என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஷப் பண்ட்"

    • ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
    • விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு எம்எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிந்தது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி சாதனை படைத்தது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இதற்காக ராஞ்சி வந்த இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம் எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.

    அதற்காக 3 பேரும் நேற்று இரவு தோனி வீட்டுக்கு சென்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    3 பேரும் தோனி வீட்டிற்குள் சென்றது மற்றும் வெளி வந்த புகைப்படம் மற்றும் வீடியோ மட்டுமே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது குறித்தும் அவர்கள் விருந்தில் என்ன சாப்பிட்டார்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்களா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் தோனி, கோலி, ரிஷப் பண்ட் ஆகிய 3 பேரும் சாப்பிடுவது போன்ற AI புகைப்படத்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்திற்கு வெறுப்பவர்கள் மட்டுமே இதை AI என கூறுவார்கள் எனவும் தலைப்பிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
    • இந்த முறை அவர்களின் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் நாட்டு மக்களிடம் 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு அணியாக நாங்கள் எப்போதும் சிறப்பாக செயல்படவும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும் விரும்புகிறோம்.

    இந்த முறை அவர்களின் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டு உங்களை கற்றுக்கொள்ளவும், மாற்றியமைக்கவும், வளரவும் கற்றுக்கொடுக்கிறது. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்கள் வாழ்வின் மிகப்பெரிய மரியாதை.

    ஒரு வலுவான அணியாக கம்பேக் கொடுக்க நாங்கள் கடினமாக உழைப்போம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி.

    என ரிஷப் பண்ட் கூறினார்.

    • கிரிக்கெட் போட்டியை ஒரு அணியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    • இனி நாங்கள் தவறிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவோம்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, இந்த வெற்றியால் தொடரை 2-0 என வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்த நிலையில் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது தொடர்பாக இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    இது ஏமாற்றமளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இதில் எதிரணிக்கு நாம் பெருமை சேர்க்க வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் தொடரில் ஆதிக்கம் செலுத்தினர். எங்கள் மனநிலையில் நாங்கள் தெளிவாக இல்லை. எதிர்காலத்தில், நாங்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக மாறுவோம்.

    கிரிக்கெட் போட்டியை ஒரு அணியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் அதைச் செய்யவில்லை. அது முழு தொடரை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது. எங்கள் சொந்த திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதை தான் இந்த தொடரிலிருந்து நாங்கள் எடுத்துக்கொள்வோம். இனி நாங்கள் தவறிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவோம் என பண்ட் கூறினார். 

    • முதல் இன்னிங்சில் யான்சென் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 201 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    முக்கியமாக ஷார்ட் பந்து யுக்தி மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார். இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்கள் எடுத்த நிலையில் யான்சென் பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்த போது எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

    இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஷாட் செலக்ஷன் குறித்து ஆச்சரியப்படுகிறீர்களா? என்ற கேள்வி யான்செனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு யான்சென் "எல்லாம் விசயங்களும் நாம் நினைத்த வழியில் செல்லாது. ரிஷப் பண்ட் பந்தை கேலரிக்கு பறக்க விட்டிருந்தால் அல்லது எனது தலைக்கு மேல் தூக்கி அடித்திருந்தால், இந்த உரையாடல் வேறுமாதிரி இருந்திருக்கும்.

    நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், கொல்கத்தா போன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில பிட்ச் ஆகி பேட்ஸ்மேனை நோக்கி வரவில்லை. இதனால் நாங்கள் வேறு திட்டத்தை தேட வேண்டியிருந்தது. துருவ் ஜுரலை பவுன்சர் மூலம் வெளியேற்றிய பிறகு, ஓ.கே. கூல், இது எவ்வளவு தூரம் செல்கிறது பார்ப்போம் என்று நாங்கள் சொன்னோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    பேட்டிங் செய்வதற்கு சிறந்த ஆடுகளமாக உள்ளது. நல்ல வேகம், நல்ல பவுன்ஸ் உள்ளது. நீங்கள் ஷார்ட் பந்துகளை சிறப்பாக விளையாடினால், உங்களால் ரன்கள் குவிக்க இயலும். நீங்கள் சிறப்பாக பந்து வீசினால், உங்களால் விக்கெட் வீழ்த்த இயலும்" என்றார்.

    • சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், காயம் காரணமாக தன் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து கில் விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரவது ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    அதே சமயம் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வர வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. அண்மைய காலங்களில் பண்ட் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால் கேப்டன் வாய்ப்பு கேஎல் ராகுளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு அதிகப்பமுள்ளதாக கூறப்படுகிறது.

    தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக பிசிசிஐ நாளை மும்பையில் தேர்வுக் குழு கூட்டத்தை நடத்தவுள்ளது. அக்கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பண்ட் செயல்படுகிறார்.

    கவுகாத்தி:

    இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    2008 -2014 ஆண்டுகளில் 60 டெஸ்ட் போட்டிகளுக்கு தோனி கேப்டனாக இருந்துள்ளார். 2022-ல் கே.எல்.ராகுல் 3 போட்டிகளை வழிநடத்தினாலும், அவற்றிலும் ரிஷப் பண்ட், கீப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார்.

    கவுகாத்தி:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கொல்கத்தாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சுப்மன் கில் காயமடைந்தார்.
    • இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

    தென் ஆப்பிரிக்கா அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இதில் முதலில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்து கில் விலகி உள்ளார். இதனால் ரிஷப் பண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கில்லுக்கு ஏற்பட்ட காயம் சரியாகி வருவதாக மருத்துவர்கள் கூறினாலும் அவருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி இடம் பெற மாட்டார்கள் என கூறி வந்த நிலையில் அவர்கள் இந்த தொடரில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ரிஷப் பண்ட் 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது.

    முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய வாஷிங்டன் சுந்தர் 29 ரன்னிலும் கேஎல் ராகுல் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கில் கழுத்து வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

    இதனையடுத்து ரிஷப் பண்ட், ஜடேஜா ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். இதில் ரிஷப் பண்ட் தனது பாணியில் அதிரடியாக விளையாடினார். அவர் 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.

    இரண்டு சிக்சர்கள் விளாசியதன் மூலம் முன்னாள் இந்திய வீரர் சேவாக்கின் (90) சாதனையை ரிஷ்ப பண்ட் (91) முறியடித்துள்ளார்.

    இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:-

    1. ரிஷப் பந்த் (91 சிக்சர்)

    2. வீரேந்திர சேவாக் (90 சிக்சர்)

    3. ரோஹித் சர்மா (88 சிக்சர்)

    4. ரவீந்திர ஜடேஜா (80 சிக்சர்)

    5. எம்.எஸ். தோனி (78 சிக்சர்)

    • தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

    இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 255 ரன்களிலும், தென்ஆப்பிரிக்கா 221 ரன்களிலும் ஆட்டமிழந்தன.

    இதனைத்தொடர்ந்து 34 ரன்கள் முன்னிலையில் இந்தியா 'ஏ' 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 'ஏ' 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 26 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.

    இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என தனது ரன் கணக்கை தொடங்கினார். இருந்த போதிலும், வேகப்பந்து வீச்சாளர் டிஷெபோ மொரேகி பந்தில் ரிஷப் பண்ட் அடிக்கடி அடி வாங்கினார். குறிப்பாக மூன்று முறை உடல் மற்றும் ஹெல்மேட்டை பந்து பலமாக தாக்கியது.

    இருந்தாலும் தொடர்ந்து விளையாட முடிவு செய்தார். ஆனால் ஒவ்வொரு பந்தையும் சந்திக்கும்போது வலி ஏற்படுவதுபோல் உடல்களை அசைத்தார். இதனால் பயிற்சியாளர் மற்றும் பிசியோ ஆகியோர் இதற்கு மேல் களத்தில் நின்றால் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக அவரை வெளியேறும்படி வலியுறுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் களத்தில் இருந்து வெளியேறினார். இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் 22-ந்தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து, ரிஷப் பண்ட் கால் பாதத்தை பலமாக தாக்கியது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் இந்தியா 'ஏ' அணியில் இடம் பிடித்தார்.

    • இங்கிலாந்து தொடரின்போது ரிஷப் பண்ட்-க்கு காயம் ஏற்பட்டது.
    • விக்கெட் கீப்பருடன், துணைக் கேப்டன் பதவியையும் சேர்ந்து கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுப்மன் கில் தலைமை தாங்க, ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு இங்கிலாந்து தொடரின்போது காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீண்டதால், அணியிடம் இடம் கிடைத்துள்ளது. அத்துடன் துணைக்கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆகாஷ் தீப்பும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த அணி விவரம்:-

    சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது.

    • தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
    • துணை கேப்டனாக தமிழக வீரர் சாய் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மும்பை:

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி நவம்பர் மாதம் 14-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    இந்த தொடருக்கு தயாராகும் விதமாக தென் ஆப்பிரிக்கா ஏ அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் 4 நாள் டெஸ்ட் போட்டி அக்டோபர் 30-ம் தேதி தொடங்குகிறது. 2-வது நான்கு நாள் டெஸ்ட் போட்டி நவம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாத ரிஷப் பண்ட், தற்போது மீண்டும் திரும்பி இருக்கிறார். இந்த அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கபட்டுள்ளார். இந்த இந்திய ஏ அணியில் சாய் சுதர்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதன் மூலம் அவர் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார்.

    முதல் நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணி:-

    ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), தேவதத் படிக்கல், ரஜத் பட்டிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியன், மனவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரண்ஷ் ஜெயின், குர்னூர் பிரார், கலீல் அகமது.

    2-வது நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணி:-

    ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), தேவதத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியன், மனவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

    ×