search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepak Chahar"

    • தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
    • தீபக் சஹாரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்றது.

    இதில், சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இவரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் தீபக் சஹார் இருக்கும் புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    • வேறொரு ஐபிஎல் அணிக்காக தீபக் சாஹர் களமிறங்க இருக்கிறார்.
    • தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக திகழ்ந்தவர் தீபக் சாஹர். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் முன்னாள் சென்னை அணி வீரர் தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    சி.எஸ்.கே. அணியில் தீபக் சாஹர் மற்றும் எம்.எஸ். டோனி இடையே நல்லுறவு இருந்து வந்தது. களத்தில் இருவரின் சேட்டை சம்பவங்கள் கடந்த ஐபிஎல் சீசனில் மிகவும் வைரல் ஆகி இருந்தது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு வேறொரு ஐபிஎல் அணிக்காக தீபக் சாஹர் களமிறங்க இருக்கிறார்.

    இதையொட்டி, தீபக் சாஹரிடம் எம்.எஸ். டோனியை மிஸ் செய்கிறீர்களா என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த தீபக் சாஹர், எம்.எஸ். டோனியை யார் தான் மிஸ் செய்ய மாட்டார்கள். நிச்சயம் அவர் மிஸ் செய்கிறேன் என்று பதில் அளித்தார். 

    • துஷார் தேஸ்பாண்டேவை 6.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது.
    • தீபக் சஹாரை ரூ.9. 25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் துஷார் தேஸ்பாண்டேவை 6.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது. இவரின் அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    அதுபோல் சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இவரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    • இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
    • என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பதிரானா மற்றும் டோனி ஆகிய ஐந்து வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.

    இந்நிலையில் கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே என்னை ஏலம் எடுக்கும் என்று நான் நம்புகிறேன். கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை. ஆனால் பல முயற்சிகளை செய்து என்னைத் திரும்ப வாங்கினர். இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

    • தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது.
    • தோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன்.

    மகேந்திர சிங் தோனி உடனான நட்பு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியதாவது:-

    அறுவை சிகிச்சைக்கு பின்னர் தோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2 அல்லது 3 சீசன்களில் சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வர வேண்டும். இந்திய வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் தோனியுடன் பேச, நேரம் செலவிட விரும்புவார்கள்.

    தோனி மிகவும் எளிமையான பழக்க வழக்கம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதேசமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதல் வைத்திருப்பார். அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது.


    தோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என்று நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது. கொரோனா நேரத்தில் நாங்கள் இருவரும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி உள்ளோம்.

    களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அவரால் தான் கிடைத்தது. 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு விளையாட 14 ஆட்டங்கள் கொடுத்தார். அதுதான் நான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முக்கிய காரணம்.

    இவ்வாறு தீபக் சாஹர் கூறினார்.

    • ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
    • ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். அவரது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் உடனிருந்து பார்த்து கொள்வதாலும் இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆகாஷ்தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளார். 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    • முதல் 2 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    கவுகாத்தி:

    மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இடம் பெறவில்லை. திருமணம் நடைபெற உள்ளதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் இணைந்துள்ளார்.

    • அவர் இங்கு இல்லை என்றால், அவர் எங்கே இருக்கிறார் என தேடுவோம்.
    • அவர் இருந்தால், அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நினைப்போம்.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. சென்னை அணி கோப்பையை கைப்பற்ற தீபக் சாஹரும் ஒரு காரணமாக திகழ்ந்தார்.



    இந்த ஐபிஎல் தொடரில் தீபக் சாஹரிடம் நிறைய முறை டோனி வம்பிழுப்பது போன்ற வீடியோக்களை காண முடிந்தது. இந்நிலையில் தீபக் சாஹரை போதை மருந்துடன் டோனி ஒப்பிட்டுள்ளார்.


    தீபக் சாஹர் குறித்து டோனி கூறியதாவது:-

    தீபக் சாஹர் ஒரு போதை மருந்து போன்றவர். அவர் இங்கு இல்லை என்றால், அவர் எங்கே இருக்கிறார் என தேடுவோம். அவர் இருந்தால், அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

    வயதுக்கேத்த மெச்சூரிட்டி அவரிடம் இல்லை. அதற்கு நீண்டகாலம் ஆகும். எனது மகள் 8 வயதில் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தை தீபக் 50 வயதில் பெற்று விடுவார். ஓயின் எப்படி நாளாக நாளாக சிறப்பு பெறும் என கூறுவார்களோ, அப்படித்தான் தீபக் சாஹரும். ஆனால் அந்த ஒயினை நான் குடிக்க முடியாது. தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
    ஆக்ரா:

    இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக  திகழ்ந்து வருபவர் தீபக் சாஹர். இவர் வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும், அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக பேட் செய்து  ஆல்ரவுண்டரை போல செயல்பட்டு வருகிறார்.

    இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணிக்கு தேர்வான இவர், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

    இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்கள் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர். 

    இந்நிலையில் தீபக் சஹார், தனது காதலி ஜெயாவை ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இதில் ராகுல் சாஹர் உள்ளிட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் டோனி, விராட் கோலி,  மற்றும் இந்திய அணியின் பிற வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே 5-வது முறையாக வென்று சாதனை படைத்தது.
    • சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 5-வது முறையாக வென்று சாதனை படைத்தது.

    இந்த போட்டி முடிந்த பிறகு டோனியிடம் வீரர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது சிஎஸ்கே வீரரான தீபக் சாஹர் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்தார். உடனே டோனி உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது என்று விலகினார். அப்போது அருகில் இருந்தவரிடம் கேட்ச் பிடிக்க தெரியல இவனுக்கு எப்படி ஆட்டோகிராப் போட முடியும் என fun-ஆக டோனி பேசினார்.

    முடிவில் தீபக் சாஹர் அணிந்திருந்த சிஎஸ்கே ஜெர்சியில் டோனி ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நேற்றைய போட்டியில் சுப்மன் கில் கேட்சை தீபக் சாஹர் மிஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார்.
    • அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    ஐபிஎல் 2023 தொடரில் 5-வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார். அவருடைய காயம் சற்று அதிகமாக இருப்பதால் இன்னும் ஓரிரு வாரங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    இப்படி அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    இதை இனிமேல் இந்த வழியில் பாருங்கள். அதாவது சில வீரர்கள் என்சிஏ'வில் நிரந்தரமாக குடியிருப்பவர்களாக மாறிவிட்டார்கள். விரைவில் அவர்களுக்கு அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் உரிமை கிடைக்கப் போகிறது. அப்போது தான் அவர்களால் எந்த நேரத்திலும் அங்கு செல்ல முடியும். இவ்வாறு தொடர்ந்து நடப்பது நல்லதல்ல. இது நம்ப முடியாததாக இருக்கிறது. அதாவது நீங்கள் அதிகமான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை ஆனாலும் மீண்டும் மீண்டும் காயமடைகிறீர்கள்.

    குறிப்பாக முழுமையாக நீங்கள் 4 போட்டிகளில் கூட விளையாடவில்லை. பின்னர் ஏன் என்சிஏவுக்கு செல்கிறீர்கள்? அதாவது அங்கே இருந்து தான் வந்த நீங்கள் 3 போட்டிகளில் விளையாடியதும் ஏன் மீண்டும் அங்கே செல்கிறீர்கள். எனவே என்சிஏவில் அனைத்து அம்சங்களிலும் தேர்வாகி ஃபிட்டான பின் களமிறங்கி விளையாடுகிறோம் என்பதை உங்களுக்கு நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள். இது இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் பிசிசிஐ மற்றும் பல்வேறு அணிகளின் கேப்டன்களுக்கும் கடுப்பேற்றுகிறது.

    அது மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. கடினமான காயங்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு 4 போட்டிக்கும் ஒரு முறை தசைப்பிடிப்பு காயம் ஏற்படும் போது அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் சில வீரர்கள் வேறு எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அதாவது 3 மணி நேர போட்டியில் வெறும் 4 ஓவர்கள் வீசியதும் காயமடைகிறீர்கள் என்பது அபத்தமானது.

    என்று கூறினார்.

    • மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தின்போது தீபக் சாஹருக்கு தசை நார் முறிவு ஏற்பட்டது.
    • சிஎஸ்கே அணி அடுத்ததாக ஏப்ரல் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக விளையாடவுள்ளது.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணி வீரர்கள் தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தின்போது தீபக் சாஹருக்கு தசை நார் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் முதல் ஓவரிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறினார். அதேபோல், பென் ஸ்டோக்ஸுக்கு பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

    இத்தகவலை சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே அணி அடுத்ததாக ஏப்ரல் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக விளையாடவுள்ளது. அந்தப் போட்டியில் இந்த 2 வீரர்களும் பங்கேற்பார்களா என்பது தெரியவில்லை.

    ×