என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷமா முகமது"

    • ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.
    • இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. நாளை நடைபெறும் அரையிறுதி சுற்று போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரரது கருத்துக்கு பாஜக முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

    இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    அதில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். விளையாட்டு வீரர்கள் குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கத்தேவையில்லை. இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

    • எடை குறைந்த வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால், அனைத்து மாடல்களையும்தான் தேர்வு செய்ய வேண்டும் என கவாஸ்கர் கூறினார்.
    • ஒரு ஐசிசி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும், அவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவது முற்றிலும் தேவையற்றது.

    மும்பை:

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷமா முகமது தெரிவித்தார்.

    ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன் என்று ஷமா முகமது கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கவாஸ்கர் கூறும்போது, எடை குறைந்த வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால், நீங்கள் ஒரு மாடலிங் போட்டிக்குச் சென்று அனைத்து மாடல்களையும்தான் தேர்வு செய்ய வேண்டும்.

    இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இது உடல் எடையை பொறுத்தது அல்ல. நீங்கள் எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும் என்பது பற்றியது. சர்பிராஸ்கான் உடல் எடை அதிகமாக இருப்பதால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக 150 ரன்கள் எடுத்தார். அதன்பின் அரைசதங்களும் அடித்தார்.

    நான் விளையாடிய காலத்தில் என்னால் மைதானத்தை 2 முறை சுற்றி ஓட முடியாது. ஆனால் நான் நாள் முழுவதும் நின்று பேட்டிங் செய்தேன். உடல் எடைக்கும், மனவலிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரிக்கெட் உடற்பயிற்சி மற்றும் உடல் தகுதி இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் ஆகும். நீங்கள் நீண்ட தூரம் நீடிக்க முடியுமா என்பதுதான் மிக முக்கியமான விஷயம் என்றார்.

    வெங்கடேஷ் பிரசாத் கூறும்போது, ஒரு கேப்டனாக ரோகித் சர்மா மிகுந்த கண்ணியத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 8 மாதங்களுக்கு முன்பு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றார்.

    வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஒரு ஐசிசி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும், அவரை உடல் ரீதியாக அவமானப் படுத்துவது முற்றிலும் தேவையற்றது. பல ஆண்டுகளாக தனது திறமைகள் மற்றும் தலைமைத்துவத்தின் மூலம் சாதித்த ஒரு நபருக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது சமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார்.
    • சமி விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் கூறினார்.

    இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது சமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

    இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்

    முகமது சமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி. அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஷமா முகமது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ரம்ஜான் மாதத்தில் ஒரு மிக முக்கியமான விஷயம் உள்ளது. நாம் பயணம் செய்யும்போது, நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. முகமது சமி பயணம் செய்கிறார், அவர் தனது சொந்த இடத்தில் இல்லை. நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடும்போது, நோன்பு இருக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. உங்கள் செயல்கள்தான் மிகவும் முக்கியம். அது (இஸ்லாம்) மிகவும் அறிவியல் பூர்வமான மதம் என்று ஷமா முகமது கூறினார்.

    இதனையடுத்து, முகமது சமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே சமி விரதம் இருக்காமல் இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை.

    என்று தெரிவித்தார்.

    மேலும் சுற்றுப் பயணத்தில் இருப்பவர்கள் நோன்பைத் தவிர்க்க குர்ஆன் அனுமதிக்கிறது என சமியின் உறவினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மத குருமார்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கேப்டன் ரோகித் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.

    கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவிய ரோகித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதற்கு ரோகித் சர்மாவை பாராட்டி பாஜக இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், "காங்கிரஸ் கட்சி எங்கள் கேப்டனை கேலி செய்ய முயன்றது, ஆனால் அவர் தனது பேட்டை பயன்படுத்தி சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளால் வெறுப்பை பரப்பியவர்களை அமைதிப்படுத்தினார்" என்று பாஜக தெரிவித்துள்ளது.

    மேலும், அந்த வீடியோவில் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது பதிவிட்ட எக்ஸ் பதிவையும் பாஜக இணைத்துள்ளது.

    முன்னதாக ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரரது கருத்துக்கு பாஜக முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×