search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இருந்தாலும் தொல்லை, இல்லைனாலும் தொல்லை- தீபக் சாஹரை ஓபனாக கலாய்த்த டோனி
    X

    இருந்தாலும் தொல்லை, இல்லைனாலும் தொல்லை- தீபக் சாஹரை ஓபனாக கலாய்த்த டோனி

    • அவர் இங்கு இல்லை என்றால், அவர் எங்கே இருக்கிறார் என தேடுவோம்.
    • அவர் இருந்தால், அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நினைப்போம்.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. சென்னை அணி கோப்பையை கைப்பற்ற தீபக் சாஹரும் ஒரு காரணமாக திகழ்ந்தார்.



    இந்த ஐபிஎல் தொடரில் தீபக் சாஹரிடம் நிறைய முறை டோனி வம்பிழுப்பது போன்ற வீடியோக்களை காண முடிந்தது. இந்நிலையில் தீபக் சாஹரை போதை மருந்துடன் டோனி ஒப்பிட்டுள்ளார்.


    தீபக் சாஹர் குறித்து டோனி கூறியதாவது:-

    தீபக் சாஹர் ஒரு போதை மருந்து போன்றவர். அவர் இங்கு இல்லை என்றால், அவர் எங்கே இருக்கிறார் என தேடுவோம். அவர் இருந்தால், அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

    வயதுக்கேத்த மெச்சூரிட்டி அவரிடம் இல்லை. அதற்கு நீண்டகாலம் ஆகும். எனது மகள் 8 வயதில் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தை தீபக் 50 வயதில் பெற்று விடுவார். ஓயின் எப்படி நாளாக நாளாக சிறப்பு பெறும் என கூறுவார்களோ, அப்படித்தான் தீபக் சாஹரும். ஆனால் அந்த ஒயினை நான் குடிக்க முடியாது. தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×