என் மலர்
நீங்கள் தேடியது "மிதுன் மனாஸ்"
- மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
- மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் 37ஆவது தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வாகியுள்ளார்.
அதே சமயம் பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா, செயலாளராக தேவஜித் சைக்யா ஆகியோர் நீடிக்கின்றனர்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.
டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.
- மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
- மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்படலாம் என்று முன்பு தகவல் வெளியாகி இருந்தது. பின்னர் அது வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், காலியாக உள்ள பதவிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து விவாதம் நடைபெற்றது. மிதுன் மனாஸ் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பட் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு தலைவர் பதவிக்கு மிதுன் மனாஸ் பெயரே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பி.சி. சி.ஐ.யின் தலைவராக மிதுன் மனாஸ் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறார். இதே போல புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் உள்பட பல்வேறு நியமனங்களும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.
டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.
ஓய்வு பெற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடுகளின் இயக்குநராகவும் பணியாற்றி, நிர்வாக அனுபவத்தை பெற்றுள்ளார். இந்த அனுபவமே அவரை பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்குக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.






