என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஒலிம்பிக் சங்கம்"

    • இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்த கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது.
    • நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது

    புதுடெல்லி:

    சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தவும் கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கால நிர்ணயத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

    மேலும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் செயற்குழு வாரிய கூட்டம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டதால் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலை அதற்கு முன்னதாக டிசம்பர் 3-ந் தேதி நடத்தவும் ஒப்புதல் அளித்தது.

    மேலும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையில் குழு ஒன்றை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க வரைவு திருத்த விதிகளை தயாரித்த நீதிபதி குழு, சங்கத்தின் செயற்குழு தேர்தலை டிசம்பர் 10-ந் தேதி நடத்தலாம் என புதிய தேதியை சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரைத்தது.

    நீதிபதி நாகேஸ்வரராவ் குழுவின் பரிந்துரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திர சூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பரிந்துரையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

    இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினர்களுக்கு வரைவு திருத்த சட்ட நகல்களை சுற்றறிக்கையாக அனுப்புவதற்காக வழிமுறைகளையும் நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவிப்பார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும் நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு சம்பளமாக ரூ.20 லட்சம் நிர்ணயித்து உத்தரவிட்டனர்.

    • இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை
    • பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.

    இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நேற்று அறிவித்தார்.

    சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்காததால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார். இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறுகிறார்.

    தலைவர், துணைத்தலைவர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு துணைத் தலைவர் (பெண்), இணைச் செயலாளர் (பெண்) பதவிகளுக்குப் போட்டி இருக்கும். நான்கு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் போட்டியியில் உள்ளனர்.

    • இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
    • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியிட்டார்.

    சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி இன்று தேர்வானார். இதன்மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றுள்ளார்.

    • இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம்.
    • 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ள நிலையில், தற்காலிக குழு அமைக்கக் கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.

    இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

    தற்காலிக குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா, உறுப்பினர்களாக எம்.எம்.சோமையா, மஞ்சுஷா கன்வார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த அமைப்பு, வீரர்கள் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளின் மேற்பார்வை, வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை இக்குழு கவனிக்கும்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில் இந்திய ஒலிம்பிக் கமிட்டி மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கவனிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.
    • இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் அமைத்தது.

    இதில், இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருந்தனர்.

    வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொண்டு வந்தன. 

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று கூட்டமைப்பின் தற்காலிகக் குழுவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு குழு கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

    அடுத்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.

    அந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு வழக்கில் நாளை தீர்ப்பு.
    • இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.

    இதற்கிடையே தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் அப்பீல் செய்தார். அவர் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு வழக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த இந்திய ரசிகர்கள், மருத்துவக் குழுவினர் தான் இதற்கு பொறுப்பு என்றும், ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில், வீரர்களின் எடை விவ காரத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பி வரு கிறார்கள்.

    இந்த நிலைிய்ல வினேஷ் போகத் எடை பிரச்சினைக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பொறுப்பல்ல என்று அதன் தலைவர் பி.டி.உஷா ஆவேசமாக கூறி உள்ளார். இது தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ போன்ற விளையாட்டுகளில் போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.

    ஒவ்வொரு விளை யாட்டுகளிலும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவுவதற்கு என்று தனிக்குழு இருப்பார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுவார்கள்.

     ஆனால் இந்திய ஒலிம் பிக் குழு, ஒலிம்பிக் தொடங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான், வீரர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். அதுவும் போட்டியின் போதோ அல்லது போட்டிக்குப் பிறகோ வீரருக்கு ஏற்படும் காயம் உள்ளிட்ட பிரச்சனைகளை கவனித்துக் கொள்வார்கள்.

    மேலும் ஊட்டச்சத்து நிபுணர், பிஸியோ தெரபிஸ்ட் இல்லாத வீரர்களுக்கு, அந்த பணிகளையும் கூடுதலாக இந்த மருத்துவக் குழு செய்யும்.

    எனவே வினேஷ் போகத் விவகாரத்தில் தின்ஷா பர்தி வாலா தலைமையிலான மருத்துவக் குழுவை குறை சொல்வது நியாயமல்ல.

    இவ்வாறு பி.டி. உஷா கூறியுள்ளார்.

    • இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அவருக்காக இந்த வழக்கில் ஆஜரான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஸ்பாத் சிங்கானியா [Vidushpat Singhania] தெரிவித்துள்ளார்.
    • இன்னும் 10-15 நாட்களுக்குள் நடுவர் நீதிமன்றம் தரப்பில் இருந்து முழுமையான விளக்கம் கிடைக்கும்

    பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் மல்யுத்தத்தில் [50 கிலோ எடைப்பிரிவில்] இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்று பெருமையைப் பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக உள்ளதாக கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    அவரது மனுவை நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] ஆம் தேதி நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அடியாக அமைந்தது. மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத் தற்போது நாடு திரும்பியுள்ளார். இந்த நேரத்தில் பதக்கம் கிடைக்க வேறு எந்த வழியும் இல்லையா என்று பலருக்குக் கேள்வி எழுவது இயல்பே.

    அந்த வகையில் வினேஷ் போகத் பதக்கம் பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அவருக்காக இந்த வழக்கில் ஆஜரான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஸ்பாத் சிங்கானியா [Vidushpat Singhania] தெரிவித்துள்ளார். அதாவது, நடுவர் நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இன்னும் 30 நாட்களுக்குள் இந்த மேல் முறையீட்டினை செய்ய வேண்டும். ஆனால் தற்போது 'வினேஷ் போகத் மனு தள்ளுபடி' என்று ஒற்றை வரியில் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேறு எந்த விளக்கமும் தற்போதுவரை தரப்படவில்லை. இன்னும் 10-15 நாட்களுக்குள் நடுவர் நீதிமன்றம் தரப்பில் இருந்து முழுமையான விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே முழுமையான விளக்கம் கிடைத்தவுடன், ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் இந்தியா மேல்முறையீடு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா உள்ளார்.
    • இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா உள்ளார். முன்னாள் தடகள வீராங்கனையான இவர் ஒலிம்பிக் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கியதாகவும், இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை பி.டி. உஷா மறுத்தார்.

    இது தொடர்பாக அவருக்கும் நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் பி.டி. உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. வருகிற 25-ந்தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் அவர் இதை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

    • ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
    • 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

    புதுடெல்லி:

    உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது.

    அடுத்த (2028ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.

    2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

    இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களும், ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித்தால், இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விவரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.

    • காமன்வெல்த் பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது.
    • பதக்கம் வென்றவர்களை பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டினார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த 22-வதுகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்  இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட மொத்தம் 61 பதக்கம் கிடைத்தது. தனிநபரில் அதிகபட்சமாக தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 4 பதக்கம் வென்றார். பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது.

    காமன்வெல்த் போட்டி யில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டினார். அவர்களுடன் கலந்துரையாடி னார்.

    இதைத்தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.20 லட்சமும், வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சமும், வெண்கல பதக்கத்தை கைப்பற்றியவர்களுக்கு ரூ.7½ லட்சமும் ஊக்கத் தொகையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ஒலிம்பிக் சங்க தற்காலிக தலைவர் அனில் கண்ணா பேசியதாவது:-

    காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களை பாராட்டுகிறேன். 2026-ம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் ஆகிய போட்டிகள் இடம்பெறுவது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இந்தியா முறையிடும். 2026-ம் ஆண்டுக்கான விளையாட்டு குழுவுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட மருந்து மற்றும் ஊசிகளை பயன்படுத்தக்கூடாது என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. #IndianAsianGames #NoNeedlePolicy #OlympicCouncil
    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில், நமது நாட்டில் உள்ள அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.



    அதில், ‘வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஊசிகளை வைக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்ற ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள மருந்துகளை எக்காரணத்தை கொண்டும் வீரர்கள் யாரும் எடுத்து கொள்ளக்கூடாது. இந்த விஷயத்தில் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் நிர்வாகிகள் கவனம் செலுத்தி நாட்டுக்கு தர்மசங்கடம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    உடல் நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மற்றும் ஊசி தேவையெனில், விளையாட்டு கிராமத்தில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் வைத்துக்கொள்ளலாம். அதனை உரிய முன் அனுமதி பெற்று பயன்படுத்தலாம்’ என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊசி மூலம் ஊக்க மருந்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை யாரும் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்துவதை தடுக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது.  #IndianAsianGames #NoNeedlePolicy #OlympicCouncil
    காமன்வெல்த் போட்டியில் அறைகளை சேதப்படுத்தியது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.74 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி கடிதம் அனுப்பி உள்ளது. #Commonwealthgames
    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடந்தது.

    இந்தியா சார்பில் 15 போட்டிகளில் 216 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். 26 தங்கம், 20 வெள்ளி, 20 வென்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்தது.

    இந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அறைகளை சேதப்படுத்தி இருந்த தகவல் தற்போதுதான் வெளியாகி உள்ளது. கதவுகள், மின் விளக்கு, நாற்காலி, குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்ததாக காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி தெரிவித்துள்ளது.

    இதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.74 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

    கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் ஆகிய வீரர்கள் தங்கிய அறைகள் சேதமடைந்ததாகவும், அந்த சங்கத்தினர் இந்த அபராத தொகையை ஏற்றுக்கொள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.

    அதிகபட்சமாக கூடைப்பந்து சங்கத்துக்கு ரூ.20 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Commonwealthgames
    ×