search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit"

    • தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார்.
    • யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அவர் தேவை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு 2-வது போட்டியில் இந்தியா பதிலடி கொடுத்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா, ரோகித், விராட் ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள் என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னோன் பிளாண்டர் கூறியுள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார். அவர் நிலையான லைன் மற்றும் லென்த்தை பிடித்து தொடர்ச்சியாக பந்து வீசும் திறமையை கொண்டிருப்பதாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இப்படி வெற்றிகரமாக செயல்படுகிறார்.

    புதிய தந்தை ஸ்விங் செய்து ஸ்டம்பை நோக்கி கொண்டு வரும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுக்கிறார். மாற்றங்களை செய்து தெறிக்க விடக்கூடிய யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல உங்களுக்கு தேவை. பும்ரா, விராட், ரோகித், ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள். அவர்கள் அந்த தருணங்களுக்காக வாழ்கிறார்கள். அவர்கள் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.

    இவ்வாறு பிளாண்டர் கூறினார்.

    • ஜனவரி 25 அன்று முதல் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது
    • இந்திய-இங்கிலாந்து அணியினர் 131 முறை மோதியுள்ளனர்

    இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெறுகிறது.

    இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.

    முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.

    இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்:

    ஜேம்ஸ் ஆண்டர்சன் (வேகப்பந்து வீச்சாளர்)

    ஆட்டங்கள் - 35 விக்கெட்டுகள் - 139 சராசரி - 24.89 சிறப்பு - 5/20

    பகவத் சந்திரசேகர் (லெக் ஸ்பின்னர்)

    ஆட்டங்கள் - 23 விக்கெட்டுகள் - 95 சராசரி - 27.27 சிறப்பு - 8/79

    அனில் கும்ப்ளே (லெக் பிரேக்)

    ஆட்டங்கள்- 19 விக்கெட்டுகள் - 92 சராசரி - 30.59 சிறப்பு - 7/115

    ஆர். அஸ்வின் (ஆஃப் ஸ்பின்னர்)

    ஆட்டங்கள் - 19 விக்கெட்டுகள் - 88 சராசரி - 28.59 சிறப்பு - 6/55


    பிஷன் சிங் பேடி (இடக்கர ஸ்பின்)

    ஆட்டங்கள் - 22 விக்கெட்டுகள் - 85 சராசரி - 6/71 சிறப்பு - 29.87

    கபில் தேவ் (வேகப்பந்து வீச்சாளர்)

    ஆட்டங்கள் - 27 விக்கெட்டுகள் - 85 சராசரி - 37.34 சிறப்பு - 6/91

    பிஎஸ் பேடி மற்றும் கபில் தேவ் இருவரும் தலா 85 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.

    • முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை நடைபெற உள்ளது
    • 2022 டிசம்பரில் பாகிஸ்தானை 3-0 என இங்கிலாந்து வென்றது

    இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.

    இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.

    முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

    பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

    இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்:

    சச்சின் டெண்டுல்கர்

    2535 ரன்கள் - 32 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 51.73 சராசரி

    ஜோ ரூட்

    2526 ரன்கள் - 25 ஆட்டங்கள் - 9 நூறுகள் - 63.15 சராசரி

    சுனில் கவாஸ்கர்

    2483 ரன்கள் - 38 ஆட்டங்கள் - 4 நூறுகள் - 38.20 சராசரி

    அலஸ்டர் குக்

    2431 ரன்கள் - 30 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 47.66 சராசரி

    விராட் கோலி

    1991 ரன்கள் - 28 ஆட்டங்கள் - 5 நூறுகள் - 42.36 சராசரி

    கடந்த 2022 டிசம்பர் மாதம், பாகிஸ்தானுடன் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.

    • முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓவல்: 

    இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் குவித்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்ததில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351சிக்ஸர்), இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331சிக்ஸர்), 3வது இடத்தில் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

    நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷமி 150 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

    இதற்கு முன்னர் இந்திய வீரர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் விளையாடி 150 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சர்வதேச அளவில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    இனிடையே நேற்றைய போட்டியில் 7.2 ஓவர் வீசிய இந்திய வேகபந்து வீச்சாளர் பும்ரா 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    ×