என் மலர்
நீங்கள் தேடியது "ராஜீவ் சுக்லா"
- கான்பூரில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஏ அணி விளையாடியது.
- 2ஆவது போட்டியின்போது சில வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா "ஏ" அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நேற்றுடன் அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிக்கான தொடர்கள் முடிவடைந்தன. ஒருநாள் தொடர் கான்பூரில் நடைபெற்றது.
2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றது. முதல் மற்றும் கடைசி போட்டியில் இந்தியா ஏ வெற்றி பெற்றது.
2ஆவது போட்டியின்போது ஆஸ்திரேலியா ஏ அணி வீரர்கள் சிலருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஹென்றி தோர்ன்டன் உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாகிவிட்டது.
வீரர்களின் உடல் நலக்குறைவுக்கு உணவுதான் காரணம் என ஆஸ்திரேலியா ஏ அணி குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில் பிசிசிஐ துணைத் தலைவரான ராஜீவ் சுக்லா, ஆஸ்திரேலியா ஏ அணியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
உணவுதான் பிரச்சனையாக இருந்திருந்தால் இந்திய வீர்ரகள் உள்பட அனைத்து வீரர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்க வேண்டும். வேறு ஏதாவது இருந்திருக்க வேண்டும். சிறந்த ஓட்டலில் இருந்து அவர்களுக்கு உணவு வரவழைக்கப்பட்டிருந்தது. அனைவரும் அந்த உணவை சாப்பிட்டார்கள். சில வீரர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வேறு ஏதாவது தொற்று (infection) ஏற்பட்டிருக்கலாம்.
அங்கு ஏராளமான ஓட்டல்கள் இல்லை. இதனால் இந்த விசயம் பெரிதாக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு 300 அறைகள் கொண்ட 5 நட்டசத்திர ஓட்டல் தேவை. அதுபோன்ற ஓட்டல் இல்லை. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சர்வதேச விமான நிலையம் அங்கு இல்லை. சிறந்த ஏற்பாடுகள் இருந்திருந்தால், அவர்களுக்கு பலன் தரக்கூடிய வகையில் இருந்திருக்கும்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
- மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
- மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் 37ஆவது தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வாகியுள்ளார்.
அதே சமயம் பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா, செயலாளராக தேவஜித் சைக்யா ஆகியோர் நீடிக்கின்றனர்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.
டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.
- மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
- மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்படலாம் என்று முன்பு தகவல் வெளியாகி இருந்தது. பின்னர் அது வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், காலியாக உள்ள பதவிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து விவாதம் நடைபெற்றது. மிதுன் மனாஸ் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பட் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு தலைவர் பதவிக்கு மிதுன் மனாஸ் பெயரே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பி.சி. சி.ஐ.யின் தலைவராக மிதுன் மனாஸ் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறார். இதே போல புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் உள்பட பல்வேறு நியமனங்களும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.
டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.
ஓய்வு பெற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடுகளின் இயக்குநராகவும் பணியாற்றி, நிர்வாக அனுபவத்தை பெற்றுள்ளார். இந்த அனுபவமே அவரை பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்குக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோகித்தை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- கோலி, ரோகித்துக்கு சிறப்பான பேர்வெல் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் 2027-ம் ஆண்டு 38, 40 வயதில் அவர்களால் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும்.
இதனால் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோகித்தை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் அதுவே அவர்களுடைய கடைசித் தொடராக இருக்கும் பட்சத்தில், தங்களுடைய நாட்டில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு சிறப்பான பேர்வெல் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருடன் விராட் ரோகித்தை கழற்றி விடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுற்றுலா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
அவர்கள் எப்போது ஓய்வு பெற்றார்கள். விராட், ரோகித் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள். எனவே விளையாடிக் கொண்டிருக்கும் அவர்களுடைய பேர்வெல் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஆம் அவர்கள் மற்ற 2 பார்மெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள்.
பிசிசிஐயில் எங்களுடைய கொள்கை தெளிவாக இருக்கிறது. நாங்கள் எந்த வீரரையும் ஓய்வு பெறுமாறு சொல்ல மாட்டோம். வீரர்கள் தங்களது சொந்த முடிவை எடுக்கிறார்கள். அவர்கள் முடிவெடுத்தால் அதை நாங்கள் மதிக்கிறோம். விராட் மிகவும் பிட்டாக இருக்கிறார். ரோகித் சர்மா நன்றாக விளையாடுகிறார். எனவே அவர்களுடைய பேர்வெல் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.
என்று சுக்லா கூறினார்.
- இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான வீராட் கோலியும் டெஸ்டில் இருந்து திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார்
இந்திய கிரிக்கெட் அணி யின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக பணியாற்றியவர் ரோகித்சர்மா. அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித்சர்மா ஓய்வு பெற்றார். இதனால் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக சூர்ய குமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான வீராட் கோலியும் டெஸ்டில் இருந்து திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார். அவரும் ஏற்கனவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருவரும் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தனர்.
ரோகித் சர்மா, வீராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவித்தது ஆச்சரியமானது. ஏனென்றால் ஆஸ்திரேலிய பயணத்தில் இருவரது ஆட்டமும் மோசமாக இருந்ததால் தொடர் முடிந்த பிறகே இந்த முடிவை எடுத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து பயணத்துக்கு சற்று முன்பு தான் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
கோலி, ரோகித் சர்மா இல்லாமல் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 டெஸ்ட் முடி வில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்த நிலையில் கோலி, ரோகித் சர்மா ஓய்வு தொடர் பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளது. இருவரையும் ஓய்வு பெற கட்டாயப்படுத்தியதாக வெளியான தகவலை மறுத்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறிய தாவது:-
ஓய்வு பெறுவது ஒரு வீரரின் சொந்த முடிவு. கிரிக்கெட் வாரியத்தில் இருந்து யாரும் இந்த முடிவை எடுக்க கட்டாயப்படுத்த முடியாது.
நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ரோகித் சர்மா, வீராட் கோலி இல்லாததை நாம் அனைவரும் உணர்கிறோம். ஓய்வு பெறும் முடிவை இருவரும் தாங்களாகவே எடுத்தனர். எந்த வீரரையும் ஓய்வு பெற சொல்லக்கூடாது என்பது பி.சி.சி.ஐ. யின் கொள்கையாகும். ஓய்வு அவர்களின் விருப்பமே. ஓய்வு பெறுமாறு அவர்களை கிரிக்கெட் வாரியம் கட்டாயப்படுத்த வில்லை.
அவர்களாகவே ஓய்வு பெற்றுள்ளனர். நாங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்போம். நாங்கள் எப்போதும் அவர்களை புகழ்பெற்ற பேட்ஸ்மேன்களாக கருதுவோம். இருவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவது எங்களுக்கு மிகவும் நல்லது.
இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
- ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது
- ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதனிடையே, இந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு மாநில அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பெங்களூரு கூட்ட நெரிசல் போன்று எந்த மாநிலத்திலும் நடக்கலாம், அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோல நடந்தாலும் நாம் அதை அரசியல் செய்ய கூடாது. அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. இந்த துயர சம்பவம் திடீரென நடைபெற்றது" என்று தெரிவித்தார்.
- பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார்.
- சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராக ரோஜர் பின்னி பொறுப்பேற்றார்.
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்றவருமான இவர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் 70 வயது உச்ச வரம்பை எட்ட உள்ளதால், பிசிசிஐ-யின் தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி விலகவிருப்பதாகவும், பிசிசிஐயின் தற்போதைய துணைத் தலைவரான ராஜீவ் சுக்லா ஜூலை மாதத்தில் இருந்து இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. செப்டம்பரில் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு முடிவை பொறுத்தவரை, அவரது சொந்த முடிவை எடுத்துள்ளார்.
- வீரரகள் ஓய்வு முடிவை எடுப்பதில், நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை என பிசிசிஐ-யின் கொள்கை.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய டெஸ்ட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் நேற்று மாலை ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பிசிசிஐ நெருக்கடி கொடுத்த காரணமாகத்தான் ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவிக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அது அவருடைய தனிப்பட்ட முடிவு. பிசிசிஐ-க்கு எந்த பங்கும் இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு முடிவை பொறுத்தவரை, அவரது சொந்த முடிவை எடுத்துள்ளார். வீரரகள் ஓய்வு முடிவை எடுப்பதில், நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை அல்லது எந்த ஆலோசனையும் வழங்குவது அல்லது ஏதாவது சொல்வது கிடையாது. இது பிசிசிஐ-யின் கொள்கை.
நாம் அவரை எவ்வளவு அதிகமாகப் புகழ்கிறோமோ, அது அவ்வளவு குறைவாகவே இருக்கும். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நல்ல விஷயம் என்னவென்றால், அவர் இன்னும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்யவில்லை (ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்). எனவே அவரது அனுபவத்தையும் திறமையையும் நிச்சயமாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
- ஐ.பி.எல். தொடரில் பத்து அணிகள் விளையாடுகின்றன.
- 2025 ஐ.பி.எல். தொடர் அறிவிக்கப்பட்டது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 557 வீரர்கள் பங்கேற்றனர். இதில் மொத்ததம் 62 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 182 வீரர்கள் ரூ. 639 கோடியே 15 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்த நிலையில், ஐ.பி.எல். 2025 தொடர் மார்ச் 23 ஆம் தேதி துவங்கும் என்று பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.
மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் சுக்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஐ.பி.எல். 2025 தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
- ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.
- இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. நாளை நடைபெறும் அரையிறுதி சுற்று போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரரது கருத்துக்கு பாஜக முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
அதில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். விளையாட்டு வீரர்கள் குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கத்தேவையில்லை. இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சேர்மன் ராஜீவ் சுக்லா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம். எல்லாவற்றையும் விட விளையாட்டு மேலானது தான். அதேநேரத்தில் யாரோ சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்தால் அது நிச்சயம் விளையாட்டையும் கூட பாதிக்க தான் செய்யும்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். அது குறித்து தற்போது எங்களால் எதுவும் சொல்ல முடியாது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்.
பாகிஸ்தானின் செயல்பாட்டால் ஏற்பட்டுள்ள கோபத்தால் மக்கள் தங்கள் கருத்தை இதுபோன்று பிரதிபலிக்கிறார்கள். பாகிஸ்தான் தங்களது செயல்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். அவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. இதனை தான் நாம் தொடக்கம் முதலே சொல்லி வருகிறோம். தீவிரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து நமது அரசு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அளித்து இருக்கிறது. அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐ.பி.எல். சேர்மனான ராஜீவ் சுக்லா உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். இவரது நிர்வாக உதவியாளராக அக்ரம் சைபி என்பவர் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அக்ரம் சைபி மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் ஷர்மா திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். ‘உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் பணம் மற்றும் இதர வகையில் தன்னை கவனிக்க வேண்டும் என்று அக்ரம் சைபி என்னிடம் தெரிவித்தார். மேலும் அவர் போலி வயது சான்றிதழ் அளித்து வருகிறார்’ என்றும் குற்றம் சாட்டி இருந்தார். அத்துடன் அக்ரம் சைபி, ராகுல் ஷர்மா ஆகியோர் இடையிலான உரையாடல் இந்தி சேனலில் ஒளிபரப்பானதால் சர்ச்சை கிளம்பியது.
இதைத் தொடர்ந்து ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் அக்ரம் சைபியை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஒருவரை நியமிக்கவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கமிஷனர் நியமிக்கப்பட்டதும் அவர் அக்ரம் சபியிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையை ஆய்வு செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இறுதி தீர்ப்பை வழங்கும்.
இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித்சிங்கிடம் கேட்ட போது, ‘டெலிவிஷனில் வெளியான ஆடியோ உள்பட அனைத்து விஷயங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் முன்பு நாங்கள் கருத்து எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்க இணைசெயலாளர் யுத்வீர் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘அணி தேர்வில் தவறு எதுவும் நடக்கவில்லை. எந்த மாதிரியான விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அணி தேர்வு விஷயத்தில் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் வெளிப்படையான முறையில் தான் செயல்படுகிறது. அவர்கள் இருவர் இடையே நடந்த உரையாடல் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயமாகும். ராகுல் ஷர்மா மாநில அணியின் உத்தேச பட்டியலில் கூட ஒருபோதும் இடம் பிடித்தது கிடையாது. அதற்குரிய தகுதியும் அவருக்கு இல்லை’ என்றார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், உத்தரபிரதேச அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது கைப் தனது டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேச கிரிக்கெட் அணி தேர்வில் ஊழல் நடப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதை ராஜீவ் சுக்லா உறுதி செய்வார் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே தன் மீதான புகாரை மறுத்துள்ள அக்ரம் சைபி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.






