search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் போட்டிக்கு தயார்- சிஎஸ்கே அணிக்காக பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்
    X

    ஐபிஎல் போட்டிக்கு தயார்- சிஎஸ்கே அணிக்காக பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்

    • 2022-ம் ஆண்டு முழுவதும் இந்தியாவுக்காக 15 ஆட்டங்களில் மட்டுமே சாஹர் விளையாடினார்.
    • காயம் காரணமாக 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலிருந்தும் வெளியேறினார்.

    'Fully fit and preparing well for IPL 2023' - Deepak Chahar on his comeback from twin injury setbacksஇந்திய அணியின் 30 வயதான வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தில் இருந்து மீள்வதற்கு நீண்ட நாள்கள் எடுத்துக் கொண்டார். அவர் கடைசியாக வங்கதேசத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். அங்கு அவர் மூன்று ஓவர்கள் வீசிய பிறகு வெளியேறினார்.

    2022-ம் ஆண்டு முழுவதும், சாஹர் இந்தியாவுக்காக 15 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். மேலும் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

    இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெற்ற சாஹர், ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

    கடந்த ஆண்டு இரண்டு பெரிய காயங்களுடன் போராடிய பிறகு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், மார்ச் 31 -ம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக்குக்கு மீண்டும் வர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய வீரர்களை விளாசியுள்ளனர். அது எப்படி ஐபிஎல் தொடருக்கு மட்டும் அனைத்து வீரர்களும் காயத்தில் இருந்து மீண்டு விடுகிறார்கள் என்று ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா காயம் காரணமாக கடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்பில் இருந்து தற்போது வரை ஓய்வில் இருக்கிறார்.

    Next Story
    ×