என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து பயிற்சியாளர்"

    • ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்தது. 3 போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது. இதனால் தலைமை பயிற்சியாளரை மாற்ற பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் வெளியாகியது. முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலரும் மெக்கல்லமை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார். அவர் 2022 முதல் இங்கிலாந்து பயிற்சியாளராக உள்ளார். 2024-ல் அனைத்து வடிவங்களுக்கும் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் 2027 வரை ஒப்பந்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார்.
    • ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்தது. 3 போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார். அவர் 2022 முதல் இங்கிலாந்து பயிற்சியாளராக உள்ளார். 2024-ல் அனைத்து வடிவங்களுக்கும் பொறுப்பேற்றார். 2027 வரை ஒப்பந்தம் உள்ளது, ஆனால் அவரது எதிர்காலம் குறித்து உறுதியற்ற நிலை நிலவுகிறது.

    அதற்கு முக்கிய காரணமாக சமீபத்திய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது.

    மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் யோசனை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிரெண்டன் மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும்.


    ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பதை கச்சிதமாக தெரிந்த ஒருவரை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலம், பலவீனம், திட்டங்கள், மனம் ஆகியவற்றைத் அறிந்து, அதிலிருந்து எப்படி உங்களால் சாதகத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்த முடியும்? எனத் தெரிந்தவர் அவர்தான் என பனேசர் கூறினார். 

    • சர்வதேச பயிற்சியாளர் பணிக்கு அப்போது நான் தயாராக இல்லை.
    • நான் கிரிக்கெட்டில் அதிக காலம் பயணம் செய்து விட்டேன்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெக்கல்லம்- பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி 14 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தன்னை அணுகியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரொபர்ட் கியிடம் இருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தது. ஆனால் சர்வதேச பயிற்சியாளர் பணிக்கு அப்போது நான் தயாராக இல்லை. நான் கிரிக்கெட்டில் அதிக பயணம் செய்து விட்டேன். இப்போது என் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க தொடங்கி இருக்கிறேன். இந்த நேரத்தில் இதிலிருந்து விலகி இருக்க விரும்பவில்லை.

    மெக்கல்லத்துக்கும் குடும்பம் இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்து கொண்ட இது போன்ற பணிகளை செய்வது எனக்கு சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×