search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravi Shastri"

    • 2017-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
    • இந்திய அணி 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வரை சென்றது.

    பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்ட பிசிசிஐ விருதுகள், 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடத்தப்பட்டது.

    பிசிசிஐ-ன் சிறந்த விருதான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன் முதலில் 1994-ல் வழங்கப்பட்டது. இது முன்னாள் வீரருக்கு பிசிசிஐ வழங்கும் மிக உயர்ந்த கவுரவமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் ரவி சாஸ்திரி. 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உள்பட 3830 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 206 ரன்கள் அடங்கும். இதே போன்று 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 18 அரைசதங்கள் உள்பட 3108 ரன்களும் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 109 ரன்கள் அடங்கும்.

    அதன் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவர், பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் 2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகினார். அதன் பின் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். 

    • அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ்- அமெரிக்காவில் நடக்கிறது.
    • 20 ஓவர் கிரிக்கெட் வடிவில் இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றதால் இதயமே நொறுங்கி போய்விட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வலிமையான அணியாக இருந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது இன்னும் வேதனையாக உள்ளது. ஆனால் நமது வீரர்கள் அதில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்ல வேண்டும். இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விரைவில் பார்க்கப்போகிறேன். அது 50 ஓவர் உலகக் கோப்பையாக இருப்பது கடினம். ஏனெனில் இதற்கு அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டும்.

    ஆனால் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்- அமெரிக்காவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பட்டம் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. ஏனெனில் 20 ஓவர் கிரிக்கெட் வடிவில் இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கிறது. எனவே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கடுமையான போட்டியாளராக இருக்கும்' என்றார்.

    மேலும் ரவிசாஸ்திரி, 'உலகக் கோப்பையை எளிதில் வென்று விட முடியாது. இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒரு உலகக் கோப்பையை கையில் ஏந்த 6 உலகக் கோப்பை தொடர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. உலகக் கோப்பையை வெல்ல இறுதிப்போட்டிக்குரிய நாள் சிறப்பாக அமைய வேண்டும். இறுதிப்போட்டிக்கு முன்பாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படாது' என்றும் குறிப்பிட்டார்.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
    • பிரதமர் மோடி இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமுக்குச் சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

    இதற்கிடையே, போட்டியை நேரில் காண வந்த பிரதமர் மோடி இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமுக்குச் சென்றார். அங்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.

    இந்நிலையில், பிரதமர் மோடி டிரஸ்சிங் ரூம் சென்று பார்வையிட்டது வீரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும் என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரஸ்சிங் ரூம் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்திருப்பதாலும், கிரிக்கெட் வீரராக இருந்து பல ஆண்டுகளாக இந்தியாவின் பயிற்சியாளராக 7 ஆண்டுக்கும் மேலாக அந்த டிரஸ்சிங் ரூமில் இருப்பதாலும் இது ஒரு சிறந்த விஷயம் என்று நினைக்கிறேன்.

    நாட்டின் பிரதமரைப் போன்ற ஒருவர் டிரஸ்சிங் ரூமுக்கு வந்து பார்வையிட்டால், அது மிகப்பெரிய ஒன்று. ஏனெனில் அது வீரர்களின் உற்சாகத்தை உயர்த்தும். ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும்போது டிரஸ்ஸிங் ரூமுக்குள் செல்வது சிறப்பு. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்ததைப் போல என்ன உணர்ந்திருப்பேன் என்று எனக்குத் தெரியும் என குறிப்பிட்டார்.

    • உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
    • இதில் பலம் வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் பலம் வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்தியா உலகக் கோப்பை வெல்ல அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியா உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:

    அவர்கள் சொந்த மண்ணில் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்கள். மிகவும் அனுபவம் வாய்ந்த அணி என்பதால் ஆர்வத்தில் புதிதாக எதையும் செய்ய தேவையில்லை.

    உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பொறுத்தவரை யார் சிறப்பாக அழுத்தம் மற்றும் பிரஷரை கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.

    என்னைப் பொறுத்தவரை இந்திய அணி ஒரு வீரரையோ அல்லது இரண்டு வீரர்களையோ நம்பி இல்லை. இந்திய அணியை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் 8 முதல் 9 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதுதான் இந்திய அணியின் சிறப்பு.

    ஆஸ்திரேலியா அணியை போல் அல்லாமல் இந்திய அணி யாரையும் நம்பியும் இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என தெரிவித்தார்.

    • நாளைய போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
    • உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக ரவி சாஸ்திரி மற்றும் தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார்கள்.

    இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி போல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிமிக்ரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 18 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் 2-வது இடம் முறையே இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அடுத்தடுத்து உள்ளனர்.

    நாளை முதல் இடத்துக்காக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக ரவி சாஸ்திரி மற்றும் தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடும்போது மிரட்டலாக ரவி சாஸ்திரி கமெண்ட் கொடுப்பார். அதனை சுட்டிக்காட்டி தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மிமிக்ரி செய்துள்ளார்.

    இந்த வீடியோ உலகக் கோப்பை கிரிக்கெட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. 



    • ஒருவர் வலதுகை பேட்ஸ்மேனா அல்லது இடக்கை பேட்ஸ்மேனா என்பது முக்கியமே அல்ல.
    • மூன்று இடக்கை ஆட்டக்காரர்கள் வேண்டும் என்ற விவாதம் முற்றிலும் பயனற்ற ஒரு சிந்தனை.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டாப்-7 பேட்மேன்களில் குறைந்தது 3 இடக்கை ஆட்டக்காரர்கள் இடம் பெற வேண்டியது அவசியம் என்று சமீபத்தில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

    ரவி சாஸ்திரியின் யோசனைக்கு இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கம்பீர் கூறுகையில், 'ஒருவர் வலதுகை பேட்ஸ்மேனா அல்லது இடக்கை பேட்ஸ்மேனா என்பது முக்கியமே அல்ல. மூன்று இடக்கை ஆட்டக்காரர்கள் வேண்டும் என்ற விவாதம் முற்றிலும் பயனற்ற ஒரு சிந்தனை. நீங்கள் விளையாடுபவர்களின் தரத்தை தான் பார்க்க வேண்டும். ஒரு நல்ல வீரர் இடக்கை அல்லது வலக்கை எதுவாக இருந்தாலும் எல்லா சூழலிலும் சிறப்பாக ஆடுவார்.' என்றார்.

    • சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகுடம் சூடுவதற்கு வாய்ப்பு அதிகம்.
    • வலுமிக்க அணியாக களம் இறக்கும் போது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் இந்தியாவும் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும்.

    மும்பை:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அதிகாரபூர்வ அட்டவணை மும்பையில் நாளை நடக்கும் ஐ.சி.சி. நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.

    உலகக் கோப்பை போட்டியில் எந்த மாதிரியான இந்திய அணி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகுடம் சூடுவதற்கு வாய்ப்பு அதிகம். ஆனால் சரியான கலவையில் அனுபவமும், இளமையும் கொண்ட ஒரு அணியை உருவாக்க வேண்டும். விரும்பிய வீரர்களை எடுப்பதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. முழுமையான, வலுமிக்க அணியாக களம் இறக்கும் போது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் இந்தியாவும் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும்.

    இந்திய அணியின் டாப்-6 வரிசை பேட்ஸ்மேன்களில் குறைந்தது இருவர் இடக்கை ஆட்டக்காரராக இருக்க வேண்டும். அப்போது தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அணியின் கலவையும் கச்சிதமாக அமையும். கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வரும் இளம் இடக்கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விளையாட முடியாத சூழலில் இருக்கிறார்.

    ஆனாலும் இந்தியாவில் இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்களால் எந்த சீனியர் வீரரின் இடத்தையும் நிரப்ப முடியும். இன்னும் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர்.

    ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கலக்கிய சாய் சுதர்சன், நேஹல் வதோரா ஆகியோரையும் சொல்லலாம். இப்போது முன்னணி வீரர்கள் சிலர் காயத்தில் உள்ளனர். அதனால் உலகக் கோப்பை போட்டிக்கான பட்டியலில் 15-20 வீரர்களை நாம் வைத்திருக்க வேண்டும். காயத்தில் சிக்கிய வீரர்கள் திரும்ப முடியாமல் போனால் மாற்று வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்.

    சஞ்சு சாம்சன் ஒரு மேட்ச் வின்னர். உண்மையிலேயே தன்னுடைய முழு திறமையையும் அவர் இன்னும் உணரவில்லை. சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் போது ரன்வேட்டையில் எந்த சாதனையும் முறியடிக்காமல் முடித்தால் நிச்சயம் ஏமாற்றம் அடைவேன். நான் பயிற்சியாளராக இருந்தபோது ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இடம் பெறமாட்டார்.

    அது எனக்கு வேதனையாக இருக்கும். அதன் பிறகு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இப்போது தொடர்ந்து டெஸ்டிலும் விளையாடுகிறார். அந்த சமயத்தில் ரோகித் சர்மாவை எப்படி தவற விட்டதாக உணர்ந்தேனோ அதே போல் சஞ்சு சாம்சனையும் நினைக்கிறேன்.

    ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதியை வைத்து பார்த்தால் அவரால் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்பது தெளிவாகிறது. ஆனால் வெள்ளைநிறப்பந்துகளில் விளையாடப்படும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பு, உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவர் வசம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், தற்போதைய உலகக் கோப்பை போட்டியில், அணியை ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும். அதில் எந்த கேள்வியும் இல்லை.

    இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    • சமி, சிராஜ் ஆகியோருடன் பும்ரா இருந்தால் வேகப்பந்து வீச்சு கூட்டணி பலமாக இருக்கும்.
    • ஆஸ்திரேலிய பந்து வீச்சு கூட்டணி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

    2013-க்குப்பின் ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இந்த போட்டி இந்திய ரசிகர்ளிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் சமி, சிராஜ் ஆகியோருடன் பும்ரா இருந்தால் வேகப்பந்து வீச்சு கூட்டணி பலமாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய பந்து வீச்சு கூட்டணி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இரு அணிகளின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை பாருங்கள். அதில் யார் சிறந்ததை கொண்டிருக்கிறார்கள்? ஒருவேளை பும்ரா இருந்தால் ஷமி, சிராஜ் ஆகியோரை கொண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு சமமாக இருக்கிறது என்று நான் சொல்வேன். ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவை நீங்கள் பார்க்கும் போது ஹேசல்வுட் காயத்தால் வெளியேறினாலும் கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இருக்கிறார்கள்.


    மேலும் ஹேசல்வுட்க்கு பதிலாக சேர்க்கப்பட்ட மைக்கேல் நீசர் சமீபத்திய கவுண்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஸ்காட் போலாண்ட் தான் சிறப்பான புள்ளி விவரங்களை வைத்துள்ளார். குறிப்பாக சமீபத்திய ஆஸ்திரேலிய தொடர்களில் பிட்ச்சில் லேசான உதவி கிடைத்தால் அவர் மற்றவர்களை காட்டிலும் ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த பவுலராக செயல்படும் தன்மையை கொண்டதை நாம் பார்த்தோம். எனவே அவர் நிச்சயமாக ஹேசல்வுட் இடத்தை நிரப்புவார்.

    என்று ரவிசாஸ்திரி கூறினார்.

    • கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.
    • வானிலைக்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது.

    டெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார்இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும், அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பார்க்கும்போது கடந்த முறை இறுதிப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்வது முக்கியது. கடந்த முறை சவுதாம்டனில் வானிலை மிகவும் முக்கிய பங்காற்றியது.

    ஆகையால், அதற்கு ஏற்றார்போல் நான் 12 வீரர்களை தேர்வு செய்கிறேன். எனது 12 வீரர்கள் பட்டியல் மிகவும் தெளிவானது. அதில், ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, அடுத்த வீரர்களில் கேஎஸ் பரத்தா அல்லது இஷான் கிஷனா என்பதில் எதிர் அணி 2 சுழப்பந்து வீச்சாளர்களுடன் சென்றால் நான் கேஎஸ் பரத்தை சேர்ப்பேன்.

    ஆனால், எதிர் அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடினால் நான் இஷான் கிஷனை தேர்வு செய்வேன். அடுத்து ஜடேஜா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், அஸ்வின், உமேஷ் ஆகியோர் என் தேர்வு செய்யும் வீரர்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    • 11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது.
    • என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர்.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறாத நிலையில், இன்று விராட் கோலி சிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இங்கிலாந்து புறப்பட்டு விட்டனர்.

    இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார். அந்த அணியில் அஸ்வின், புஜாராவுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

    அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜடேஜா, அலேக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், முகமது ஷமி.

    11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால், அஸ்வின் தலைசிறந்த உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர். அதேபோல் ஹசில்வுட், புஜாராவும் மிரட்டக் கூடியவர்கள். ஆகவே, அது எளிதானது அல்ல.

    என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர். முகமது ஷமி வின்டேஜே் போன்றவர். அவர் மேலும் மேலும் சிறந்த ஆட்டத்தை பெற்று வருகிறார். நாம் ஐ.பி.எல். போட்டியில் அதை பார்த்திருப்போம். இதனால் அவருக்கு அணியில் இடம் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

    • அவர்கள் மீண்டும் அடுத்த முறை சந்திக்கும்போது இது மாதிரி வார்த்தகைளால் மோதிவிடக்கூடாது.
    • இருவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை சிறந்த விஷயமாக நான் கருதுகிறேன்.

    புதுடெல்லி:

    கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு என்று சொல்வார்கள். ஆனால் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியும், காம்பீரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

    லக்னோவில் நேற்று முன்தினம் ராயல் சேலஞ்சர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடந்தது. இதில் பெங்களூர் அணி 18 ரன்னில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    இந்தப் போட்டி முடிந்த பிறகு பெங்களூர் அணி வீரர் விராட்கோலியும், லக்னோ அணியின் ஆலோசகருமான காம்பீரும் மோதிக் கொண்டனர். இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    லக்னோ அணி வீரர்கள் கெய்ல்மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், அமித் மிஸ்ரா ஆகியோருடனும் கோலி ஆக்ரோஷத்துடன் நடந்துக் கொண்டார். ஏற்கனவே பெங்களூருவில் நடந்த போட்டியில் காம்பீர் நடந்து கொண்டதற்கு விராட்கோலி பதிலடியாக அப்படி ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. விராட்கோலி லக்னோ அணி வீரர்களையும், காம்பீர் குடும்பத்தினரையும் கெட்ட வார்த்தைகளால் திட்டியதால் காம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காம்பீர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு இருவருக்கும் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விராட் கோலிக்கும், காம்பீருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், டெலிவிசன் வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இருவரும் டெல்லிக்காக ஆடியவர்கள். போதுமான கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். காம்பீர் 2 உலக கோப்பையை வென்றுள்ளார். விராட் கோலி நட்சத்திர வீரர் ஆவார். இருவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை சிறந்த விஷயமாக நான் கருதுகிறேன்.

    யார் அதை செய்தாலும் விரைவில் செய்வது நல்லது. அவர்கள் மீண்டும் அடுத்த முறை சந்திக்கும்போது இது மாதிரி வார்த்தகைளால் மோதிவிடக்கூடாது. இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க நான் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

    • மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார்.
    • அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என ரவி சாஸ்திரி கூறினார்.

    ஐபிஎல் 2023 தொடரில் 5-வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் மும்பைக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் காயம் காரணமாக 1 ஓவர் மட்டுமே வீசி பாதியிலேயே வெளியேறினார். அவருடைய காயம் சற்று அதிகமாக இருப்பதால் இன்னும் ஓரிரு வாரங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    இப்படி அடிக்கடி காயத்தை சந்தித்து பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நீங்கள் பேசாமல் அங்கேயே ஒரு வீடு வாங்கி குடிபெயருங்கள் என ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    இதை இனிமேல் இந்த வழியில் பாருங்கள். அதாவது சில வீரர்கள் என்சிஏ'வில் நிரந்தரமாக குடியிருப்பவர்களாக மாறிவிட்டார்கள். விரைவில் அவர்களுக்கு அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் உரிமை கிடைக்கப் போகிறது. அப்போது தான் அவர்களால் எந்த நேரத்திலும் அங்கு செல்ல முடியும். இவ்வாறு தொடர்ந்து நடப்பது நல்லதல்ல. இது நம்ப முடியாததாக இருக்கிறது. அதாவது நீங்கள் அதிகமான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை ஆனாலும் மீண்டும் மீண்டும் காயமடைகிறீர்கள்.

    குறிப்பாக முழுமையாக நீங்கள் 4 போட்டிகளில் கூட விளையாடவில்லை. பின்னர் ஏன் என்சிஏவுக்கு செல்கிறீர்கள்? அதாவது அங்கே இருந்து தான் வந்த நீங்கள் 3 போட்டிகளில் விளையாடியதும் ஏன் மீண்டும் அங்கே செல்கிறீர்கள். எனவே என்சிஏவில் அனைத்து அம்சங்களிலும் தேர்வாகி ஃபிட்டான பின் களமிறங்கி விளையாடுகிறோம் என்பதை உங்களுக்கு நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள். இது இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் பிசிசிஐ மற்றும் பல்வேறு அணிகளின் கேப்டன்களுக்கும் கடுப்பேற்றுகிறது.

    அது மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. கடினமான காயங்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு 4 போட்டிக்கும் ஒரு முறை தசைப்பிடிப்பு காயம் ஏற்படும் போது அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் சில வீரர்கள் வேறு எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அதாவது 3 மணி நேர போட்டியில் வெறும் 4 ஓவர்கள் வீசியதும் காயமடைகிறீர்கள் என்பது அபத்தமானது.

    என்று கூறினார்.

    ×