search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinesh Phogat"

    • பிரிஜ் பூஷனும், அவரது விசுவாசியான சஞ்சய் சிங்கும் இணைந்து நான் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடுக்க எல்லா வழியிலும் முயற்சிக்கிறார்கள்.
    • தவறுக்கு எதிராக குரல் கொடுத்தால் நம் நாட்டில் இதுதான் தண்டனையா?

    இந்திய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் பொறுப்பில் இருந்தும் ஒதுங்கினார்.

    மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். பிரிஜ் பூஷனின் கூட்டாளியான இவருக்கும் சில வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் முன்னணி மல்யுத்த வீராங்கனை 29 வயதான வினேஷ் போகத், தன்னை ஊக்கமருந்து வலையில் சிக்கவைக்க சதி நடப்பதாக பரபரப்பான புகார் கூறியுள்ளார். வினேஷ் போகத், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவர். ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டிலும் சாம்பியன். 50 கிலோ எடைப்பிரிவில் ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்யும் இலக்குடன் அடுத்த வாரம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்க உள்ளார்.

    வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பிரிஜ் பூஷனும், அவரது விசுவாசியான சஞ்சய் சிங்கும் இணைந்து நான் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடுக்க எல்லா வழியிலும் முயற்சிக்கிறார்கள். அணியில் நியமிக்கப்பட்டுள்ள எல்லா பயிற்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்கள். எனவே எனக்குரிய போட்டியின்போது அவர்கள் நான் குடிக்கும் தண்ணீரில் ஏதாவது கலந்து கொடுக்க வாய்ப்புள்ளது. என் மீது ஊக்கமருந்து மோசடி பேர்வழி என்ற முத்திரை குத்துவதற்கு சதிவேலை நடக்கிறது.

    கடந்த ஒரு மாத காலமாக எனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகார அட்டை வழங்கும்படி இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (சாய்) முறையிட்டு வருகிறேன். அங்கீகார அட்டை இல்லாவிட்டால் அவர்களால் என்னுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு வர முடியாது. பல முறை கேட்டும் அவர்களிடம் இருந்து எனக்கு முறையான பதில் வரவில்லை. உதவி செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் இப்படி தான் விளையாடுவதா?

    போட்டிக்கு முன்பாக எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார்கள். தவறுக்கு எதிராக குரல் கொடுத்தால் நம் நாட்டில் இதுதான் தண்டனையா? தேசத்துக்காக விளையாட செல்லும் முன்பு எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    இதற்கிடையே வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டை இந்திய மல்யுத்த சம்மேளனம் மறுத்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத மல்யுத்த சம்மேளன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தனது தனிப்பட்ட பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகார அனுமதி அட்டை கேட்டு கடந்த மார்ச் 18-ந்தேதி வினேஷ் போகத் இ-மெயில் அனுப்பினார். ஆனால் அதற்கு முன்பாகவே (மார்ச் 11) உலக மல்யுத்த சம்மேளனத்திற்கு அனுப்புவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. அவர் தாமதமாக விண்ணப்பித்ததால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏற்கனவே 9 பயிற்சியாளர்கள் அணியினருடன் செல்லும் நிலையில் கூடுதல் பயிற்சியாளர் தேவையா?, வினேஷ் போகத் தனிப்பட்ட பயிற்சியாளர் வேண்டும் என்று நினைத்தால், உலக மல்யுத்த சம்மேளனத்தை அணுகி முயற்சித்து பார்க்கலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்றார்.

    • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார்
    • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்

    இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றம் சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதன் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்.

    இதனையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தினர். எனினும், தேர்தலில் களம் கண்ட பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை ஒப்படைப்பதாகவும், மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்தனர்

    அந்த வரிசையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

    அந்த கடிதத்தில், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைகிறது. ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ விரும்புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாக கூடாது என்பதால், நான் வாங்கிய விருதுகளை திரும்ப கொடுக்கிறேன்," என்று எழுதியிருந்தார்.

    இதனையடுத்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தனது கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை திருப்பி அளித்தார். தனது விருதுகளை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்க முனைந்த அவருக்கு, தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்து வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் அந்த விருதுகளை பிரதமர் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவில் வைத்துவிட்டுத் திரும்பினார். பின்னர் காவல்துறையினர் அதை கைப்பற்றினர்.

    மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தர் சிங் யாதவ் ஆகியோரும் தங்களது விருதுகளை திருப்பி அளித்துள்ளனர்.

    இந்நிலையில், இதை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகத் படத்தை மோடி பார்க்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், என் உயிரை பணயம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்பவர்களை காப்பாற்றுவேன் என்று நரேந்திர மோடி கூறுகிறார் என்று பதிவிட்டுள்ளது.

    • புதிய மல்யுத்த தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் விருதுகளை திருப்பி அளிக்க போவதாக கூறியுள்ளார்.
    • மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சாக்‌ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்தார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்யக்கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த 21-ந் தேதி நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் பெருமளவில் வெற்றி பெற்றனர். அவரது நெருங்கிய கூட்டாளியும், உத்தரபிரதேச மல்யுத்த சங்க துணைத்தலைவருமான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரால் தங்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் கிடைக்கப்போவதில்லை, பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்று மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கினர்.

    மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க அறிவித்தார். மற்றொரு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் இல்லத்திற்கு கடிதத்துடன் அனுப்பினார். வீரேந்திர சிங் யாதவும் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கப்போவதாக அறிவித்தார்.

    புதிய தலைவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் புதிய நிர்வாகிகளை கொண்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. இதன் நிர்வாக பணியை கவனிக்க இடைக்கால கமிட்டி அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்ைத அறிவுறுத்தியது.

    இந்த நிலையில் பஜ்ரங் பூனியா, வீரேந்திர சிங் யாதவ் வரிசையில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மல்யுத்த வீராங்கனை 29 வயதான வினேஷ் போகத்தும் இணைந்துள்ளார். அவர், விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தயான்சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை அரசாங்கத்திடம் திருப்பி அளிக்க இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தை தனது 'எக்ஸ்' தளத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், 'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு இப்போது மங்கி விட்டது. இந்த கனவு அடுத்து வரும் வீராங்கனைகளுக்கு நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புவார். கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருது சுமையாகி விடக்கூடாது என்பதால் அதை திருப்பி அளிக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • வீராங்கனைகள் நீண்ட கால போராட்டம் நடத்தி வந்தனர்.
    • மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்து பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அந்த பதவியில் இருந்து விலகியவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நீண்ட கால போராட்டம் நடத்தி வந்தனர்.

    மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தினர். எனினும், தேர்தலில் களம் கண்ட பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை ஒப்படைப்பதாகவும், மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்து வருகின்றனர்.

     


    அந்த வரிசையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    இது தொடர்பான கடிதத்தில், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைகிறது. ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ விரும்புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாக கூடாது என்பதால், நான் வாங்கிய விருதுகளை திரும்ப கொடுக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தான் வென்ற பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.

    மல்யுத்த வீரர்களின் இந்த அறிவிப்புகளை தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்வதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. எனினும், இது தொடர்பாக தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை என்றும் சஞ்சய் சிங் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டாரா அல்லது மற்றவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா என்பது எனக்கு தெரியாது என சாக்ஷி மாலிக் தெரிவித்து இருந்தார். 

    • இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    • இந்திய ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி இந்த தகுதி தேர்வு போட்டியை நடத்துகிறது.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி இந்த தகுதி தேர்வு போட்டியை நடத்துகிறது.

    இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா (65 கிலோ), உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோருக்கு தகுதி தேர்வு போட்டியில் இருந்து விலக்கு அளிக்க ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இருவரும் ஆசிய விளையாட்டுக்கான இந்திய மல்யுத்த அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக போராடுவது என்பது கடினமான விஷயம்.
    • ஒரு குழுவை உருவாக்கி, அந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றதாக குற்றம்சாட்டினார்

    மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி உள்ள மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என கூறி உள்ளனர்.

    மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீண்ட காலமாக அதிகாரத்தையும் பதவியையும் தவறாக பயன்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நபருக்கு எதிராக போராடுவது என்பது கடினமான விஷயம் என்றார்.

    வினேஷ் போகத் மேலும் கூறியதாவது:-

    நாங்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்குவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு, ஒரு அதிகாரியை சந்தித்தோம். அப்போது, விளையாட்டு வீராங்கனைகள் எப்படி பாலியல் ரீதியாகயும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை எல்லாம் அவரிடம் கூறினோம். நடவடிக்கை எடுக்காத நிலையில், தர்ணாவில் அமர்ந்தோம்.

    மத்திய விளையாட்டுத் துறை மந்திரியுடன் (அனுராக் தாக்கூர்) பேசியபிறகு போராட்டத்தை முடித்துக் கொண்டோம். அப்போது பாலியல் துன்புறுத்தல் பற்றி அவரிடம் அனைத்து விளையாட்டு வீரர்களும் கூறியிருந்தனர். ஆனால் அவரோ ஒரு குழுவை உருவாக்கி, அந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றார். அந்த சமயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர்.
    • கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பொது செயலாளரான பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் 3 மாதங்களுக்கு பின் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    டெல்லியில் கடந்த ஜனவரி 18-ந்தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட, ஒலிம்பிக் உள்பட பல்வேறு பிரிவுகளில் சாதனைகளை படைத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பினர்.

    இந்த சூழலில், டெல்லி போலீசார் உணவு மற்றும் குடிநீர் தர விடாமல் சித்ரவதை செய்கிறார்கள். போராட்டக்காரர்கள் சாலையில் படுத்து உறங்குங்கள் என அவர்கள் கூறினர் என மல்யுத்த வீரர் பூனியா குற்றச்சாட்டு தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

    இந்நிலையில், டெல்லி போலீசார் கூறும்போது, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம். ஒரு சிறுமி உள்பட மொத்தம் 7 வீரர்கள், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை போலீசார் விரைவில் பதிவு செய்வார்கள்.

    பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    இதுபற்றி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளின் வழக்கறிஞர் நரேந்திர ஹூடா கூறும்போது:-

    ஐ.பி.சி.யின் பிரிவு 354, 354 (ஏ), 354 (டி) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் ஒரு எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். மற்றொரு எப்.ஐ.ஆர்.ரின் நகல் எங்களுக்கு வழங்கப்படவில்லை (அது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மட்டுமே வழங்கப்படும்) என்று கூறியுள்ளார்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர். இதன்படி, கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பொது செயலாளரான பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். இதேபோன்று, டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் அதில் பங்கேற்று பேசினார்.

    தொடர்ந்து போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வரும் சூழலில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், நீண்ட காலம் அதிகாரம் மற்றும் பதவியை தவறாக பயன்படுத்தி வரும் நபரை எதிர்த்து நிற்பது என்பது மிக கடினம் என கூறியுள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பு அதிகாரி ஒருவரை முதன்முறையாக சந்தித்து பேசினோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    3 முதல் 4 மாதங்களுக்கு முன், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடும் முன்பு, அதிகாரி ஒருவரை சந்தித்து அவரிடம், வீராங்கனைகள் எப்படி பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுகின்றனர் மற்றும் மனதளவில் சித்ரவதை செய்யப்படுகின்றனர் என்று ஒவ்வொரு விசயம் பற்றியும் கூறினோம். எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம் என அவர் கூறியுள்ளார்.

    • பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக 30 மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்

    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றவர் வினேஷ் போகத். இவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதும், அதன் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை பஜ்ரங் புனியா உட்பட 30 மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 4 மணி நேரம் நடந்த இப்பேராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், தேசிய பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, அதன் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்திய வினேஷ் போகத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    'இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரால் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல் பற்றி குறைந்தது 10-12 மல்யுத்த வீராங்கனைகளை என்னிடம் கூறி உள்ளனர். அவர்களின் பெயர்களை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், பிரதமர், உள்துறை மந்திரியை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் பெயர்களைச் சொல்வேன்' என்றார் வினேஷ் போகத்.

    பின்னர் பேசிய பஜ்ரங் புனியா, ``எங்கள் போராட்டம் அரசாங்கத்துக்கோ அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்துக்கோ எதிரானது அல்ல. இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரானது இது. கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படும்வரை இந்தப் போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

    வீராங்கனைகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என பிரிஜ்பூஷன் சரண் சிங் பதில் அளித்துள்ளார். ``உங்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், 10 ஆண்டுகளாக ஏன் யாருமே இதுபற்றி பேசவில்லை? விதிமுறைகள் வகுக்கப்படும்போதெல்லாம் இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. என் மீதான ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு நிரூபிக்கப்பட்டாலும் நான் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். நான் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டேன். ஆனால் சிபிஐ அல்லது போலீஸ் விசாரணைக்கு தயாராக இருக்கிறேன்" என பிரிஜ்பூஷன் சரண் சிங் தெரிவித்தார்.

    • காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்.
    • ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல்கேரியா பயிற்சி முகாமில் பங்கேற்கிறார்.

    காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பல்கேரியா நாட்டின் பெல்மிகினில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள நிதி உதவி வழங்குமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    கடல் மட்டத்திலிருந்து 2,600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த முகாமில் நவம்பர் 7-ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை 19 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முன்னாள் வீரர் செரஃபிம் பாசர்கோ தலைமையின் கீழ், நடைபெறும் இந்த முகாமில் தமது உடலியக்க நிபுணர் அஷ்வினி படேலுடன் வினேஷ் போகத் கலந்து கொள்கிறார்.

    ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தின் கீழ் வினேஷ் போகத் மற்றும் அவருடைய உடல நல நிபுணருக்கான விமானப்பயணக் கட்டணம், தங்குமிடம், உள்ளூர் பயணம் ,உணவு செலவு உள்ளிட்டவற்றிற்கு நிதி அளிக்கப்படுகிறது. இதர செலவுக்காக நாள் ஒன்றுக்கு 50 டாலர் படியாக வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றிய இந்திய அணி பதக்கப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #AsianGames2018
    ஜகர்த்தா :

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர்களுக்கான 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் தமிழக வீரர்கள் அய்யாச்சாமி, தருன் ஆரோக்கிய ராஜ் உள்பட 4 பேரை உள்ளடக்கிய இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதகத்தை வென்றது.

    முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா தாஸ், பூவம்மா உள்ளிட்டோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி மற்றும் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜான்சன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

    மற்றொறு போட்டியான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்றார். ஹாக்கி போட்டியில் ஆண்கள் அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. மலேசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 6-7 என்ற கணக்கில் ( பெனால்டி ஷூட்அவுட்) தோல்வியை தழுவியது.

    தொடக்க ஆட்டங்களில் இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கிலும், ஹாங்காங்கை 26-0, ஜப்பான் அணியை 8-0, கொரியாவுக்கு எதிராக 5-3, இலங்கைக்கு எதிராக 20-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றியை தனதாக்கியிருந்தது இந்தியா.

    இதனால் இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டம், இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த மலேசியாவை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், விறுவிறுப்பு அடங்கிய இன்றை ஆட்டத்தில் மலேசியா வெற்றி பெற்றது.

    இதனால், 13 தங்கம், 21 வெள்ளி, 22 வென்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைக்கு விமான நிலையத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார்.

    ஆசிய விளையாட்டில் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார். அரியானாவை சேர்ந்த வினேஷ் போகத் நேற்று நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை குடும்பத்தினர், பொதுமக்கள் வரவேற்றனர். அவருக்கு மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.



    அவரை காதலர் சோம்வீர் ரதியும் வரவேற்க வந்து இருந்தார். அப்போது விமான நிலையத்தில் வாசலில் வினேஷ் போகத்- சோம்வீர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அங்கு அப்போது கூடியிருந்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆரவாரம் செய்தனர். இருவரும் கேக்கை வெட்டி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு அரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. #AsianGames2018 #VineshPhogat
    சன்டிகார் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற அரியானா வீரர் பஜ்ரங் புனியாவுக்கு (65 கிலோ பிரிஸ்டைல்) அம்மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துவிட்டது.

    அம்மாநிலத்தை சேர்ந்த வினேஷ் போகத் பெண்களுக்கான 50 கிலோ பிரிஸ்டைலில் 2-வது தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். வினேஷ் போகத்துக்கும் அரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. இதேபோல துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அரியானா வீரர் லக்ஷாய் ஷெரோனுக்கு ரூ.1½ கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. #AsianGames2018 #VineshPhogat
    ×