
    • ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும்.

    பிரபல பாடகி சின்மயி எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பதிவிட்ட பதிவிற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

    அந்த எக்ஸ் பதிவில், "நேற்று இரவு 1.2 லட்சம் ஆணுறை பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதாக Blinkit CEO பதிவிட்டுள்ளார். நேற்று இரவில் பிளிங்கிட்டில் மட்டும். 1.2 லட்சம் மற்ற இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சந்தையில் 1 கோடி ஆணுறை பாக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கும். இந்த தலைமுறையில் கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது அதிர்ஷ்டம் ஆகும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    இந்த எக்ஸ் பதிவை சின்மயி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆண்கள் பெண்களுடன் உடலுறவு கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு கன்னிப் பெண்கள் வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    ஆடு, நாய் மற்றும் ஊர்வனவற்றுடன் உடலுறவு கொள்வதற்கு ஆணுறைகளை வாங்கும் வரையில், ஆண்கள் பெண்களுடன் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும். மேலும் உங்கள் சகோதரர்கள் மற்றும் ஆண் நண்பர்களிடம் திருமணம் வரை உடலுறவு கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    கருத்தடை என்றாலே கருத்தடை மாத்திரைகளும் ஆணுறையும் மட்டுமே நமக்கு நினைவில் வரும். ஆனால் கருத்தடை மாத்திரைகளால் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.
    கருத்தடை என்றாலே கருத்தடை மாத்திரைகளும் ஆணுறையும் மட்டுமே நமக்கு நினைவில் வரும். ஆனால் கருத்தடை மாத்திரைகளால் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.

    அதனால் ஆணுறையைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்போர் இந்த விஷயங்களைப் பின்பற்றினால், உங்கள் கவலைக்குத் தீர்வு கிடைக்கும்.

    ஆணுறையைப் பயன்படுத்தாமல், எப்படி கருத்தரிப்பை தள்ளிப் போடுவது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அதற்கு வழிகள் உண்டு. இவை நூறு சதவீதம் பயன்தராது என்றாலும் 90 சதவிதம் கைக்கொடுக்கும்.

    சரியான நாட்களைத் தேர்ந்தெடுத்து உறவு கொள்ளுதல். அதாவது மாதவிலக்கு ஆரம்பிக்கப் போகும் முன் நான்கு நாட்களுக்குள்ளும், மாதவிலக்கு முடிந்து நான்கு நாட்கள் வரையும் எத்தனை முறை வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். இந்த காலகட்டங்களில் கரு பலவீனமுடையதாக இருக்கும். அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

    காப்பர் - டி என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் பொருத்தும் கருவி. மருத்துவரின் உதவியுடன் இதைப் பொருத்திக் கொள்ளலாம். இதுவும் கருத்தரிப்பதைத் தடுக்கும்.

    உடலுறவின் போது, ஆண்கள் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும். உறவு கொள்ளும் போது, விந்தை பெண்ணுடைய உடலுக்குள் செலுத்தாமல், விந்து வெளியேறும் முன், ஆணுறுப்பை வெளியே எடுத்துவிட வேண்டும். இந்த முறைப்படி, 80 சதவீதம் வரை கருத்தரிப்பை தடுக்க முடியும்.

    குழந்தை பெற்ற தம்பதிகளாக இருந்தால், குழந்தை போதும் என்று நினைத்தால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

    இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், ஆணுறையைப் பயன்படுத்தாமலே கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.

    திருமணமான புதிதில் தம்பதிகளின் மத்தியில் இருக்கும் பொதுவான பயம் இந்த கருத்தரிப்பு விஷயம் தான். ஏனெனில் அவர்கள் சிறிது காலம் மகிழ்ச்சியாக வாழ்க்கை அனுபவிக்க வேண்டுமென நினைப்பதுண்டு.
    ×