search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wrestling"

    • ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.
    • இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் அமைத்தது.

    இதில், இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருந்தனர்.

    வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொண்டு வந்தன. 

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று கூட்டமைப்பின் தற்காலிகக் குழுவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு குழு கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

    அடுத்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.

    அந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம்.
    • மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என அறிவிப்பு.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாடப் பணிகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக குழு அமைக்க கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ள நிலையில், தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆ.தெக்கூரில் மகளிர் கையுந்து பந்து போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவி களுக்கு கல்லூரி முதல்வர் உமா பரிசு மற்றும் சான்றி தழ்களை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூரில் செயல்பட்டு வரும் சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காளாப்பூர் வாலிபால் நண்பர்கள் மற்றும் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பாலாஜி ஆசை நண்பர்கள் சார்பில் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் சந்திரசேகர், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் உமா முன்னிலை வகித்தார். நெற்குப்பை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அய்யனார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இப்போட்டியில் முதல் பரிசை மதுரை அமெரிக்கன் கல்லூரியும், 2-ம் பரிசை மதுரை லேடி டோக் கல்லூரியும், 3-ம் பரிசை ஆ.தெக்கூர் சிங்கை சித்தர் அய்யா கல்லூரியும், 4-ம் பரிசை மதுரை யாதவா கல்லூரியும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவி களுக்கு கல்லூரி முதல்வர் உமா பரிசு மற்றும் சான்றி தழ்களை வழங்கினார்.

    • பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக 30 மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்

    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றவர் வினேஷ் போகத். இவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதும், அதன் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் வினேஷ் போகத், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை பஜ்ரங் புனியா உட்பட 30 மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 4 மணி நேரம் நடந்த இப்பேராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், தேசிய பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, அதன் தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்திய வினேஷ் போகத், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    'இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரால் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல் பற்றி குறைந்தது 10-12 மல்யுத்த வீராங்கனைகளை என்னிடம் கூறி உள்ளனர். அவர்களின் பெயர்களை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், பிரதமர், உள்துறை மந்திரியை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் பெயர்களைச் சொல்வேன்' என்றார் வினேஷ் போகத்.

    பின்னர் பேசிய பஜ்ரங் புனியா, ``எங்கள் போராட்டம் அரசாங்கத்துக்கோ அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்துக்கோ எதிரானது அல்ல. இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரானது இது. கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படும்வரை இந்தப் போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

    வீராங்கனைகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என பிரிஜ்பூஷன் சரண் சிங் பதில் அளித்துள்ளார். ``உங்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், 10 ஆண்டுகளாக ஏன் யாருமே இதுபற்றி பேசவில்லை? விதிமுறைகள் வகுக்கப்படும்போதெல்லாம் இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. என் மீதான ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு நிரூபிக்கப்பட்டாலும் நான் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். நான் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டேன். ஆனால் சிபிஐ அல்லது போலீஸ் விசாரணைக்கு தயாராக இருக்கிறேன்" என பிரிஜ்பூஷன் சரண் சிங் தெரிவித்தார்.

    • பஜ்ரங் புனியா, காலிறுதி ஆட்டத்தில அமெரிக்க வீரர் யான்னியிடம் தோல்வியடைந்தார்
    • 61 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பங்கஜ் முதல் சுற்றிலேயே வெளியேறினார்

    பெல்கிரேடு:

    செர்பியாவின் பெல்கிரேடு நகரில் மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா கலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, காலிறுதி ஆட்டத்தில அமெரிக்க வீரர் யான்னி டயகோமிஹாலிசிடம் தோல்வியடைந்தார். எனினும் யான்னி

    டயகோமிஹாலிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், பஜ்ரங் புனியாவுக்கு ரெப்பேஜ் சுற்றில் விளையாடி வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    இந்திய இளம் வீரரான சாகர் ஜக்லான், 74 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான தனது முயற்சியைத் தொடர்ந்தார். அவர் மங்கோலியாவின் சுல்ட்கு ஓலோன்பயாரை 7-3 என்ற கணக்கில் தோற்கடித்தார். இனி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஈரான் வீரர் யோனசை சந்திக்க உள்ளார்.

    97 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் விக்கி தகுதிச் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் சாமுவேல் ஷெரரிடம் 2-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதேபோல் பங்கஜ் (61 கிலோ) பதக்கப் போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் முதல் சுற்றில் கஜகஸ்தானின் அசில் அய்டகினிடம் தோல்வியடைந்தார்.

    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 12 தங்கம் வென்றுள்ளது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 74  கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நவீன், பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை எதிர்கொண்டார். இதில் 9-0 என்ற கணக்கில் முகமது ஷெரீப் தாஹிரை வீழ்த்திய நவீன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 6-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, வினேஷ் போகட் மற்றும் ரவி குமார் தஹியா ஆகியோர் மல்யுத்தத்தில் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். காமல்வெல்த் போட்டியில் இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    • மல்யுத்த போட்டிகளில் சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா தங்கம் வென்றனர்.
    • இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார்.

    இதேபோல் 23வது வயதான இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

    காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார். 


    மல்யுத்த போட்டியில் 68 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்


    முன்னாக இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • ஆண்கள் மல்யுத்த பிரிவில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார்.
    • காமல்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்க பதக்கம் வென்றுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று நடை பெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.   

    கனடா வீராங்கனை அனா கொடினஸ் கோன்சலசை வீழ்த்திய அவர், நடப்பாண்டிற்கான காமல்வெல்த் போட்டியில் முதல் தங்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

    இந்தியாவின் தங்கப் பதக்கம் 8 ஆக உயர்ந்துள்ளது. முன்னாக இன்று இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

    மல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு அடிவாங்கிய நடிகை ராக்கி சாவந்த், எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #RakhiSawant
    தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தவர் ராக்கி சாவந்த். என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் சண்டிகாரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில் நடந்த பெண்கள் மல்யுத்த போட்டியை காண ராக்கிசாவந்த் சென்று இருந்தார். ஸ்டேடியத்தின் முன்பகுதியில் உட்கார்ந்து போட்டியை ரசித்தார். மல்யுத்தத்தில் எல்லோரையும் வென்ற ரொபல் என்ற வீராங்கனை பார்வையாளர்களை நோக்கி என்னுடன் மோத தைரியம் உள்ள பெண் யாராவது இருக்கிறீர்களா? என்று சவால் விடுத்தார்.



    உடனே ராக்கி சாவந்த் மல்யுத்த வளையத்துக்குள் குதித்து மோதுவதற்கு நான் தயார். ஆனால் என்னைபோல் உன்னால் நடனம் ஆட முடியுமா? என்று எதிர் சவால் விடுத்தார். அதை ரொபல் ஏற்றதும் இருவரும் மோதினார்கள்.

    சில நொடிகளிலேயே ராக்கி சாவந்தை ரொபல் தனது தலைக்கு மேலே தூக்கி வேகமாக தரையில் அடித்தார். இதில் ராக்கி சாவந்துக்கு காயம் ஏற்பட்டு மயக்கமானார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பதறியபடி ஓடிப்போய் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.



    கைத்தாங்கலாக அழைத்துச் சென்று தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ராக்கி சாவந்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு சவால் விட்டபடி ரொபல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி விட்டு ஸ்டேடியத்தில் இருந்து வெளியேறினார். 
    நேற்று தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடிய யோகேஷ்வர் தத் மல்யுத்த போட்டியில் இருந்து ஒதுங்கியது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார். #YogeshwarDutt #Wrestling
    சோனிபட்:

    2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மல்யுத்த போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். தற்போது அவர் சக வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.

    நேற்று 35-வது பிறந்த நாளை கொண்டாடிய யோகேஷ்வர் தத் மல்யுத்த போட்டியில் இருந்து ஒதுங்கியது ஏன்? என்பது குறித்து அளித்த பேட்டியில், ‘2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் அளவுக்கு பஜ்ரங் பூனியாவை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். அவர் சிறந்த வீரர். இருப்பினும் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நான் பங்கேற்கவில்லை. எனவே பஜ்ரங் பூனியாவுக்கு உதவி செய்வது சிறப்பானதாக இருக்கும். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல பஜ்ரங் பூனியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

    நான் நீண்டகாலம் விளையாடி விட்டேன். பஜ்ரங் பூனியா நல்ல பார்மில் இருப்பதாலும், என்னால் அவர் பாதிக்கக்கூடாது என்பதாலும் தான் இந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை’ என்று தெரிவித்தார். அரியானாவை சேர்ந்த 24 வயதான பஜ்ரங் பூனியா இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கமும், உலக போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  #YogeshwarDutt #Wrestling
    ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு அரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. #AsianGames2018 #VineshPhogat
    சன்டிகார் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற அரியானா வீரர் பஜ்ரங் புனியாவுக்கு (65 கிலோ பிரிஸ்டைல்) அம்மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துவிட்டது.

    அம்மாநிலத்தை சேர்ந்த வினேஷ் போகத் பெண்களுக்கான 50 கிலோ பிரிஸ்டைலில் 2-வது தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். வினேஷ் போகத்துக்கும் அரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. இதேபோல துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அரியானா வீரர் லக்ஷாய் ஷெரோனுக்கு ரூ.1½ கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. #AsianGames2018 #VineshPhogat
    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. #AsiansGames2018 #BajrangPunia
    சண்டிகர்:
       
    ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா ஆசியக் கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற புனியாவுக்கு வாழ்த்துக்கள். அரியானா மாநில அரசு சார்பில் பஜ்ரங் புனியாவுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்க உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #AsiansGames2018 #BajrangPunia
    ×