search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india vs bangladesh"

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    கார்டிப்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இங்கிலாந்தில் நாளை மறு நாள் (30-ந் தேதி) முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த 24-ந் தேதி தொடங்கிய பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) 2 பயிற்சி ஆட்டங்கள் நடக்கிறது. கார்டிப்பில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை. தேவையற்ற ஷாட்களை ஆடி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரவீந்திர ஜடேஜா (54 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (30 ரன்கள்) மட்டுமே சற்று நிலைத்து நின்று ஆடினார்கள்.

    எனவே இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நல்ல நிலைக்கு திரும்பி நம்பிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமானதாகும். மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத இருந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    பிரிஸ்டலில் நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியை சந்திக்கின்றது. இந்திய அணியை வீழ்த்தி இருந்த நியூசிலாந்து அணி தனது வெற்றியை தொடர முயலும். வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. மழையால் இந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. எனவே இந்த ஆட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி தீவிரம் காட்டும்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    பெண்கள் ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வங்காள தேசம் சாம்பியன் பட்டம் வென்றது. #INDWvBANW
    பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிறப்பாக விளையாடி 42 பந்தில் 56 ரன்கள் சேர்த்தார். இவரைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற, இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களம் இறங்கியது. இந்தியாவை வீ்ழ்த்தி முதன்முறையாக ஆசிய கோப்பையை ருசித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் வங்காள தேச வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.



    தொடக்க வீராங்கனைகள் ஷமிமா சுல்தானா 16 ரன்னும், ஆயிஷா ரஹ்மான் 17 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் கொடுத்தனர். அதன்பின் வந்த பர்கானா ஹோக்யூ 11 ரன்னும், நிகர் சுல்தானா 27 ரன்னும் ருமானா அஹமது 23 ரன்களும் எடுக்க வங்காள தேசம் வெற்றியை நோக்கிச் சென்றது.

    வங்காள தேச அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்மன்ப்ரீத் கவுர் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2-வது பந்தில் ருமானா அஹமது பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் ஒரு ரன் அடிக்கப்பட்டது. இதனால் கடைசி மூன்று பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது.



    4-வது பந்தில் கவுர் வீக்கெட் வீழ்த்தினார். இதனால் கடைசி 3 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டது. இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ஜஹனாரா ஆலம் பந்தை எதிர்கொண்டார். கவுர் ஒரு ரன் அல்லது ரன் எடுக்க விடக்கூடாது என்ற நிலையில் பந்தை வீசினார். ஆனால் ஜஹனாரா ஆலம் சிறப்பான விளையாடி இரண்டு ரன்கள் அடித்தார்.

    இதனால் பரபரப்பான ஆட்டத்தில் வங்காள சேதம் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக ஆசியக் கோப்பையை ருசித்துள்ளது.
    ×