என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 100652"

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது.
    மும்பை:

    இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது மோசமான ஆட்டத்தின் காரணமாக 2019 ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் சமீபத்தில் போட்டி வர்ணணையாளராகவும் செயல்பட்டு வந்தார்.

    இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்தி தனது சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விளையாட்டுக்கு பல மூத்த வீரர்களும் பாராட்டு தெரிவித்து வந்தனர். 

    இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இதையடுத்து தான் இந்திய அணி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட தினேஷ் கார்த்திக்,

     ‘உங்கள் ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. நீங்கள் உங்களையே நம்பினால் போதும். அனைத்தும் உங்களை தேடி வரும்’ 

    என தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 287 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்டிரைக் ரேட் 191.33-ஆக உள்ளது.
    31-ந்தேதி நடக்கும் தேர்வில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பழங்கரை அடுத்த அணைப்புதூரில் திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை மறுநாள் 26-ந் தேதி நடக்கிறது. இதில் 2008 செப்டம்பர் 1-ந் தேதி,அதன் பின்னர் பிறந்தவர்கள் 14 வயது பிரிவில் பங்கேற்கலாம்.

    இம்மாதம் 31-ந்தேதி நடக்கும் தேர்வில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். 2006 செப்டம்பர் 1-ந் தேதி அதன் பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் மட்டுமே தேர்வுக்கு தகுதியுடையவர்கள்.

    தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக, அசல் சான்றுகளுடன் மைதானத்துக்கு வர வேண்டும். இரு தேர்வுகளும் மதியம் 2:30மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கிராமத்தில் இருந்து பயிற்சி பெற்ற நான் முதன்முறையாக வெளிநாட்டுக்கு சென்று விளையாட இருக்கிறேன் என்றார் சாகுல் அமீது.

    திருப்பூர்:

    இந்திய வீரர்கள் பங்கேற்கும், கிரிக்கெட் தொடர், நேபாளம் நாட்டில் அடுத்த மாதம் 10, 11, 12-ந் தேதிகளில் நடக்கிறது. தொடரில் விளையாட தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர்.

    இதில் திருப்பூர், மங்கலம் அக்ஹாரப்புத்துாரை சேர்ந்த ஷாகுல் ஹமீது, ஈரோடு-மணிவண்ணன், அரியலுார் - சந்தோஷ் குமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

    இதுகுறித்து ஷாகுல் ஹமீது கூறியதாவது:-

    மங்கலம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தேன். வலது கை பாதித்திருந்தாலும், தன்னம்பிக்கையுடன் விளையாடி வருகிறேன். தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன்.

    கிராமத்தில் இருந்து பயிற்சி பெற்ற நான் முதன்முறையாக வெளிநாட்டுக்கு சென்று விளையாட இருக்கிறேன். நேபாள கிரிக்கெட் தொடரில், முழு திறமையையும் வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது கேமராவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.
    மும்பை:

    தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், தென் ஆப்ரிக்கா வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

    இதில் பட்லர் 16 போட்டிகளில் விளையாடி 4 சதம் உட்பட 824 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது கேமராவில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர்.

    இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லர் ஒவ்வொரு முறையும் பெரிய ஷாட்டை அடிக்கும்போதும் கேமராவில் வான் டெர் டுசெனின் மனைவி லாரா தவறுதலாக காட்டப்பட்டார். இதனால் பலர் லாராவை பட்லரின் மனைவி என தவறுதலாக நினைத்துவிட்டனர். இதுகுறித்து கிண்டலாக பேசிய லாரா ‘நான் பட்லரை 2வது கணவராக தத்தெடுத்துவிட்டேன்’ என தெரிவித்தார்.

    இதுகுறித்து லாரா கூறியதாவது:-

    நான் ஜோஸ் பட்லரின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும்போது சில முறை கேமராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறார்கள். பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் அவரை பார்த்தது கூட இல்லை.

    என் கணவர் ரஸ்ஸி சில காரணங்களால் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதில் பட்லருக்கு உற்சாகத்தை தெரிவித்து வருகிறேன். இந்த சீசனில் நான் பட்லரை இரண்டாவது கணவராக தத்தெடுத்துவிட்டேன்.

    இவ்வாறு கிண்டலாக கூறினார். 
    கடந்த சனிக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் மாண்ட்லி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    லண்டன்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த 20 வயது இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த இளைஞர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாடியவர். 

    இவர் சமீபத்தில் முடிந்த போட்டியில் வெற்றி பெற்றதற்காக கடந்த சனிக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மாண்ட்லியை மிக கடுமையாக தாக்கியுள்ளார். 

    இதில் படுகாயம் அடைந்த மாண்ட்லி மயக்கமடைந்து விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்  மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, கோமாவுக்கு சென்றதாக தெரியவந்துள்ளது. 

    இதையடுத்து அவர் விரைவில் குணமடைய தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
    இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
    ஆக்ரா:

    இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக  திகழ்ந்து வருபவர் தீபக் சாஹர். இவர் வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும், அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக பேட் செய்து  ஆல்ரவுண்டரை போல செயல்பட்டு வருகிறார்.

    இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணிக்கு தேர்வான இவர், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

    இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்கள் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர். 

    இந்நிலையில் தீபக் சஹார், தனது காதலி ஜெயாவை ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இதில் ராகுல் சாஹர் உள்ளிட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் டோனி, விராட் கோலி,  மற்றும் இந்திய அணியின் பிற வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தனது சொந்த பணத்தில் விமான டிக்கெட் வாங்கி, ஓட்டலில் தங்கி, சிகிச்சை பெற்றார்.
    • நான் அவருக்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஷகீன்ஷா அப்ரிடி தனது காயத்துக்கு சிகிச்சை பெறு வதற்காக லண்டன் சென்றார்.

    அங்கு சிகிச்சை பெற்று அவர் தற்போது குணம் அடைந்துள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் நடக்கும் டி20 ஓவர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் ஷகீன்ஷா அப்ரிடி இடம் பெற்றார்.

    இந்த நிலையில், ஷகீன்ஷா அப்ரிடி சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டி உள்ளார்.

    ஷகீன்ஷா அப்ரிடி தனது சிகிச்சைக்காக தனது சொந்த பணத்தில் விமான டிக்கெட் வாங்கி இங்கிலாந்து சென்றார். லண்டனில் ஓட்டலில் தங்குவதற்கு சொந்த பணத்தை செலவழித்தார். நான் அவருக்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.பின்னர் அவர் அந்த டாக்டரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை. ஷகீன்ஷா அப்ரிடி தனது சொந்த செலவில் அனைத்தையும் செய்து கொண்டார். டாக்டர்கள், ஓட்டல் மற்றும் உணவு என அனைத்தையும் அவர் தனது சொந்த பணத்தில் இருந்து செலுத்தினார்.

    எனக்கு தெரிந்தவரை ஷகீன்ஷா அப்ரிடியுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சர்வதேச சுற்றுப் பயணங்களுக்கான இயக்குனர் ஜாகீர்கான் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பேசினார். இவ்வாறு ஷாகித் அப்ரிடி கூறினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே  டி20  உலக கோப்பை போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும் போது, தலைமை தேர்வாளரின் மலிவான தேர்வு என்று பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே ராயுடுவின் ட்வீட் குறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்திருந்தார்.
    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வுப்பெறப்போவதாக கடந்த மே 14-ஆம் தேதி ட்விட்டரில் அறிவித்துவிட்டு பதிவை உடனே நீக்கினார். இதுகுறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், 'ராயுடு கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மன உளைச்சலில் இருந்தார். அதனால் அவ்வாறு ட்வீட் செய்து பின் நீக்கிவிட்டார். அவர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவார்' என கூறினார்.
    இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் ராயுடு இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை அணி தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கம் அளித்துள்ளார். 
    அவர் கூறுகையில், ராயுடு கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக மன உளைச்சலில் இருந்தார். இப்போது அவர் சரியாகிவிட்டார். அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
    வங்காளதேச அணிக்கு, இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி பீல்டீங் செட் செய்து கொடுத்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    கார்டிப்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், இந்திய அணி நேற்று பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அபாரமாக விளையடிய இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணியில், பேட்டிங்கில் டோனி, மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் ஜொலித்தனர். இருவரும் சதம் அடித்து இந்திய அணி இமாலய ரன்களை சேர்க்க உதவினர்.

    முன்னதாக, இந்திய அணி பேட் செய்து கொண்டிருந்த போது,  39 ஓவரை சபீர் ரஹ்மான் வீசினார். அப்போது, டோனி பேட்டிங் செய்தார். திடீரென பேட்டிங் செய்வதை நிறுத்திய டோனி, ஆட்ட விதிகளுக்கு மாறாக  பீல்டரை நிறுத்தி இருகிறார்கள்,  பீல்டர்களை மாற்றுங்கள்  என்று பந்துவீச்சாளர்களிடம் கூறினார். ஏனென்றால் நோபாலாகச் சென்றுவிடும் என்று அறிவுறுத்திய டோனி அதை மாற்றும்படி கூறினார்.

    இதைக் கேட்ட சபீர் ரஹ்மான், உடனடியாக  பீல்டரை, ஸ்கொயர் லெக்கிற்கு மாற்றினார். தான் பேட்டிங் செய்தபோதிலும் கூட, எதிரணியினர் பீல்டர்களை சரியாக நிறுத்தாமல் இருந்தபோது அவர்களுக்கு உதவிய டோனியின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    கார்டிப்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இங்கிலாந்தில் நாளை மறு நாள் (30-ந் தேதி) முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த 24-ந் தேதி தொடங்கிய பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) 2 பயிற்சி ஆட்டங்கள் நடக்கிறது. கார்டிப்பில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை. தேவையற்ற ஷாட்களை ஆடி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரவீந்திர ஜடேஜா (54 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (30 ரன்கள்) மட்டுமே சற்று நிலைத்து நின்று ஆடினார்கள்.

    எனவே இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நல்ல நிலைக்கு திரும்பி நம்பிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமானதாகும். மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத இருந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    பிரிஸ்டலில் நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியை சந்திக்கின்றது. இந்திய அணியை வீழ்த்தி இருந்த நியூசிலாந்து அணி தனது வெற்றியை தொடர முயலும். வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. மழையால் இந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. எனவே இந்த ஆட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி தீவிரம் காட்டும்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    சமூக வலைதளங்களில் வீராட்கோலியை 10 கோடி ரசிகர்கள் பின் தொடர்வது தெரியவந்துள்ளது. கிரிக்கெட் வீரர்களில் புதிய சாதனையை அவர் பெற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) கேப்டனாக வீராட்கோலி இருக்கிறார்.

    அபாரமான ஆட்டம் மூலம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இதன் காரணமாக வீராட்கோலி ஏராளமான ரசிகர்களை உலகம் முழுவதும் பெற்றுள்ளார். அவர் தன்னை பற்றிய செய்தி, படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப் போது பதிவிடுவார்.

    இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வீராட்கோலியை 10 கோடி ரசிகர்கள் பின் தொடர்வது தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் 10 கோடிக்கு மேலாக பின்பற்றப்படும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார்.

    இன்ஸ்டா கிராமில் 3.36 கோடி பேரும், பேஸ்புக்கில் 3.7 கோடி பேரும், டுவிட்டரில் 3.7 கோடி பேர் என மொத்தம் 10 கோடி பேர் கோலியை பின் தொடர்கிறார்கள்.

    பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை (போர்ச் சுக்கல்) இன்ஸ்டாகிராமில் மட்டும் 16.7 கோடி பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறப்பிடத்தக்கது.

    கம்பத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்த்ததை பெரியப்பா கண்டித்ததால் பள்ளி மாணவன் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடுங்காலக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குணாளன் (வயது17). கம்பத்தில் உள்ள பெரியப்பா நாட்ராயன் என்பவரது வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு தற்போது சிறப்பு வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.

    படிக்காமல் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெரியப்பா கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த குணாளன் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த நாட்ராயன், ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.
    ×